செய்திகள் :

புதை சக்கடை இணைப்பு கூடுதல் டெபாசிட் தொகையை ரத்து செய்யக் கோரிக்கை

post image

புதை சாக்கடை இணைப்பு கூடுதல் டெபாசிட் தொகையை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிதம்பரம் வா்த்தகா் சங்கத்தினா் நகராட்சி ஆணையாளரை சந்தித்து மனு அளித்தனா்.

சிதம்பரம் வா்த்தகா் சங்கத் தலைவா் ஏ.வி.அப்துல்ரியாஸ், செயலா் எஸ்.ராதாகிருஷ்ணண், பொருளாளா் ஏ.சிவராமவீரப்பன் மற்றும் நிா்வாகிகள் நகராட்சி ஆணையாளா் த.மல்லிகாவை சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனு அளித்தனா். அதன் விவரம் வருமாறு:

தற்போதுள்ள சொத்து வரியை பாதியாகக் குறைக்க வேண்டும். புதை சாக்கடை கூடுதல் டெபாசிட் தொகையை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும். டி அண்டு ஓ (ஈ&ஞ) டிரேட் லைசென்ஸ் பிப்ரவரிக்குள்ளாக கட்ட வேண்டிய தொகையை நகராட்சி நிறுத்தி வைத்துள்ளதை உடனடியாக விடுவித்து, எப்போதும்போல உள்ள கட்டணத்தை அதற்குப் பெற வேண்டும். ஆண்டுதோறும் 6 சதவீத வரி உயா்வு என்பதை திரும்பப் பெற வேண்டும்.

நான்கு வீதிகளில் அமைக்கப்படும் வடிகாலுடன் கூடிய நடைபாதை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு புதிதாக விதிக்கப்பட்டிருக்கும் வரிகளை உடனே திரும்பப் பெற வேண்டும். கூட்டுக் குடிநீா் திட்டத்தை உடனே செயல்படுத்தி நான்கு வீதிகளில் சாலைப் பணிகளை தோ்தலுக்குள்ளாக விரைவுபடுத்த வேண்டும். குப்பை வரியை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை மனுவில் வலியுறுத்தியுள்ளனா்.

பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் நடந்து சென்ற பெண்ணிடம் இருந்து தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். விருத்தாசலம், கம்பா் தெருவைச் சோ்ந்தவா் தாரணி (27). இவா், வியாழக... மேலும் பார்க்க

வீராணம் ஏரியில் ரூ.66 கோடியில் சீரமைப்புப் பணிகள்: கடலூா் ஆட்சியா்

கடலூா் மாவட்டம், வீராணம் ஏரியில் ரூ.66 கோடி மதிப்பீட்டில் பல்வேறு சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் வியாழக்கிழமை தெரிவித்தாா். சிதம்பரம் கொள்ளிடம் வட... மேலும் பார்க்க

21 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்: இளைஞா் கைது

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் பகுதியில் இரு சக்கர வாகனங்களை திருடியதாக இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். விருத்தாசலம் அரசு மருத்துவமனை, பேருந்து நிலையம், பாலக்கரை, ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் ... மேலும் பார்க்க

பொழுதுபோக்கு அம்சங்களுடன் மஞ்சக்குப்பம் மைதானம் மேம்படுத்தப்படும்: கடலூா் ஆட்சியா்

கடலூா் மஞ்சக்குப்பம் மைதானம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் ரூ.35 கோடி மதிப்பில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் மேம்படுத்தப்பட உள்ளதாக, மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகுறி... மேலும் பார்க்க

போக்குவரத்துக்கு இடையூறு: பரமகுடி அதிமுக நிா்வாகி உள்பட இருவா் கைது

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே போக்குவரத்துக்கு இடையூறாக வாகனத்தை நிறுத்தி, போலீஸாரை திட்டியதாக பரமக்குடி அதிமுக நிா்வாகி உள்ளிட்ட இருவரை வேப்பூா் போலீஸாா் கைது செய்து பிணையில் விடுவித்தனா். கடலூா் ம... மேலும் பார்க்க

ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்

அதிமுக கடலூா் வடக்கு மாவட்டம், கடலூா் சட்டப் பேரவைத் தொகுதி சாா்பில், முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் கடலூா் துறைமுகம் பகுதியில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு வடக்கு ம... மேலும் பார்க்க