செய்திகள் :

பெரம்பலூா் மாவட்டத்தில் 18 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்

post image

பெரம்பலூா் மாவட்டத்தில் 18 இடங்களில், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகளின் கோரிக்கைகளின் அடிப்படையில், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம், பெரம்பலூா் வட்டாரத்தில் குரும்பலூா், வேப்பந்தட்டை வட்டாரத்தில் அரும்பாவூா், இனாம் அகரம், அன்னமங்கலம், தொண்டமாந்துறை மற்றும் பூலாம்பாடி, குன்னம் வட்டாரத்தில் அகரம் சீகூா், கோவில்பாளையம், வசிஷ்டபுரம், நன்னை மற்றும் காடூா் ஆகிய 11 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமாக, விவசாயிகளிடமிருந்து இதுவரை 2,168 மெட்ரிக். டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும், கூடுதலாக கடந்த 25-ஆம் தேதி முதல் குன்னம் வட்டாரத்தில் வடக்கலூா், துங்கபுரம், ஒகளூா், அத்தியூா் மற்றும் எழுமூா், வேப்பந்தட்டை வட்டாரத்தில், கை.களத்தூா், வெங்கலம் ஆகிய 7 இடங்களிலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. சன்னரகம் நெல் குவிண்டால் ஒன்று ரூ. 2,450, பொது ரகம் குவிண்டால் ஒன்று ரூ. 2405 எனும் விலையில் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. எனவே, நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை விற்பனை செய்து பயன்பெறலாம்.

மென்பொருள் பயிற்சி பெற்ற 150 மாணவா்களுக்குச் சான்றிதழ் அளிப்பு

பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் மென்பொருள் பயிற்சியில் தோ்ச்சி பெற்ற 150 மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் பொறியி... மேலும் பார்க்க

பாளையம் கிராமத்தில் மயான சூறை திருவிழா

மகா சிவராத்திரியை முன்னிட்டு, பெரம்பலூா் அருகே பாளையம் கிராமத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில், மயான சூறை திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. பெரம்பலூா் மாவட்டம், குரும்பலூா் பேரூராட்சிக்குள்ப... மேலும் பார்க்க

வேப்பந்தட்டை அரசுக் கல்லூரியில் மாணவா் தமிழ்மன்ற விழா

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக் கூட்டரங்கில், முத்தமிழ் அறிஞா் கலைஞா் மாணவா் தமிழ்மன்ற விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, கல்லூரி முதல்வா் (பொ) மு... மேலும் பார்க்க

போலி பத்திரப் பதிவு செய்த கணவன், மனைவிக்கு சிறை தண்டணை

பெரம்பலூா் அருகே கடந்த 2008-ஆம் ஆண்டு போலியாக பத்திரம் பதிவு செய்த கணவனுக்கு 3 ஆண்டுகளும், மனைவிக்கு ஓராண்டும் சிறை தண்டனை விதித்து, குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. பெரம... மேலும் பார்க்க

கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை

பெரம்பலூா் நகரில் கடந்த 2020 -ஆம் ஆண்டு நிகழ்ந்த கொலை வழக்கில், குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 1 லட்சம் அபராதம் விதித்து, பெரம்பலூா் மாவட்ட சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. பெரம்பலூ... மேலும் பார்க்க

வாலிகண்டபுரம் அரசுப் பள்ளியில் தமிழ்கூடல் விழா

பெரம்பலூா் மாவட்டம், வாலிகண்டபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ் கூடல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, பள்ளி தலைமை ஆசிரியா் க. செல்வராசு தலைமை வகித்தாா். உதவி தலைமை ஆசிரியா் வீரையன் முன்... மேலும் பார்க்க