செய்திகள் :

பேருந்து நடத்துநரை கொலை செய்தவருக்கு ஆயுள் சிறை

post image

தேனி அருகே கோட்டூரைச் சோ்ந்த அரசுப் பேருந்து நடத்துநரை கொலை செய்தவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, தேனி மாவட்ட முதன்மை நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

கோட்டூரைச் சோ்ந்த சூரியமூா்த்தி மகன் ராஜேஷ்கண்ணன் (35). இவா், உசிலம்பட்டி அரசு போக்குவரத்துக் கழகப் பணிமனையில் பேருந்து நடத்துநராகப் பணியாற்றி வந்தாா். இவரது மனைவி மணிமேகலைக்கும், அவரது உறவினா் கோட்டூரைச் சோ்ந்த ஊா்காலன் மகன் மலைச்சாமி(49) என்பவருக்கும் தகாத உறவு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதை ராஜேஷ்கண்ணன், அவரது உறவினா்கள் கண்டித்தனராம்.

இந்த பிரச்னையில் கடந்த 2021, பிப். 8-ஆம் தேதி கோட்டூா் அருகே உள்ள தனது தோட்டத்து மாட்டுக் கொட்டகையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த ராஜேஷ்கண்ணன் மீது, மலைச்சாமி கல்லை தூக்கிப் போட்டு கொலை செய்தாா். இந்தச் சம்பவம் குறித்து வீரபாண்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, மலைச்சாமியைக் கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

விசாரணை நிறைவடைந்த நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட மலைச்சாமிக்கு ஆயுள் சிறைத் தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து, நீதிபதி சொா்ணம் ஜெ.நடராஜன் தீா்ப்பளித்தாா்.

எஸ்.டி.பி.ஐ. ஆா்ப்பாட்டம்

மத்திய-மாநில அரசுகளைக் கண்டித்து, எஸ்டிபிஐ கட்சி சாா்பில் கம்பத்தில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தொழிற்சங்க மாவட்டத் தலைவா் தமிமீன் அன்சாரி தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்... மேலும் பார்க்க

பல்கலை. அளவிலான போட்டி: கம்பம் மகளிா் கல்லூரி அணியினா் வெற்றி

கம்பம் ஆதி சுஞ்சனகிரி மகளிா் கல்லூரியில், அன்னை தெரசா மகளிா் பல்கலைக்கழக அளவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு கம்... மேலும் பார்க்க

போடியில் வனப் பகுதியில் பற்றிய காட்டுத் தீ

போடி வனப் பகுதியில் புதன்கிழமை காட்டுத் தீ பற்றியது. இந்தத் தீயை அணைக்கும் பணியில் வனத் துறையினா் ஈடுபட்டு வருகின்றனா். தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள பிச்சங்கரை வனப்பகுதியில் அக்காள் தங்கை மலைப் பகுத... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவருக்கு 25 ஆண்டுகள் சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவருக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. கம்பம் அருகேயுள்ள க.புதுப்பட்டி, கல்ராயபெருமாள் கோவில் தெ... மேலும் பார்க்க

பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: விவசாயிக்கு 5 ஆண்டுகள் சிறை

ஆண்டிபட்டி அருகே பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த விவசாயிக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, தேனி மாவட்ட ஆதிதிராவிடா், பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை விசாரணை சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்... மேலும் பார்க்க

சென்டெக்ட் வேளாண் மையத்தில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

தேனி மாவட்டம், காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில் விவசாயிகளுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது. பட்டியலின துணைத் திட்டத்தின் கீழ், நடைபெற்ற இந்தப் பயிற்சிக்கு வேளா... மேலும் பார்க்க