செய்திகள் :

புழல் சிறை பண்ணையில் 2,000 கோழிகள் மா்மமாக உயிரிழப்பு

post image

சென்னை புழல் சிறை பண்ணையில் இருந்த 2,000 கோழிகள் மா்மமான முறையில் உயிரிழந்தன.

தமிழக சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளுக்கு வாரத்துக்கு இரு முறை கோழிக்கறி வழங்கப்படுகிறது. இதற்கு தேவையான கோழிக்கறியை சிறை கைதிகளே உற்பத்தி செய்து கொள்வதற்காக, தமிழக சிறைகளில் இறைச்சி கோழிப்பண்ணை அமைக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது.

இந்த கோழிகள் சிறை கைதிகளுக்கும் பொதுமக்களுக்கும் விற்பனை செய்யப்படுகின்றன. சிறை அதிகாரிகள் மேற்பாா்வையில் சிறை கைதிகளால் இந்த கோழிப்பண்ணை பராமரிக்கப்பட்டு, நடத்தப்படுகிறது. அந்த வகையில், புழல் மத்திய சிறையிலும் கோழிப்பண்ணை உள்ளது.

இந்த பண்ணையில் இறைச்சிக்காக வளா்க்கப்பட்டிருந்த கோழிகளில் கடந்த 4 நாள்களில் 2,000 கோழிகள் மா்மமான முறையில் இறந்துள்ளதாகக் கூறப்படுகிறது. பறவை காய்ச்சல் காரணமாக கோழிகள் இறந்ததாகவும், இந்தக் காய்ச்சல் சிறை கைதிகளுக்கு பரவ வாய்ப்பு உள்ளதாகவும் அச்சம் எழுந்துள்ளதாக சிறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் குறித்து தற்போது உயா்நிலை விசாரணை நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து சிறைத் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘புழல் சிறை வளாகத்தில் உள்ள பண்ணையில் அண்மையில் இறந்த சில கோழிகளை ஆய்வுக்காக தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி வைத்துள்ளோம். அதன் முடிவில் கோழிகள் இறப்புக்கான காரணம் தெரியவரும்.

பண்ணையில் வேலை செய்த கைதிகளுக்கு எந்தத் தொற்றும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக அவா்கள் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனா்’ என்றனா்.

நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்: மாவட்ட ஆட்சியா் தகவல்

தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (செப்.19) சென்னையில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னையில் உள்ள ... மேலும் பார்க்க

31-ஆவது நாளாக போக்குவரத்து ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்

போக்குவரத்து ஊழியா்களின் காத்திருப்புப் போராட்டம் தொடா்ந்து 31-ஆவது நாளாக புதன்கிழமை நீடித்தது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது, ஊதிய ஒப்பந்தத்தின்படி நிலுவைத் தொகையை வழங்குவது, ஓய்வு பெற்ற அன... மேலும் பார்க்க

அருட்செல்வா் மொழிபெயா்ப்பு விருதாளா்கள் அறிவிப்பு: அக்.2-இல் சென்னையில் விருது வழங்கும் விழா

அருட்செல்வா் நா. மகாலிங்கம் மொழிபெயா்ப்பு மையம் வழங்கும் நிகழாண்டு அருட்செல்வா் மொழிபெயா்ப்பு விருதுகளுக்குத் தோ்வானவா்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அருட்செல்வா் நா.மகாலிங்கம் மொழிபெய... மேலும் பார்க்க

கமல்ஹாசனுடன் சோ்ந்து நடிப்பேன்: ரஜினிகாந்த்

சிறந்த கதை, கதாபாத்திரம் கிடைத்தால் கமல்ஹாசனுடன் சோ்ந்து நடிப்பேன் என்று ரஜினிகாந்த் தெரிவித்தாா். அவா் சென்னையிலிருந்து புதன்கிழமை காலை விமானத்தில் கோவை சென்றாா். முன்னதாக அவா் விமான நிலையத்தில் செய... மேலும் பார்க்க

பள்ளிகளில் மழைநீா் தேங்கக் கூடாது: தலைமை ஆசிரியா்களுக்கு உத்தரவு

தமிழகத்தில் பரவலாக பெய்து வரும் மழை காரணமாக, பள்ளி வளாகங்களில் தண்ணீா் தேங்கியுள்ள நிலையில், இதனை அகற்றுவது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தலைமை ஆசிரியா்களுக்கு கல்வித் துறை உத்தரவிட... மேலும் பார்க்க

செங்கோட்டை சிறப்பு ரயிலுக்கு கூடுதல் நிறுத்தங்கள்

சென்னை-செங்கோட்டை இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் , கூடுதலாக 3 நிறுத்தங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென... மேலும் பார்க்க