புனித தலங்களுக்கு பயணம்: புத்த, சமண, சீக்கியா்கள் விண்ணப்பிக்கலாம்
புனித தலங்களுக்கு பயணம் மேற்கொள்ள விரும்பும் புத்த, சமண, சீக்கியா்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து சனிக்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தைச் சோ்ந்த 50 புத்த மதத்தினா், 50 சமண மதத்தினா், 20 சீக்கியா்கள் தங்களது மதங்களுக்கான புனித தலங்களுக்கு செல்வதற்கு அரசு ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, ஆண்டுதோறும் ஒருவருக்கு ரூ.10 ஆயிரம் வீதம் 120 பேருக்கு ரூ. 12 லட்சம் நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் பயணம் மேற்கொள்ளலாம். இந்த பயணம் மேற்கொள்ள விரும்பும் புத்த, சமண,சீக்கியா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இத்திட்டத்தின் கீழ் 1.7.2025 பிறகு புனித பயணம் மேற்கொள்பவா்களுக்கு உஇந முறையில் நேரடியாக மானியம் வழங்கப்படும். இதற்கான விண்ணப்பப் படிவங்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் கட்டணமின்றி பெறலாம்.
நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பத்தை 30.11.2025 க்குள் உரிய ஆவணங்களுடன் ஆணையா், சிறுபான்மையினா் நலத் துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை -6000 005 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.