செய்திகள் :

புதுச்சேரி: தவெக பொதுகூட்டத்துக்கு துப்பாக்கியுடன் வந்த நபர்; திடுக்கிட்ட போலீஸ் - என்ன நடந்தது?

post image

புதுச்சேரி, உப்பளம் துறைமுக வளாகத்தில் இன்று தவெக பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. பொதுக்கூட்டத்துக்கு இன்று காலை 7.30 மணி முதல் தொண்டர்கள் வர தொடங்கினர். அவர்களை போலீஸார் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்து, கியூ ஆர் கோடு பாஸ் பரிசோதனை செய்து அனுமதித்தனர். அப்படி கூட்டத்துக்கு வந்திருந்த ஒருவரை சோதனை செய்தபோது, அவரிடம் துப்பாக்கி இருந்தது. அதைக் கண்டு போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். அந்த இடத்தில் பரபரப்பும் ஏற்பட்டது.

இது தொடர்பாக அந்த நபரிடம் விசாரித்தபோது, தன்னுடைய துப்பாக்கிக்கு லைசென்ஸ் இருப்பதாகக் கூறி, அதை போலீஸாரிடம் காண்பித்திருக்கிறார்.

ஆனால் போலீஸார், `தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு புதுவையில் அனுமதியில்லை. பொதுக்கூட்டத்துக்கு ஏன் துப்பாக்கி எடுத்து வந்தீர்கள்?' என கேள்வி எழுப்பினர். மேலும் அவரிடம் விசாரணை நடத்த ஓதியஞ்சாலை காவல் நிலையத்துக்கு அந்த நபரை அழைத்துச் சென்றனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த டேவிட் என்பதும், மத்திய சி.ஆர்.பி.எஃப் படையில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர் என்பதும் தெரியவந்தது.

மேலும், டேவிட் தற்போது த.வெ.க-வின் சிவகங்கை கிழக்கு மாவட்டச் செயலாளர் டாக்டர் பிரபுவின் துப்பாக்கி ஏந்திய பாதுகாவலராக பணியில் உள்ளார்.

டாக்டர் பிரபுவின் பாதுகாப்புக்கு, அரசு அனுமதியுடன் 2 பேர் துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதில் ஒருவர்தான் டேவிட் என்பதும், பிரபு புதுவை பொதுக்கூட்டத்துக்கு வந்ததால் அவரின் பாதுகாப்புக்காக உடன் வந்ததும் தெரியவந்தது.

இந்தச் சம்பவம் காரணமாக அங்கு சிறிது நேரம் பதற்றம் நிலவியது.

இந்திய அரிசிகளுக்கு வரியை அதிகரிக்கிறாரா ட்ரம்ப்? இதில் பாதிக்கப்பட போவதென்னவோ அமெரிக்காதான்

இந்தியா உடனான பேச்சுவார்த்தை நன்றாக சென்றுகொண்டிருக்கிறது... இந்திய பிரதமர் மோடி என் நல்ல நண்பர்... இந்தியா உடனான விரிசல் தற்காலிகமானது தான்... என்று கடந்த செப்டம்பர் மாதம் முதல் தொடர்ந்து அமெரிக்க அத... மேலும் பார்க்க

``புதுச்சேரி அரசைப் பார்த்து திமுக அரசு கத்துக்கணும்" - த.வெ.க தலைவர் விஜய் தாக்கு

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், கரூர் சம்பவத்துக்குப் பிறகு முதல்முறையாக பொதுவெளியில் புதுச்சேரியில் இன்று மக்களைச் சந்தித்தார்.புதுச்சேரி அரசால் 5,000 பேருக்கு மட்டும் அனுமதி கொடுக்கப்பட்ட பொத... மேலும் பார்க்க

Amit Shah: "தயாராக இருங்கள் ஸ்டாலின்..!" - திமுகவுக்கு அமித் ஷா நேரடி சவால்

அகமதாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, திமுக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள் அடுத்த ஆண்டில் பீகாரைப் போலவே தோல்வியடையும் என சவால் விடுத்திருக்கிறா... மேலும் பார்க்க

புதுச்சேரி: ``உங்களால நிறைய பேர் இறந்தாங்க" - த.வெ.க நிர்வாகியை எச்சரித்த காவல்துறை பெண் அதிகாரி

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கடந்த அக்டோபரில் கரூரில் பிரசாரம் மேற்கொண்டபோது 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த பிறகு வெளியில் பரப்புரை, சுற்றுப்பயணம், பிரசாரம் என எதையும் அவர் மேற்கொள்... மேலும் பார்க்க

`டிடிவி தினகரனுக்கு அண்ணாமலை வைத்த விருந்து?’ - முடித்த கையோடு அவசர டெல்லி பயணம்!

சட்டமன்ற தேர்தலுக்கான களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. அரசியல் களத்தில் ஏராளமான மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. அரசியல் புள்ளிகளின் கட்சி மாற்றம், கூட்டணி மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ... மேலும் பார்க்க