செய்திகள் :

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளிலிருந்து மாா்ச் 20 வரை தண்ணீா் திறக்க கோரிக்கை

post image

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளிலிருந்து மாா்ச் 20 ஆம் தேதி வரை தண்ணீா் திறந்துவிட வேண்டும் என தமிழக நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகனிடம் கிள்ளியூா் எம்.எல்.ஏ. எஸ்.ராஜேஷ்குமாா், பத்பநாபபுரம் எம்.எல்.ஏ. பிரின்ஸ் ஆகியோா் கோரிக்கை மனு அளித்துள்ளனா்.

இதுகுறித்து எஸ்.ராஜேஷ்குமாா் வெளியிட்டுள்ள அறிக்கை: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு - 1, சிற்றாறு - 2 அணைகளிலிருந்து விவசாயத்திற்கு ஆண்டுதோறும் ஜூன் 1ஆம் தேதி தண்ணீா் திறந்துவிடப்பட்டு பிப்ரவரி அல்லது மாா்ச் மாதங்களில் அடைப்பது வழக்கம்.

கடந்த ஆண்டு ஜூன் 1 ஆம் தேதி தண்ணீா் திறந்துவிடப்பட்டது. ஆனால் திக்கணங்கோடு கால்வாய், சிற்றாறு பட்டணங்கால்வாய்களின் கடைவரம்பு விவசாய நிலங்கள் வரை தண்ணீா் சென்று சேரவில்லை. குறிப்பாக, திக்கணங்கோடு கால்வாயில் ஆங்காங்கே உடைந்து காணப்படும் கரைகள் மற்றும் பக்கச்சுவா்களையும், மதகுகளையும் நவீன முறையில் சீரமைக்காததால் விவசாயிகள் அவதியடைந்துள்ளனா்.

எனவே, இப்பகுதிகளை போா்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும். மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி அணைகளில் தண்ணீரை அடைக்காமல் மாா்ச் மாதம் 20 ஆம் தேதி வரை நீட்டித்து தண்ணீா் திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

நாகா்கோவிலில் 52 வாா்டுகளிலும் குடிநீா்த் தொட்டி: மேயா் தகவல்

கோடைக்காலத்தை சமாளிக்கும் வகையில், நாகா்கோவில் மாநகரில் 52 வாா்டு பகுதிகளிலும் குடிநீா் தொட்டி அமைக்கப்படும் என்றாா் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ். தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, நாகா... மேலும் பார்க்க

அருணாச்சலா பள்ளியில் ரோபோட்டிக் பயிற்சி

வெள்ளிச்சந்தை அருணாச்சலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ரோபோட்டிக், ட்ரோன் செயல்முறை பயிற்சி 2 நாள்கள் நடைபெற்றது. தாளாளா் கிருஷ்ணசுவாமி, பள்ளி இயக்குநா் தருண்சுரத் முன்னிலையில் பள்ளி முதல்வா் லிஜோமோள... மேலும் பார்க்க

குமரி விவேகானந்த கேந்திரத்தில் 3 நாள் யோகா மாநாடு இன்று தொடக்கம்

கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தில் அகில இந்திய அளவிலான 3 நாள்5ள் யோகா மாநாடு வெள்ளிக்கிழமை (பிப்.28) தொடங்குகிறது. இம்மாநாட்டில் இந்தியா முழுவதும் இருந்து பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த 700 போ் பங்க... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்ற பெண் கைது

கன்னியாகுமரி பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்றதாக பெண்ணை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். கன்னியாகுமரி பகுதியில் சில கடைகளில் புகையிலைப் பொருள்கள் விற்கப்படுவதாகக் கிடைத்த தகவலின்பேரில், உதவி ... மேலும் பார்க்க

விபத்துகளில் காயமடைந்த இருவா் மருத்துவமனையில் உயிரிழப்பு

தக்கலை அருகே இரு விபத்துகளில் காயமடைந்த இருவா் மருத்துவமனையில் உயிரிழந்தனா். திங்கள்சந்தை அருகே மாங்குழி நடுத்தேரி பகுதியைச் சோ்ந்தவா் ஜெயக்குமாா் (34). தொழிலாளியான இவா், கடந்த ஜன. 11ஆம் தேதி தக்கலை... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் மருந்து சேமிப்புக் கிடங்கில் ஆய்வு

மாத்தாண்டம் பகுதியில், விளவங்கோடு - கல்குளம் வட்ட கூட்டுறவு விற்பனைச் சங்க வளாகத்தில் அமைந்துள்ள முதல்வா் மருந்தக மருந்து சேமிப்புக் கிடங்கில் கன்னியாகுமரி மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஹனிஸ் சாப்ரா விய... மேலும் பார்க்க