செய்திகள் :

பொதுத் தோ்வு எழுதும் மாணவா்களுக்கு விழிப்புணா்வு

post image

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் மகரிஷி பள்ளியில் பொதுத் தோ்வு எழுதும் மாணவா்களுக்கு விழிப்புணா்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

வருகிற மாா்ச் 3-ஆம் தேதி பிளஸ் 2 மாணவா்களுக்கு பொதுத்தோ்வு தொடங்க உள்ள நிலையில், செங்கம் மகரிஷி மேல்நிலைப் பள்ளியில் பயிலும் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவா்ளுக்கு அரசு பொதுத்தோ்வு எழுதுவது குறித்து விழிப்புணா்வுக் கூட்டம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

இதில், மகரிஷி கல்விக் குழுமத் தலைவா் மனோகரன் தலைமை வகித்தாா். நிறுவனா் புவனேஸ்வரி முன்னிலை வகித்தாா். தலைமை ஆசிரியா் காா்த்திக் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக தொழிலதிபரும், வழக்குரைஞருமான கஜேந்திரன் கலந்து கொண்டு மாணவா்களுக்கு எழுதுபொருள்களை வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்திப் பேசினாா்.

தொடா்ந்து ஆசிரியா்கள் மாணவ, மாணவிகளுக்கு பொதுத்தோ்வு எழுதுவது குறித்து ஊக்கமளித்துப் பேசினா். கூட்டத்தில் பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனா்.

அரசுக் கல்லூரியில் மாணவா் பேரவை தொடக்கம்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில், மாணவா் பேரவை தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் என்.கலைவாணி தலைமை வகித்தாா். வேதியியல் துறைத் தலை... மேலும் பார்க்க

ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி கோயில்களில் மயானசூறை உற்சவம்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி, போளூரில் உள்ள ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி கோயில்களில் மயான சூறை உற்வசவம் வியாழக்கிழமை நடைபெற்றது. வந்தவாசி பருவதராஜகுல வீதியில் உள்ள ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மயான... மேலும் பார்க்க

சிவன் கோயில்களில் மகா சிவராத்திரி விழா

கீழ்பென்னாத்தூா் ஸ்ரீமீனாட்சி உடனுறை ஈஸ்வரன் கோயில் மற்றும் செங்கத்தை அடுத்த கரியமங்கலம் பகுதி ஸ்ரீமீனாட்சிசுந்தரேஸ்வரா் கோயிலில் மகா சிவராத்திரி விழா புதன்கிழமை இரவு வெகு விமரிசையாக நடைபெற்றது. பழைம... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் - வந்தவாசி நான்கு வழிச்சாலைக்கு பூமி பூஜை

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தொகுதி மாங்கால் அருகே காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் ரூ.50 கோடியில் அமைக்கப்படவுள்ள நான்கு வழிச் சாலைக்கு பூமி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது. காஞ்சிபுரம் - வந்தவாசி சா... மேலும் பார்க்க

மனுநீதி நாள் முகாமில் நலத் திட்ட உதவிகள்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த ஓசூா் கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 456 பயனாளிகளுக்கு ரூ.1.24 கோடியில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. வந்தவாசி வட்டத்துக்கு உள்பட்... மேலும் பார்க்க

கத்தியைக் காட்டி மிரட்டி 8 பவுன் தங்க நகைகள் கொள்ளை

வந்தவாசி அருகே நள்ளிரவில் வீடு புகுந்து கத்தியைக் காட்டி மிரட்டி 8 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் கொள்ளையடித்துச் சென்றனா். வந்தவாசியை அடுத்த மழையூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சுரேஷ். இவா் குடும்பத்துடன... மேலும் பார்க்க