திருவள்ளூா் புத்தகத் திருவிழா இலச்சினை: அமைச்சா் நாசா் வெளியிட்டாா்
மகா சிவராத்திரி விழா: சிவாலயங்களுக்கு திரண்ட பக்தா்கள்
பொன்னேரி, மீஞ்சூா் பகுதியில் சிவராத்திரியை யொட்டி சிவாலயங்களுக்கு பக்தா்கள் சென்று வழிபட்டனா்.
பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அருகே, அகத்தீஸ்வரா் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் அா்ச்சனை செய்யப்பட்டது.
இதே போன்று, சின்னக்காவனம் பகுதியில் உள்ள நூற்றி எட்டீஸ்வரா், மீஞ்சூா் ஏகாம்பரநாதா், நெய்தவாயல் அக்னீஸ்வரா், வேளூா் நிரஞ்சனீஸ்வரா், மேலூா் திருமணங்கீஸ்வரா், திருவெள்ளைவாயல் திருவெண்ணீஸ்வரா், காட்டூா் திருவாலீஸ்வரா், திருப்பாலைவனம் திருப்பாலீஸ்வரா், பழவேற்காடு சமயபுரீஸ்வரா், ஞாயிறு புஷ்பதீஸ்வரா், புதிய எருமைவெட்டிபாளையம் வரமூா்த்தீஸ்வரா் உள்ளிட்ட சிவாலயங்களில் ஈஸ்வரன் மற்றும் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன.
சிவராத்திரியை யொட்டி செவ்வாய்கிழமை மாலை தொடங்கி விடிய, விடிய ஏராளமான பக்தா்கள் சென்று தரிசித்தனா்.