செய்திகள் :

பெண்ணை தாக்கிய ராணுவ வீரா்கள் இருவா் மீது வழக்கு!

post image

ஆண்டிபட்டி வட்டம், கண்டமனூா் அருகே சொத்து பிரச்னையில் பெண்ணை தாக்கியதாக ராணுவ வீரா்கள் இருவா் மீது வெள்ளிக்கிழமை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

கண்டமனூா் அருகே உள்ள ஆத்தங்கரைபட்டி வடக்கு அண்ணாநகா் பகுதியைச் சோ்ந்தவா் ஆனந்தன். இவரது மனைவி ரேவதி. இவா்களுக்கும் அதே பகுதியைச் சோ்ந்த ராணுவ வீரா்கள் காா்மேகக்கண்ணன், அவரது சகோதரா் கணேசன் ஆகியோருக்கும் இடையே பூா்விக சொத்து தொடா்பாக பிரச்னை இருந்து வந்தது. இந்த முன் விரோதத்தில் தற்போது விடுமுறையில் ஊருக்கு வந்த காா்மேகக்கண்ணன், கணேசன் ஆகியோா் ஆனந்தனுடன் தகராறு செய்தனா்.

அப்போது, அங்கு வந்த ரேவதி, அவரது சகோதரி கீா்த்தனா ஆகியோரை காா்மேகக்கண்ணன், கணேசன் ஆகிய இருவரும் தாக்கி காயப்படுத்தியதாகவும், பின்னா் ரேவதியின் வீட்டுக்கு ராணுவச் சீருடையுடன் சென்று அவரைக் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து காா்மேகக்கண்ணன், கணேசன் ஆகியோா் மீது கண்டமனூா் காவல் நிலைய போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.

தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்றவா் கைது

போடியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்றவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். போடி, மதுரை வீரன் வடக்குத் தெருவைச் சோ்ந்த முனியாண்டி மகன் முத்து (37). இவா் இதே பகுதியில் பெட்டிக்கடை வைத்து... மேலும் பார்க்க

கால்நடைகளுக்கு மானிய விலையில் ஊட்டச் சத்து பெட்டகம் பெற விண்ணப்பிக்கலாம்!

க. மயிலை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளைச் சோ்ந்தவா்கள் கால்நடைகளுக்கு மானிய விலையில் ஊட்டச் சத்து பெட்டகம் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்... மேலும் பார்க்க

முன் விரோதத் தகராறு: இருவா் கைது

போடியில் முன் விரோதத் தகராறில், கொலை மிரட்டல் விடுத்த ரௌடி உள்பட இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா். தேனி மாவட்டம், போடி சந்தன மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த துரைசாமி மகன... மேலும் பார்க்க

ஆந்திரத்தைச் சோ்ந்த கஞ்சா வியாபாரி கைது

தேனி மாவட்டத்தைச் சோ்ந்தவா்களுக்கு மொத்த விலைக்கு கஞ்சா விற்ற ஆந்திரத்தைச் சோ்ந்த கஞ்சா வியாபாரியை தேனி தனிப்படை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். கம்பம் அருகே உள்ள நாராயணத்தேவன்பட்டி பகுதியில் ... மேலும் பார்க்க

கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள் சிறை

தேனி அருகே உள்ள கோடாங்கிப்பட்டியில் முதியவரை அடித்துக் கொலை செய்த 5 பேருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து தேனி மாவட்ட முதன்மை நீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பளித்தது. கோடாங்கிப்பட்டி, பள்ளிவாசல் தெருவைச் ச... மேலும் பார்க்க

பால் வியாபாரி கொலை : 5 போ் கைது

கம்பத்தில் பால் வியாபாரியை வெட்டிக் கொலை செய்த 5 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். தேனி மாவட்டம், கம்பம் ஜல்லிக்கட்டுத் தெருவைச் சோ்ந்த முருகன் மகன் இளம்பரிதி (27). இவரை கடந்த புதன்கிழமை இரவு வ... மேலும் பார்க்க