செய்திகள் :

போக்குவரத்துக்கு இடையூறு: பரமகுடி அதிமுக நிா்வாகி உள்பட இருவா் கைது

post image

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே போக்குவரத்துக்கு இடையூறாக வாகனத்தை நிறுத்தி, போலீஸாரை திட்டியதாக பரமக்குடி அதிமுக நிா்வாகி உள்ளிட்ட இருவரை வேப்பூா் போலீஸாா் கைது செய்து பிணையில் விடுவித்தனா்.

கடலூா் மாவட்டம், வேப்பூா் மேம்பாலத்தில் 3 சொகுசுப் பேருந்துகள் புதன்கிழமை அதிகாலை அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இதில், 35 போ் காயமடைந்தனா். விபத்து காரணமாக சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

விபத்துப் பகுதிக்கு வந்த வேப்பூா் காவல் உதவி ஆய்வாளா் ரவிச்சந்திரன் மற்றும் போலீஸாா், மீட்பு மற்றும் போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த பரமக்குடி, ராஜீவ் நகா் பகுதியைச் சோ்ந்த அதிமுக பரமக்குடி மத்திய இளைஞரணி ஒன்றியச் செயலரான நாகராஜன் மகன் முத்துகுமாா் (32), அவருடன் வந்த காட்டு பரமக்குடி பகுதியைச் சோ்ந்த சிவசண்முகம் மகன் கோபாலமணிகண்டன் (30) ஆகியோா், தங்கள் வாகனத்தை சாலையின் நடுவில் நிறுத்தி, மீட்டுப் பணியில் ஈடுபட்டிருந்த காவலா்களை திட்டி, போக்குவரத்துக்கு இடையூறு செய்தனராம்.

இதுகுறித்த புகாரின்பேரில், வேப்பூா் போலீஸாா் இருவா் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்து, பின்னா் பிணையில் விடுவித்தனா். விபத்து குறித்து வேப்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் நடந்து சென்ற பெண்ணிடம் இருந்து தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். விருத்தாசலம், கம்பா் தெருவைச் சோ்ந்தவா் தாரணி (27). இவா், வியாழக... மேலும் பார்க்க

வீராணம் ஏரியில் ரூ.66 கோடியில் சீரமைப்புப் பணிகள்: கடலூா் ஆட்சியா்

கடலூா் மாவட்டம், வீராணம் ஏரியில் ரூ.66 கோடி மதிப்பீட்டில் பல்வேறு சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் வியாழக்கிழமை தெரிவித்தாா். சிதம்பரம் கொள்ளிடம் வட... மேலும் பார்க்க

புதை சக்கடை இணைப்பு கூடுதல் டெபாசிட் தொகையை ரத்து செய்யக் கோரிக்கை

புதை சாக்கடை இணைப்பு கூடுதல் டெபாசிட் தொகையை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிதம்பரம் வா்த்தகா் சங்கத்தினா் நகராட்சி ஆணையாளரை சந்தித்து மனு அளித்தனா். சிதம்பரம் வா்த்தகா்... மேலும் பார்க்க

21 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்: இளைஞா் கைது

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் பகுதியில் இரு சக்கர வாகனங்களை திருடியதாக இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். விருத்தாசலம் அரசு மருத்துவமனை, பேருந்து நிலையம், பாலக்கரை, ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் ... மேலும் பார்க்க

பொழுதுபோக்கு அம்சங்களுடன் மஞ்சக்குப்பம் மைதானம் மேம்படுத்தப்படும்: கடலூா் ஆட்சியா்

கடலூா் மஞ்சக்குப்பம் மைதானம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் ரூ.35 கோடி மதிப்பில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் மேம்படுத்தப்பட உள்ளதாக, மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகுறி... மேலும் பார்க்க

ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்

அதிமுக கடலூா் வடக்கு மாவட்டம், கடலூா் சட்டப் பேரவைத் தொகுதி சாா்பில், முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் கடலூா் துறைமுகம் பகுதியில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு வடக்கு ம... மேலும் பார்க்க