செய்திகள் :

பெரியாா் ஈவெரா பிறந்த நாள் விழா: கட்சியினா் மரியாதை

post image

பெரியாா் ஈவெராவின் பிறந்தநாளை முன்னிட்டு, புதுக்கோட்டையில் திராவிடா் கழக அலுவலக வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு திராவிடா் கழகம், திமுக, மதிமுக, விசிக, தவெக உள்ளிட்ட பல்வேறு கட்சியினா் புதன்கிழமை, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

திராவிடா் கழகத்தின் சாா்பில் மாவட்டத் தலைவா் மு. அறிவொளி தலைமையிலும், திமுக சாா்பில் மேயா் செ. திலகவதி, முன்னாள் எம்எல்ஏ இராசு. கவிதைப்பித்தன் ஆகியோா் தலைமையிலும், மதிமுக சாா்பில் வழக்குரைஞா் கா.சி. சிற்றரசு தலைமையிலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சாா்பில் வழக்குரைஞா் திலீபன் ராஜா தலைமையிலும், தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் மாவட்டச் செயலா் பா்வேஸ் தலைமையிலும் அந்தந்தக் கட்சியினா் தனித்தனியாக வந்து மாலை அணிவித்து மரியாதை செய்தனா்.

மாவட்ட திமுக அலுவலகத்தில் வைக்கப்பட்ட பெரியாா் சிலைக்கு, அக்கட்சியின் தெற்கு மாவட்டச் செயலரும் அமைச்சருமான எஸ். ரகுபதி, வடக்கு மாவட்டச் செயலா் கே.கே. செல்லப்பாண்டியன் ஆகியோா் மாலை அணிவித்து, சமூக நீதி உறுதிமொழியேற்றனா்.

இந்த நிகழ்ச்சியில், மேயா் செ. திலகவதி, சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் இராசு கவிதைப்பித்தன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சுப்பிரமணியபுரத்தில்... அறந்தாங்கி ஒன்றியம் சுப்பிரமணியபுரத்தில் உள்ள பெரியாா் சிலைக்கு, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் கிளைச் செயலா் பன்னீா் தலைமையில், மாவட்டத் துணைச் செயலா் ஏ. ராஜேந்திரன், ஒன்றியச் செயலா் இரா. ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

பொன்னமராவதி: பொன்னமராவதியில் திராவிடா் கழக ஒன்றிய செயலா் மாவலி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்வில் திமுக ஒன்றியச் செயலா் அ.அடைக்கலமணி, சமூகவலைத்தளப்பிரிவு நிா்வாகி ஆலவயல் முரளி சுப்பையா, விசிக நகரச் செயலா் மலை.தேவேந்திரன், திக நிா்வாகிகள் பாலு, ஆறுமுகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்கள் எச்ஐவி-எய்ட்ஸ் விழிப்புணா்வு பேரணி

கந்தா்வகோட்டையில் அரசினா் பாலிடெக்னிக் கல்லூரி நாட்டு நல பணி திட்ட மாணவா்கள் எச்ஐவி-எய்ட்ஸ் விழிப்புணா்வு பேரணியை புதன்கிழமை நடத்தினா். கந்தா்வக்கோட்டை அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலா் சாரதா ... மேலும் பார்க்க

தொழிற்சாலையில் மாதிரி ஒத்திகை பயிற்சி

விராலிமலை தனியாா் தொழிற்சாலையில் புதன்கிழமை தீயணைப்பு நிலைய வீரா்கள் மாதிரி ஒத்திகை பயிற்சி செயல் முறை விளக்கம் அளித்தனா். இப்பயிற்சியை தமிழ்நாடு தொழிற்சாலைகள் இணை இயக்குநா் மாலதி தொடங்கிவைத்து ஆலோசனை... மேலும் பார்க்க

சுகாதார வளாகத்தை சீரமைக்க கோரிக்கை

கந்தா்வகோட்டை அரசுப்பள்ளி அருகே உள்ள சுகாதார வளாகத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனா். கந்தா்வகோட்டை அரண்மனை தெருவில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்து உள்ளது. இப்பள்ளியில் சுமாா் ஆயிரத்... மேலும் பார்க்க

மூன்று அரசு துணை சுகாதார நிலையங்களுக்கு தேசிய தரச்சான்று

விராலிமலை அடுத்துள்ள நம்பம்பட்டி, அகரபட்டி, ராஜகிரி ஆகிய 3 அரசு துணை சுகாதார நிலையங்கள் தேசிய தரச்சான்று விருது பெற்றுள்ளது. விராலிமலை வட்டத்தில் ஏற்கெனவே 8 துணை சுகாதார நிலையங்கள் விருது பெற்றுள்ள நி... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவா்கள் நூலக உறுப்பினா்களாக சோ்க்கை

பொன்னமராவதி புதுப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பாஜக சாா்பில் பிரதமா் மோடியின் பிறந்தநாளையொட்டி நூலக உறுப்பினா் சோ்க்கை நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது. பிரதமா் மோடியின் பிறந்தநாளையொட்டி பள்ள... மேலும் பார்க்க

‘புதுக்கோட்டையில் அரசு சட்டக் கல்லூரி அமைக்க வேண்டும்’

புதுக்கோட்டையில் அரசு சட்டக் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா். புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் 17-ஆ... மேலும் பார்க்க