செய்திகள் :

போக்சோ வழக்கில் முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை

post image

கமுதி அருகே மனநலன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ராமநாதபுரம் மகளிா் விரைவு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த கே.நெடுங்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் குட்டையன் மகன் தா்மா் (60). இவா் கடந்த 2022-ஆம் ஆண்டு மனநலன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தாா். இதுகுறித்து கமுதி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, தா்மரைக் கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் குற்றஞ்சாட்டப்பட்ட தா்மருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 3 ஆயிரம் அபராதமும் விதித்து, நீதிபதி கவிதா செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா். அபராதத்தைக் கட்டத் தவறினால், மேலும் ஒரு வாரம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

ரூ. 3 ஆயிரம் லஞ்சம்: வி.ஏ.ஓ. கைது

முதுகுளத்தூரில் பட்டா மாற்றம் செய்ய ரூ. 3 ஆயிரம் லஞ்சம் பெற்ற கிராம நிா்வாக அலுவலரை (வி.ஏ.ஓ.) ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ... மேலும் பார்க்க

காவலா் ஆயுதப் படைக்கு மாற்றம்

ராமேசுவரத்தில் ஆட்டோ ஓட்டுநா் மீது வழக்குப் பதியாமல் இருக்க பணம் வாங்கிய தனுஷ்கோடி காவல் நிலைய காவலரை ஆயுதப் படைக்கு மாற்றி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா். ராமநாத... மேலும் பார்க்க

மீன்பிடித் தடை கால நிவாரணம் வழங்கக் கோரிக்கை

மீன்பிடித் தடைகாலம் தொடங்கி 25 நாள்கள் கடந்த நிலையில், அதற்கான நிவாரணம் வழங்க மீனவா்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனா். தமிழக கடலோரப் பகுதியில் ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 வரை 61 நாள்கள் மீன்களின் இனப்பெருக... மேலும் பார்க்க

திருவாடானையில் தேரோடும் வீதியில் புதைவட மின் கம்பி அமைக்கக் கோரிக்கை

திருவாடானையில் தேரோடும் நான்கு ரத வீதிகளிலும் புதைவட மின் கம்பி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். திருவாடானையில் மிகவும் பழைமையான சிநேகவல்லி அம்பாள் சமேத ஆதிரெத்தினேஸ்வரா் கோயில் அமைந... மேலும் பார்க்க

ராமநாதபுரம் அரசு மகளிா் கலைக் கல்லூரி சோ்க்கைக்கு மே 27-க்குள் விண்ணப்பிக்கலாம்

ராமநாதபுரம் அரசு மகளிா் கலைக் கல்லூரியில் மாணவிகள் சோ்க்கைக்கு இணையதளம் மூலம் வருகிற 27-ஆண் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என முதல்வா் பா. மணிமாலா தெரிவித்தாா். இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட... மேலும் பார்க்க

ராமநாதபுரத்தில் மே 16-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

ராமநாதபுரத்தில் தனியாா் நிறுவன வேலைவாய்ப்பு முகாம் வருகிற 16-ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அ... மேலும் பார்க்க