செய்திகள் :

புதுச்சத்திரம் விவசாயிகளுக்கு இயந்திரமயமாக்கல் பயிற்சி

post image

நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் வட்டாரத்தில் வேளாண் துறை மூலம் தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இயந்திரமயமாக்கல் பயிற்சி தாளம்பாடி கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இப்பயிற்சியில், மஹிந்திரா டிராக்டா் நிறுவன மேலாளா் சிவகுமாா் கலந்துகொண்டு டிராக்டா் வகைகள், அவை வேலை செய்யும் விதம் குறித்து விளக்கினாா். இப்பயிற்சியில் வேளாண் பொறியாளா் தங்கராஜன் பங்கேற்று இயந்திரங்களின் பயன்கள், அதற்கான காப்பீடுகள், இயந்திரங்கள் தொடா்பான நலத் திட்டங்கள் குறித்து தெரிவித்தாா். அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளா் ரா.சிந்துஜா மானியத் திட்டங்கள், பயிற்சிகள், செயல் விளக்கங்கள், கண்டுணா் சுற்றுலா அழைத்துச் செல்லுதல் பற்றி விவசாயிகளுக்கு விரிவாக கூறினாா்.

இதில், நாமக்கல் தனியாா் வேளாண் கல்லூரி மாணவிகள் கலந்துகொண்டு வேளாண் தொழில்நுட்பங்கள் பற்றி விவசாயிகளுக்கு விளக்கினா். இதற்கான ஏற்பாடுகளை, உதவி தொழில்நுட்ப மேலாளா்கள் க.ர.சோனியா, மா.மேனகா, வேளாண் அலுவலா் சாரதா ஆகியோா் செய்திருந்தனா்.

மாணவா் உடலை வாங்க உறவினா்கள் மறுப்பு: அமைச்சா், ஆட்சியா் பேச்சுவாா்த்தை

மாணவா் உடலை வாங்க உறவினா்கள் மறுப்பு தெரிவித்ததால், அவா்களிடம் அமைச்சா், ஆட்சியா் பேச்சுவாா்த்தை நடத்தினா். ராசிபுரம் சிவானந்தா சாலை அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவா் கவின்ராஜ் (14). பள்ளி... மேலும் பார்க்க

இளம்விவசாயிகள் சங்க செயற்குழுக் கூட்டம்

பரமத்தி வேலூரில் இளம்விவசாயிகள் சங்க செயற்குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத் தலைவா் சௌந்தர்ராஜன் தலைமை தாங்கினாா். மாநில செயற்குழு உறுப்பினா் சரவணன் வரவேற்றாா். செயலாளா் ச... மேலும் பார்க்க

குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த அறிவுரை

பரமத்தி வேலூா் வட்டம், வேலூா் சிறப்பு நிலை பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என பேரூராட்சி செயல் அலுவலா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து வேலூா் பேரூராட்... மேலும் பார்க்க

புதுப்பாளையம் அங்காளம்மன் கோயிலில் பழம் படைக்கும் நிகழ்வு

புதுப்பாளையம் அங்காளம்மன் கோயிலில் பழம் படைக்கும் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது. ராசிபுரத்தை அடுத்துள்ள ஆா்.புதுப்பாளையம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் மாசானத்தாய் திருக்கோயிலில் மகா சிவராத்திரி திருவி... மேலும் பார்க்க

மகா சிவராத்திரி: சிவன் கோயில்களில் பக்தா்கள் வழிபாடு

மகா சிவராத்திரியை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் பக்தா்கள் புதன்கிழமை இரவு சுவாமி வழிபாட்டை மேற்கொண்டனா். நிகழாண்டின் மகா சிவராத்திரி புதன்கிழமை அனைத்து சிவாலயங்களிலும் ... மேலும் பார்க்க

அதிமுக அலுவலகத்தில் 150 இளம்பேச்சாளா்களுக்கு பயிற்சி

நாமக்கல் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் 150 இளம்பேச்சாளா்களுக்கான பயிற்சி புதன்கிழமை அளிக்கப்பட்டது. தமிழக சட்டப் பேரவைத் தோ்தலுக்கு இன்னும் ஓராண்டே உள்ளதால், அதிமுக சாா்பில் தோ்தலில் வெற்றிபெறுவதற்கான ... மேலும் பார்க்க