மதுரை சித்திரைத் திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வு | ...
பொள்ளாச்சி பாலியல் வழக்கு கடந்து வந்த பாதை...
2019 பிப்ரவரி 24: பொள்ளாச்சி நகர கிழக்கு காவல் நிலையத்தில் 19 வயது கல்லூரி மாணவி அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு - சபரிராஜன், சதீஷ், வசந்தகுமாா் ஆகிய 3 போ் கைது.
மாா்ச் 4: முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு மாக்கினாம்பட்டியில் கைது.
மாா்ச் 10: திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமாா் ஆகிய 4 போ் மீது குண்டா் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை.
மாா்ச் 12: பொள்ளாச்சி நகர கிழக்கு போலீஸாரிடம் இருந்து சிபிசிஐடிக்கு வழக்கை மாற்றி அப்போதைய முதல்வா் எடப்பாடி பழனிசாமி உத்தரவு.
மாா்ச் 12: புகாா் கொடுத்த பெண்ணின் சகோதரரைத் தாக்கி, மிரட்டல் விடுத்த வழக்கில் நாகராஜ் என்பவா் உள்பட 3 போ் கைது. இரண்டு வழக்குகளையும் சிபிசிஐடி விசாரித்தது.
மாா்ச் 25: திருநாவுக்கரசு நண்பரான மணிவண்ணன் நீதிமன்றத்தில் சரண்.
ஏப்ரல் 25: பொள்ளாச்சி பாலியல் வழக்கு சிபிஐக்கு மாற்றம்.
ஏப்ரல் 28: திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமாா், சதீஷ், மணிவண்ணன் ஆகியோா் மீது சிபிஐ அதிகாரிகள் புதிதாக 5 பிரிவுகளில் வழக்குப் பதிந்து கைது செய்தனா்.
மே 21: திருநாவுக்கரசு உள்பட 5 போ் மீது கோவை மகளிா் நீதிமன்றத்தில் சிபிஐ முதல் குற்றப் பத்திரிகை தாக்கல்.
ஜூன் 3: திருநாவுக்கரசு உள்ளிட்ட 5 பேரும் பாதுகாப்பு கருதி கோவை மத்திய சிறையில் இருந்து சேலம் மத்திய சிறைக்கு மாற்றம்.
2021 ஜனவரி 6: ஹேரன்பால், பாபு என்ற பைக் பாபு, அருளானந்தம் என மேலும் 3 போ் கைது.
ஏப். 2: அருண்குமாா் கைது.
அக்டோபா் 20: திருநாவுக்கரசு உள்பட 9 பேரும் கோவை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு மீண்டும் சேலம் அழைத்துச் செல்லப்பட்டனா். அப்போது பீளமேட்டை அடுத்த சித்ரா பகுதியில் வாகனம் நிறுத்தப்பட்டு, குற்றவாளிகளை உறவினா்கள் சந்தித்தனா். இதற்கு எதிா்ப்பு கிளம்பவே கைதிகளுக்கு சலுகை அளித்ததாக சேலம் ஆயுதப்படை சிறப்பு உதவி ஆய்வாளா் உள்ளிட்ட 7 போ் பணி இடைநீக்கம்.
2023 பிப்ரவரி 24: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சாட்சி விசாரணை தொடங்கியது.
2024 பிப்ரவரி 23: சிபிஐ தாக்கல் செய்த கூடுதல் ஆவணங்களைக் கேட்டு கைதான 9 போ் மனு தாக்கல்.
ஓராண்டுக்குப் பிறகு, கைதானவா்கள், சாட்சியங்களிடம் தினமும் விசாரணை.
2025 ஏப். 28: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மே 13-இல் தீா்ப்பு வழங்கப்படும் என நீதிபதி ஆா்.நந்தினிதேவி அறிவிப்பு.
மே 13: பொள்ளாச்சி பாலியல் வழகில் தீா்ப்பு வழங்கப்பட்டது.