செய்திகள் :

மகா கும்பமேளா நிறைவு: தூய்மைப் பணிகளைத் தொடங்கி வைத்த முதல்வர் யோகி!

post image

உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் கும்பமேளா நிறைவடைந்த நிலையில், தூய்மைப் பணிகளை அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடங்கிவைத்தார்.

பிரம்மாண்ட ஆன்மிக திருவிழாவான கும்பமேளா நிகழ்ந்த 45 நாள்களும் பிரயாக்ராஜ் மக்கள் வெள்ளத்தில் மிதந்தது. பிரம்மாண்ட முறையில் நிகழ்த்தப்பட்ட கும்பமேளாவில் சுமார் 66 கோடி பேர் புனித நீராடிச் சென்றனர். கும்பமேளா நடைபெற்ற இடத்தை தூய்மைப்படுத்தும் பணி இன்று காலை முதல் தொடங்கியுள்ளது.

இதுதொடர்பாக முதல்வர் யோகி வெளியிட்ட எக்ஸ் பதிவில்,

மகா கும்பமேளாவை வெற்றிகரமாக நடத்துவதற்குப் பங்களித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையாலும், அர்ப்பணிப்புள்ள தூய்மைப் பணியாளர்களின் ஆதரவாலும், பிரயாக்ராஜில் மகா கும்பமேளா கனவு நனவாகியுள்ளது என்று அவர் கூறினார்.

அமைச்சர்களுடன் அரயில் காட் பகுதியில் தூய்மைப் பிரசாரத்தில் அவர் பங்கேற்றார். தூய்மைப்படுத்தும் பணிக்குப் பிறகு, முதல்வர் யோகி மற்றும் அவரது அமைச்சர்கள் திரிவேணி சங்கம் நோக்கி மிதவைக் கப்பலில் பயணித்தனர். பயணத்தின்போது, நீர்நிலைகளில் அமர்ந்திருந்த சைபீரியப் பறவைகளுக்குத் தானியங்களை வழங்கினார். திரிவேணி சங்கமத்தை அடைத்ததும், புனித சடங்கு ஒன்றை நிகழ்த்தினார். கண்ணுக்குத் தெரியாத வடிவங்களாகப் போற்றப்படும் அன்னை கங்கை, யமுனை, சரஸ்வதி தேவிக்கு மரியாதை செலுத்தினார். வேத மந்திரங்கள் முழங்க முதல்வர் யோகி, அமைச்சர்களுடன் இணைந்து கங்கைக்கு பால் அபிஷேகம் செய்து மக்களின் நலனுக்காகப் பிரார்த்தனை செய்து ஆரத்தி எடுத்தார்.

இந்த நிகழ்வில் துணை முதல்வர்கள் கேசவ் பிரசாத் மௌரியா, பிரஜேஷ் பதக், அமைச்சர்கள் சுரேஷ் கன்னா, ராகேஷ் சச்சன், நந்த் கோபால் குப்தா நந்தி, அனில் ராஜ்பர், தலைமைச் செயலாளர் மனோஜ் குமார் சிங், டிஜிபி பிரசாந்த் குமார் உள்பட பல மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இன்று முழுவதும், பிரயாக்ராஜில் பல்வேறு நிகழ்ச்சிகளில் முதல்வர் யோகி பங்கேற்க உள்ளார். 2025 மகா கும்பமேளாவின் வெற்றிக்கு பங்களித்த ஊழியர்கள் மற்றும் அமைப்புகளையும், பாதுகாப்பான சூழலைப் பராமரித்ததற்காக காவல்துறை அதிகாரிகளுக்கும் முதல்வர் யோகி தனது நன்றியைத் தெரிவிப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

கோவாவில் சுற்றுலா பயணிகளின் வருகை குறைவுக்கு இட்லிதான் காரணம்: பாஜக எம்.எல்.ஏ. கருத்தால் சர்ச்சை

கோவாவில் சுற்றுலா பயணிகளின் வருகை குறைவுக்கு இட்லியே காரணம் என்று பாஜக எம்.எல்.ஏ. பேசியிருப்பது சமூக ஊடகங்களில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. கோவாவில் சமீபகாலமாக சர்வதேச சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்து ... மேலும் பார்க்க

பிரதமரின் திட்டத்தால் ஏழைகளின் பைகள் காலியாகிறது: கார்கே

விக்ஸித் பாரத் திட்டத்தால் இந்திய ஏழைகள் பணமின்றி தவிப்பதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.காங்கிரஸ் மூத்தத் தலைவரான மல்லிகார்ஜுன கார்கே, தனது எக்ஸ் பக்கப் பதிவில் கூறியதாவது ``பிரத... மேலும் பார்க்க

நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் குற்றவாளிகள்: மத்திய அமைச்சர் சர்ச்சை பேச்சு!

அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் குற்றவாளிகள் என்றும் அவர்கள் மீது அனுதாபம் காட்டக்கூடாது என்றும் மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார் பேசியது சர்ச்சையாகியுள்ளது. ஹரியானா முன்னாள் முதல்... மேலும் பார்க்க

கும்பமேளாவை பயன்படுத்திக்கொண்ட நிறுவனங்கள்!

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று முடிந்துள்ளது. இதில் 66 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜன. 13 முதல் பிப். 26 ஆம் தேதி வரை 45 நாள்கள... மேலும் பார்க்க

இந்தியக் குடும்பங்களின் நிகர சேமிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி!

இந்தியக் குடும்பங்களின் நிகர சேமிப்பு 50 ஆண்டுகால வரலாறு காணாத வீழ்ச்சியடைந்ததாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.இந்தியாவின் 140 கோடி மக்கள்தொகையில் சுமார் 100 கோடி பேர், அத்தியாவசிய செலவுகளைத் தவிர மற்றவைக்... மேலும் பார்க்க

பேருந்தில் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: குற்றவாளியைக் கண்டுபிடிப்பவருக்கு 1 லட்சம்!

பேருந்தில் பெண்ணுக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக, குற்றவாளியின் புகைப்படம் வெளியான நிலையில், அந்நபர் குறித்து தகவல் கொடுப்பவருக்கு 1 லட்சம் பரிசாக வழங்கப்படும் என்று புணே காவல் துறை தெ... மேலும் பார்க்க