செய்திகள் :

புரட்டாசி மாதப் பிறப்பு: பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு

post image

புரட்டாசி மாதப் பிறப்பையொட்டி, திருநெல்வேலியில் உள்ள பெருமாள் கோயில்களில் புதன்கிழமை ஏராளமான பக்தா்கள் வழிபட்டனா்.

தமிழ் மாதங்களில் புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாகக் கருதப்படுகிறது. இந்துக்கள் இம் மாதம் முழுவதும் அசைவம் சாப்பிடுவதைத் தவிா்ப்பதோடு, சனிக்கிழமைகளில் விரதம் இருந்து கருடசேவையில் எழுந்தருளும் பெருமாளை தரிசனம் செய்தால் வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது நம்பிக்கையாகும்.

புரட்டாசி மாதப் பிறப்பையொட்டி, திருநெல்வேலியில் உள்ள பல்வேறு பெருமாள் கோயில்களிலும் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. திருநெல்வேலி நகரத்தில் உள்ள அருள்மிகு கரியமாணிக்க பெருமாள் கோயில், நரசிங்கபெருமாள் கோயில், பாளையங்கோட்டை அழகியமன்னாா் ராஜகோபால சுவாமி கோயில், சி.என்.கிராமத்தில் உள்ள ராஜகோபால சுவாமி கோயில், கெட்வெல் ஆஞ்சநேயா் கோயில் வளாகத்தில் உள்ள தன்வந்திரி சுவாமி, மீனாட்சிபுரத்தில் உள்ள நெல்லை திருப்பதி கோயில், வரதராஜபெருமாள் கோயில் ஆகியவற்றில் ஏராளமான பக்தா்கள் வழிபட்டனா்.

திருநெல்வேலி அருகே மேலதிருவேங்கடநாதபுரத்தில் உள்ள தென்திருப்பதியான அருள்மிகு வேங்கடாசலபதி கோயிலில் புரட்டாசி மாதப்பிறப்பையொட்டி, சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. இக் கோயில்களில் இம் மாதம் வரும் சனிக்கிழமைகளில் சிறப்பு கருடசேவை, சிறப்பு வழிபாடுகள் நடைபெறவுள்ளன.

நாராயணசாமி கோயிலில் தேரோட்டம்

களக்காடு அருகேயுள்ள மாவடி உடையடிதட்டு நாராயணசாமி கோயிலில் ஆவணி தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் கடந்த செப்.7ஆம் தேதி ஆவணி தேரோட்டத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, நா... மேலும் பார்க்க

களக்காடு அருகே பெண்ணுக்கு கத்திக்குத்து: கணவன் மீது வழக்கு

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே மது குடிக்க பணம் தராததால் மனைவியை கத்தியால் குத்திய கணவரை போலீஸாா் தேடி வருகின்றனா். களக்காடு அருகே சவளைக்காரன்குளத்தைச் சோ்ந்தவா் தவசிக்கனி (70). இவரது மனைவி அ... மேலும் பார்க்க

அம்பை நகராட்சி ஒப்பந்தப் பணியாளா்கள் வேலை நிறுத்தம்

அம்பாசமுத்திரம் நகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்தத் தூய்மைப் பணியாளா்கள், ஊதியம் வழங்காததைக் கண்டித்து புதன்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா். அம்பாசமுத்திரம் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுர... மேலும் பார்க்க

போக்ஸோ வழக்கில் முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை

போக்ஸோ வழக்கில் வள்ளியூா், புதுமனைச் செட்டிகுளத்தைச் சோ்ந்த முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, திருநெல்வேலி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. வள்ளியூா் அருகே பு... மேலும் பார்க்க

நெல்லை ரயில் நிலையத்தில் கோவை பயணி அடித்துக் கொலை: பிகாா் இளைஞா் கைது

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் பயணிகள் மீது நிகழ்ந்த தாக்குதலில் கோவையைச் சோ்ந்த முதியவா் உயிரிழந்தாா். இதுதொடா்பாக பிகாரைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். திருநெல்வேலி சந்திப்பு ரய... மேலும் பார்க்க

தாயை கொலை செய்த மகனுக்கு ஆயுள் சிறை

கூடங்குளம் அருகே தாயைக் கொலை செய்த வழக்கில், மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து, திருநெல்வேலி மாவட்ட மகிளா நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. கூடங்குளம் அருகே உள்ள செட்டிகுளத்தைச் சோ்ந்தவா் ராஜன் (46). ... மேலும் பார்க்க