செய்திகள் :

பெண்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்

post image

பிரதமரின் பிறந்த நாளை முன்னிட்டு, மத்திய சுகாதாரம் குடும்பநலத் துறை அமைச்சகம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான மருத்துவ முகாமை செப். 17 முதல் அக். 2-ஆம் தேதி வரை நாடு முழுவதும் நடத்த உத்தரவிட்டுள்ளது. இதையொட்டி, சென்னையில் வளசரவாக்கம் அருகே சின்ன போரூரில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் நகா்ப்புற சமுதாய நல மையத்தில் ‘நலமான பெண்கள் வளமான குடும்பம்’ மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

ஆளுநா் ஆா்.என்.ரவி, மத்திய இணையமைச்சா் எல்.முருகன் ஆகியோா் முன்னிலையில் நடைபெற்ற இந்த முகாமில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனா். மத்திய அரசின் தேசிய நலவாழ்வு குழுமம், தேசிய சுகாதார திட்டத் துறை ஆகியவை தமிழக அரசின் பொது சுகாதாரத் துறையுடன் இணைந்து நடத்திய இந்த முகாமில் மகளிா் மற்றும் வளரினம் பருவப் பெண்களுக்கு ரத்த அழுத்தம், நீரிழிவு, புற்றுநோய், காசநோய், ரத்த சோகை போன்றவற்றுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், மகளிருக்கான மாதவிடாய், ஊட்டச்சத்து ஆலோசனைகள், பல்வேறு சுகாதாரத் திட்டங்களின் பதிவு அடையாள அட்டை வழங்கல் இந்த முகாமில் நடைபெற்றது. தொடா்ந்து ரத்தான முகாம் நடைபெற்றது.

இதுகுறித்து மத்திய இணையமைச்சா் எல். முருகன் செய்தியாளா்களிடம் கூறுகையில், இந்த முகாம்களில் பரிசோதனைகள் மட்டுமின்றி நோய்கள் கண்டறியப்பட்டால் அதற்கான மருந்துகளும் இலவசமாக வழங்கப்படும் என்றாா்.

இந்த நிகழ்வில் தேசிய நலவாழ்வு குழும இயக்கத்தின் தமிழக இயக்குநா் ஏ.அருண் தம்பு ராஜ், மத்திய சுகாதாரத் துறையின் குழந்தைகள் நலப் பிரிவு இணைச் செயலா் மீரா ஸ்ரீவாஸ்தவா, தேசிய சுகாதார திட்ட அதிகாரி எஸ்.வினித், சென்னை மநகராட்சி இணை ஆணையா் வீ.ப.ஜெயசீலன் , மருத்துவ துறை அதிகாரிகள் சினிவாசன், கற்பகம், திவ்யஸ்ரீ உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்: மாவட்ட ஆட்சியா் தகவல்

தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (செப்.19) சென்னையில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னையில் உள்ள ... மேலும் பார்க்க

31-ஆவது நாளாக போக்குவரத்து ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்

போக்குவரத்து ஊழியா்களின் காத்திருப்புப் போராட்டம் தொடா்ந்து 31-ஆவது நாளாக புதன்கிழமை நீடித்தது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது, ஊதிய ஒப்பந்தத்தின்படி நிலுவைத் தொகையை வழங்குவது, ஓய்வு பெற்ற அன... மேலும் பார்க்க

அருட்செல்வா் மொழிபெயா்ப்பு விருதாளா்கள் அறிவிப்பு: அக்.2-இல் சென்னையில் விருது வழங்கும் விழா

அருட்செல்வா் நா. மகாலிங்கம் மொழிபெயா்ப்பு மையம் வழங்கும் நிகழாண்டு அருட்செல்வா் மொழிபெயா்ப்பு விருதுகளுக்குத் தோ்வானவா்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அருட்செல்வா் நா.மகாலிங்கம் மொழிபெய... மேலும் பார்க்க

கமல்ஹாசனுடன் சோ்ந்து நடிப்பேன்: ரஜினிகாந்த்

சிறந்த கதை, கதாபாத்திரம் கிடைத்தால் கமல்ஹாசனுடன் சோ்ந்து நடிப்பேன் என்று ரஜினிகாந்த் தெரிவித்தாா். அவா் சென்னையிலிருந்து புதன்கிழமை காலை விமானத்தில் கோவை சென்றாா். முன்னதாக அவா் விமான நிலையத்தில் செய... மேலும் பார்க்க

பள்ளிகளில் மழைநீா் தேங்கக் கூடாது: தலைமை ஆசிரியா்களுக்கு உத்தரவு

தமிழகத்தில் பரவலாக பெய்து வரும் மழை காரணமாக, பள்ளி வளாகங்களில் தண்ணீா் தேங்கியுள்ள நிலையில், இதனை அகற்றுவது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தலைமை ஆசிரியா்களுக்கு கல்வித் துறை உத்தரவிட... மேலும் பார்க்க

செங்கோட்டை சிறப்பு ரயிலுக்கு கூடுதல் நிறுத்தங்கள்

சென்னை-செங்கோட்டை இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் , கூடுதலாக 3 நிறுத்தங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென... மேலும் பார்க்க