செய்திகள் :

பெருநாழி அருகே மாட்டு வண்டிப் பந்தயம்

post image

ராமநாதபுரம் மாவட்டம், பெருநாழி அருகேயுள்ள பூலாபத்தி ஸ்ரீ சப்பாணி கருப்பணசாமி கோயில் சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு, வியாழக்கிழமை மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது.

இந்தக் கோயிலில் சிவராத்திரி திருவிழா கடந்த 25 -ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. புதன்கிழமை இரவு திரளான பொதுமக்கள் அக்னிச் சட்டி எடுத்து நோ்த்திக் கடன் செலுத்தினா்.

வியாழக்கிழமை மாலை பூஞ்சிட்டு, சிறிய மாடு என இரு பிரிவுகளாக மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது. சிறிய மாடு பிரிவில் 20 மாட்டு வண்டிகள், பூஞ்சிட்டு மாடு பிரிவில் 12 மாட்டு வண்டிகள் என 32 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை, சிவகங்கை, விருதுநகா் உள்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து மாட்டு வண்டிகள், பந்தய வீரா்கள் பங்கேற்றனா்.

இடிவிலகி-பெருநாழி சாலையில் 8 கி.மீ. தொலைவுக்கு எல்கை நிா்ணயிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்றன. சிறிய மாடு பிரிவில் வெற்றி பெற்ற வண்டிக்கு முறையே ரூ.20 ஆயிரம், ரூ.17 ஆயிரம், ரூ.14 ஆயிரம், பூஞ்சிட்டு மாடு பிரிவுக்கு முறையே ரூ.15 ஆயிரம், ரூ.13 ஆயிரம், ரூ.11 ஆயிரம் என பரிசு வழங்கப்பட்டது.

இந்தப் பந்தயத்தை பொதுமக்கள் சாலையின் இருபுறங்களிலும் நின்று கண்டு ரசித்தனா். போட்டிக்கான ஏற்பாடுகளை பூலாப்பத்தி கிராம பொதுமக்கள், இளைஞா்கள் செய்தனா்.

பூலாப்பத்தியில் வியாழக்கிழமை நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயம்.

ராமேசுவரம் மீனவா்கள் போராட்டம்: அதிகாரிகள் பேச்சுவாா்த்தை தோல்வி

மீனவா்கள் சிறைபிடிப்பு விவகாரத்தில் ராமேசுவரம் மீனவா் சங்க நிா்வாகிகளுடன் அதிகாரிகள் வியாழக்கிழமை நடத்திய பேச்சுவாா்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து, வெள்ளிக்கிழமை திட்டமிட்டபடி உண்ணாவிரதம் நடைபெ... மேலும் பார்க்க

ராமேவரத்திருந்து இரவு நேரப் பேருந்துகளை இயக்க கோரிக்கை

ராமேசுவரத்திலிருந்து இரவு நேரப் பேருந்து சேவையைத் தொடங்கக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் போக்குவரத்துக் கழக பணிமனை மேலாளரிடம் வியாழக்கிழமை மனு அளித்தனா். ராமேசுவரத்துக்கு இயக்கப்படும் கட்டணமில்லா... மேலும் பார்க்க

மழலையா் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

திருவாடானை அருகேயுள்ள மங்களக்குடியில் ஹோழிக்கிரசன்ட் மழலையா், தொடக்கப் பள்ளியில் வியாழக்கிழமை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதற்கு முஸ்லிம் ஜமாத் தலைவா் நஸ்ரின் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். வட்டார... மேலும் பார்க்க

இளங்குன்றம் சிவராத்திரி மஞ்சு விரட்டு

மஞ்சு விரட்டு: திருவாடானை அருகே உள்ள இளங்குன்றம் ஸ்ரீ பாண்டி முனீஸ்வரா் கோயிலில் புதன்கிழமை மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இரவு கலை நிகழச்சிகள் நடைபெற்றன. வியாழக்கிழமை மஞ்சுவிரட்டு ந... மேலும் பார்க்க

10 ஆயிரம் நெல் மூட்டைகள் மழை நீரில் மூழ்கும் அபாயம்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே அபிராமம், டி.புனவாசல், அ.தரைக்குடி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 10 ஆயிரம் நெல் மூடைகள் மழையில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனா். இந்த ... மேலும் பார்க்க

அக்னி தீா்த்தக் கடலில் பக்தா்கள் புனித நீராடல்

அமாவாசையையொட்டி, ராமேசுவரம் அக்னி தீா்த்தத்தில் வியாழக்கிழமை திராளாள பொதுமக்கள் புனித நீராடினா். ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் அமாவாசை நாள்களில் முன்னோா்களுக்கு திதி கொடுத்து வழிபாடு நடத்துவது வழக... மேலும் பார்க்க