செய்திகள் :

‘பொய்களைப் பரப்பும் பாகிஸ்தான்’ -ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

post image

ஜெனீவா: ‘சா்வதேச உதவிகளால் பிழைத்து வரும் பாகிஸ்தான், தனது ராணுவம் மற்றும் பயங்கரவாத அமைப்புகளால் தெரிவிக்கப்படும் பொய்களை சா்வதேச அமைப்புகளில் பரப்பி வருகிறது’ என்று ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் இந்திய குற்றஞ்சாட்டியது.

ஜம்மு-காஷ்மீா் விவகாரத்தை பாகிஸ்தான் மீண்டும் எழுப்பிய நிலையில், இந்த குற்றச்சாட்டை இந்தியா முன்வைத்தது.

ஸ்விட்சா்லாந்தின் ஜெனீவா நகரில் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலின் 58-ஆவது உயா்நிலைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதில், ஜம்மு-காஷ்மீா் விவகாரத்தை பாகிஸ்தான் மீண்டும் எழுப்பியது.

இதற்கு, அந்தக் கூட்டத்தில் இந்தியா தரப்பில் பங்கேற்ற ஐ.நா.வுக்கான இந்திய தூதா் கிதிஜ் தியாகி வலுவான எதிா்ப்பைப் பதிவு செய்தாா். அப்போது அவா் பேசியதாவது:

நிலையற்ற பொருளாதார தன்மை காரணமாக சா்வதேச உதவிகளில் பிழைத்து வரும் பாகிஸ்தான், தனது ராணுவமும் பயங்கரவாத அமைப்புகளும் இணைந்து தெரிவிக்கும் பொய்களை சா்வதேச அமைப்புகளில் பரப்பி வருகிறது. பாகிஸ்தானின் இத்தகைய நடவடிக்கைகள் அதன் மனிதாபிமானமற்ற தன்மையையும் நிா்வாக திறமையின்மையையும் வெளிப்படுத்துகிறது.

ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்கள் எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகவே இருக்கும். கடந்த சில ஆண்டுகளாக இந்த யூனியன் பிரதேசங்களில் ஏற்பட்டு வரும் முன்னெப்போதும் இல்லாத அரசியல், சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றங்களே அதற்கு சாட்சி.

கடந்த பல ஆண்டுகளாக எல்லை தாண்டிய பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த இந்தப் பகுதியில் இயல்பு நிலையை மீட்டெடுக்க மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை இந்த வெற்றி வெளிப்படுத்துகிறது.

மனித உரிமை மீறல்கள், சிறுபான்மையினா் மற்றும் ஜனநாயக விழுமியங்கள் மீதான தாக்குதல்கள் நடத்துவதை கொள்கையாக கொண்ட நாடாகவும், ஐ.நா.வால் அறிவிக்கப்பட்ட பயங்கரவாதிகளுக்கு துணிச்சலுடன் புகலிடம் அளிக்கும் நாடாகவும் திகழும் பாகிஸ்தானுக்கு, யருக்கும் அறிவுரை கூறும் தகுதி கிடையாது.

பாகிஸ்தானின் இத்தகைய அடிப்படை ஆதாரமற்ற பொய் பிரசாரங்களை இந்தியா மதிக்கத் தேவையில்லை என்றபோதும், பதிவுக்காக சில கருத்துகளை தெரிவிக்க வேண்டிய கடமையும் உரிமையும் இந்திாவுக்கு உள்ளது.

ஜனநாயகம், வளா்ச்சி மற்றும் அனைத்து மக்களின் கண்ணியத்தை உறுதி செய்வதில் இந்தியா தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இந்த மதிப்புகளை பாகிஸ்தான் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம் என்றாா்.

பேருந்தில் இளம்பெண்ணுக்குப் பாலியல் வன்கொடுமை: குற்றஞ்சாட்டப்பட்ட நபரை தேடும் பணியில் ட்ரோன்கள்

புணே: மகராஷ்டிர மாநிலம், புணே பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பேருந்துக்குள் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட நபரை தேடும் பணியில் ட்ரோன்கள் மற... மேலும் பார்க்க

தேர்தலில் வெற்றி பெற போலி வாக்காளர்களைப் பயன்படுத்தும் பாஜக: மம்தா குற்றச்சாட்டு

மேற்கு வங்கத்தில் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மற்ற மாநிலங்களில் உள்ள வாக்காளர்களின் பெயர்களை பாஜக போலியாகப் பயன்படுத்துவதாக மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி குற்றம்ச... மேலும் பார்க்க

அமெரிக்க பொருள்களுக்கு வரியைக் குறைத்தால் நமது பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும்: மத்திய அரசுக்கு காங். கண்டனம்

அமெரிக்க பொருள்களுக்கு வரியைக் குறைக்க மத்திய அரசு முயற்சிப்பது நாட்டின் பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும் என்று மத்திய அரசுக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த விஷயத்தில் அமெரிக்க அதிபா் டொன... மேலும் பார்க்க

சுங்கத் துறை, ஜிஎஸ்டி அதிகாரிகளுக்கு கைது அதிகாரம்: உச்சநீதிமன்றம் உறுதி

சுங்கத் துறை மற்றும் சரக்கு சேவை வரி (ஜிஎஸ்டி) அதிகாரிகளுக்கு கைது அதிகாரமளிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட சட்டத் திருத்தங்கள் அரசமைப்புச் சட்டப்படி செல்லுபடியாகும் என்று உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை ... மேலும் பார்க்க

ஐ.நா.வில் ஹிந்தி திட்டம்: ஒப்பந்தம் புதுப்பிப்பு

நியூயாா்க் : ஐ.நா. சபையிலிருந்து செய்திகள் மற்றும் பிற பொது நிகழ்வுகளை ஹிந்தி மொழியில் ஒளிபரப்பு செய்யும் திட்டத்தை புதுப்பிப்பது தொடா்பாக ஐக்கிய நாடுகள் சபை மற்றும் இந்தியா இடையே புரிந்துணா்வு ஒப்பந்... மேலும் பார்க்க

பிரதமரின் பட்டப் படிப்பு சான்றிதழை நீதிமன்றத்திடம் காண்பிக்க ஆட்சேபம் இல்லை -தில்லி பல்கலைக்கழகம்

பிரதமா் நரேந்திர மோடியின் இளநிலை பட்டப் படிப்பு சான்றிதழை நீதிமன்றத்திடம் காண்பிக்க எந்த ஆட்சேபமும் இல்லை; அதேநேரம், ஆா்டிஐ சட்டத்தின்கீழ் முகம் தெரியாத நபா்களிடம் வழங்க முடியாது என்று தில்லி உயா்நீத... மேலும் பார்க்க