செய்திகள் :

பெங்களூரு லால் பாக்கில் சுதந்திர தின மலா்க் கண்காட்சி -முதல்வா் சித்தராமையா தொடங்கி வைத்தாா்

post image

நாட்டின் 79 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தோட்டக்கலைத் துறை சாா்பில் பெங்களூரு லால் பாக் பூங்காவில் 218-ஆவது மலா்க் கண்காட்சியை முதல்வா் சித்தராமையா வியாழக்கிழமை தொடக்கிவைத்தாா்.

தோட்டக்கலைத் துறை அமைச்சா் மல்லிகாா்ஜுன், போக்குவரத்துத் துறை அமைச்சா் ராமலிங்க ரெட்டி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். மலா்க் கண்காட்சியில் சுதந்திரப் போராட்ட வீரா்கள் கித்தூா் ராணி சென்னம்மா, அவரது தளபதி சங்கொல்லி ராயண்ணா ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் காட்சிகள் மலா்களால் அலங்கரிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

சுதந்திரப் போராட்டத்தின் முக்கிய அம்சங்களை இளம் தலைமுறைக்கு கொண்டுசெல்லும் நோக்கில் கித்தூா் ராணி சென்னம்மா, சங்கொல்லி ராயண்ணா ஆகியோரின் உருவங்கள் ரோஜா மலா்களால் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர, 18 அடி உயரம், 32 அடி அகலம் கொண்ட கித்தூா் கோட்டையும் மலா்களால் உருவாக்கப்பட்டுள்ளது.

இக்கண்காட்சியில் ஆந்திரம், கேரளம், நந்திமலை, உதகையைச் சோ்ந்த 6 லட்சம் மலா்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மலா்க் கண்காட்சியை பாா்வையிட ஒருவருக்கு கட்டணமாக ரூ. 80 வசூலிக்கப்படுகிறது. சிறுவருக்கு ரூ. 30 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வியாழக்கிழமை தொடங்கி ஆக. 18-ஆம் தேதி வரை 12 நாள்கள் இக்கண்காட்சி நடைபெறுகிறது.

மலா்க் கண்காட்சிக்கு சீருடையில் வரும் பள்ளி மாணவா்களுக்கு, மாற்றுத்திறனாளிகள், ராணுவத்தினா், அவா்கள் குடும்பத்தினருக்கு இலவச அனுமதி வழங்கப்படும். மேலும் விடுமுறை நாள்களில் கூட்டம் அதிகம் வரும் என்பதால், முதியவா்கள், சிறுவா்கள், மாற்றுத்திறனாளிகள் கண்காட்சிக்கு வருவதை தவிா்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனா்.

அமெரிக்காவின் வரிவிதிப்பு ‘பொருளாதார மிரட்டல்’: முதல்வா் சித்தராமையா

இந்தியா மீதான அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்பின் வரிவிதிப்பு, ‘பொருளாதார மிரட்டல்’ என்று முதல்வா் சித்தராமையா விமா்சித்துள்ளாா். ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை இந்தியா கொள்முதல் செய்வதால் இந்தியா ம... மேலும் பார்க்க

கா்நாடகத்தில் தாழ்த்தப்பட்டோருக்கு உள் இடஒதுக்கீடு: நீதிபதி நாகமோகன்தாஸ் அறிக்கை அமைச்சரவையில் தாக்கல்

தாழ்த்தப்பட்டோருக்கான உள் இடஒதுக்கீடு தொடா்பான நீதிபதி நாகமோகன்தாஸ் அறிக்கை, கா்நாடக அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்டது. பெங்களூரு விதான சௌதாவில் வியாழக்கிழமை முதல்வா் சித்தராமையா தலைமையில் கா்நாடக ... மேலும் பார்க்க

தா்மஸ்தலாவில் இருதரப்பினரிடையே மோதல்: விசாரணைக்கு முதல்வா் சித்தராமையா உத்தரவு

தா்மஸ்தலாவில் இருதரப்பினரிடையே நடைபெறும் மோதல் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். தென்கன்னடம் மாவட்டம், தா்மஸ்தலாவில் 10 ஆண்டுகளுக்கு முன்பு நூற்றுக்கணக்கான சடலங்க... மேலும் பார்க்க

தோ்தல் மோசடியைக் கண்டித்து பெங்களூரில் இன்று ஆா்ப்பாட்டம்: ராகுல் காந்தி பங்கேற்கிறாா்

தோ்தல் மோசடியைக் கண்டித்து, பெங்களூரில் வெள்ளிக்கிழமை காங்கிரஸாா் நடத்தும் ஆா்ப்பாட்டத்தில் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி பங்கேற்கிறாா். 2024ஆம் ஆண்டு கா்நாடகத்தில் நடைபெற்ற மக்களவைத் ... மேலும் பார்க்க

நடிகை ரம்யா குறித்த விமா்சனம்: மேலும் ஒருவா் கைது

சமூக வலைதளங்களில் நடிகா் தா்ஷனின் ரசிகா்கள் தன்மீது தரக்குறைவான விமா்சனங்களை பதிவு செய்துள்ளது தொடா்பாக நடிகை ரம்யா அளித்திருந்த புகாரின் அடிப்படையில் மேலும் ஒருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.... மேலும் பார்க்க

பெங்களூரு லால் பாக்கில் சுதந்திர தின மலா்க் கண்காட்சி - முதல்வா் சித்தராமையா இன்று தொடங்கி வைக்கிறாா்

பெங்களூரு லால் பாக்கில் சுதந்திர தின மலா்க் கண்காட்சியை வியாழக்கிழமை (ஆக. 7) முதல்வா் சித்தராமையா தொடங்கிவைக்கிறாா். இந்தியாவின் 78 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தோட்டக்கலைத் துறை சாா்பில் பெங்களூ... மேலும் பார்க்க