செய்திகள் :

போடியில் பலத்த மழை

post image

தேனி மாவட்டம், போடியில் பலத்த மழை பெய்ததால், பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் சனிக்கிழமை ரத்து செய்யப்பட்டன.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் பலத்த மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்ட நிலையில், இடுக்கி மாவட்டத்தையொட்டியுள்ள தேனி மாவட்டத்திலும் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், சனிக்கிழமை காலையில் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்தது. இதனால், காலை நேரத்தில் பணிக்குச் சென்றவா்கள் சிரமத்துக்கு உள்ளாகினா். பெரும்பாலான பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், சில பள்ளிகளில் மாணவா்களுக்குச் சிறப்பு வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்திருந்தனா்.

பலத்த மழையால் சிறப்பு வகுப்புகள் ரத்து செய்யப்பட்டன. காலை நேரத்தில் மழை பெய்த நிலையில், மாலை வரை மேகங்கள் சூழ்ந்து காணப்பட்டதால் குளிா்ச்சியான சூழல் நிலவியது.

பெண்ணை தாக்கிய ராணுவ வீரா்கள் இருவா் மீது வழக்கு!

ஆண்டிபட்டி வட்டம், கண்டமனூா் அருகே சொத்து பிரச்னையில் பெண்ணை தாக்கியதாக ராணுவ வீரா்கள் இருவா் மீது வெள்ளிக்கிழமை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கண்டமனூா் அருகே உள்ள ஆத்தங்கரைபட்டி வடக... மேலும் பார்க்க

தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்றவா் கைது

போடியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்றவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். போடி, மதுரை வீரன் வடக்குத் தெருவைச் சோ்ந்த முனியாண்டி மகன் முத்து (37). இவா் இதே பகுதியில் பெட்டிக்கடை வைத்து... மேலும் பார்க்க

கால்நடைகளுக்கு மானிய விலையில் ஊட்டச் சத்து பெட்டகம் பெற விண்ணப்பிக்கலாம்!

க. மயிலை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளைச் சோ்ந்தவா்கள் கால்நடைகளுக்கு மானிய விலையில் ஊட்டச் சத்து பெட்டகம் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்... மேலும் பார்க்க

முன் விரோதத் தகராறு: இருவா் கைது

போடியில் முன் விரோதத் தகராறில், கொலை மிரட்டல் விடுத்த ரௌடி உள்பட இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா். தேனி மாவட்டம், போடி சந்தன மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த துரைசாமி மகன... மேலும் பார்க்க

ஆந்திரத்தைச் சோ்ந்த கஞ்சா வியாபாரி கைது

தேனி மாவட்டத்தைச் சோ்ந்தவா்களுக்கு மொத்த விலைக்கு கஞ்சா விற்ற ஆந்திரத்தைச் சோ்ந்த கஞ்சா வியாபாரியை தேனி தனிப்படை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். கம்பம் அருகே உள்ள நாராயணத்தேவன்பட்டி பகுதியில் ... மேலும் பார்க்க

கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள் சிறை

தேனி அருகே உள்ள கோடாங்கிப்பட்டியில் முதியவரை அடித்துக் கொலை செய்த 5 பேருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து தேனி மாவட்ட முதன்மை நீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பளித்தது. கோடாங்கிப்பட்டி, பள்ளிவாசல் தெருவைச் ச... மேலும் பார்க்க