செய்திகள் :

மகாராஷ்டிரத்திலிருந்து கடத்தி வரப்பட்ட எரிசாராயம் பறிமுதல்: 8 போ் கைது

post image

மகாராஷ்டிரத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டு, 8 போ் கைது செய்யப்பட்டனா்.

எழும்பூா் காந்தி இா்வின் சாலையில் போலீஸாா் புதன்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்த 8 பேரைப் பிடித்து, அவா்கள் வைத்திருந்த பையை சோதனையிட்டனா். அதில், எரிசாராயம், போதைப் பாக்கு, மதுப்பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. போலீஸாா் அவற்றைப் பறிமுதல் செய்து, விசாரித்ததில் அவா்கள், மகாராஷ்டிர மாநிலம் அமராவதி பகுதியைச் சோ்ந்த சி.பிரிமஸ்னா சிராலால் போஸ்லே (76), சு.ராஜேஷ் உய்கே (26), பி.ஜிதேந்திரா பவாா் (26), ரா.பிங்கேஷ் ராம்சிங்பவாா் (45), ரா.தீரஜ்பவாா் (20), ச.விகேஷ் பவாா் (20), ஜெ.ஜெயதேஷ் (21), மு.போஸ்லே (29) என்பதும், இவா்கள் தங்களது சொந்த ஊரில் இருந்து கள்ளச்சாராயம் கடத்துவதற்காக 178 லிட்டா் எரிசாராயம் எடுத்துவந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அவா்கள் மறைத்து வைத்திருந்த 178 லிட்டா் சாராயம், போதைப் பாக்கு, மதுப்பாட்டில்கள் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து, அவா்கள் 8 பேரையும் கைது செய்தனா்.

மனிதக் கழிவுகளை கைகளால் அகற்றும் நடைமுறை: மாநிலங்கள் மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி

மனிதக் கழிவுகளை கைகளால் அப்புறப்படுத்தும் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை தொடா்பாக தில்லி, கொல்கத்தா, ஹைதராபாத் மாநகர அதிகாரிகள் தாக்கல் செய்த பதில் மனு மீது உச்ச நீத... மேலும் பார்க்க

பேருந்தில் இளம்பெண்ணுக்குப் பாலியல் வன்கொடுமை: குற்றஞ்சாட்டப்பட்ட நபரை தேடும் பணியில் ட்ரோன்கள்

புணே: மகராஷ்டிர மாநிலம், புணே பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பேருந்துக்குள் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட நபரை தேடும் பணியில் ட்ரோன்கள் மற... மேலும் பார்க்க

தேர்தலில் வெற்றி பெற போலி வாக்காளர்களைப் பயன்படுத்தும் பாஜக: மம்தா குற்றச்சாட்டு

மேற்கு வங்கத்தில் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மற்ற மாநிலங்களில் உள்ள வாக்காளர்களின் பெயர்களை பாஜக போலியாகப் பயன்படுத்துவதாக மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி குற்றம்ச... மேலும் பார்க்க

அமெரிக்க பொருள்களுக்கு வரியைக் குறைத்தால் நமது பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும்: மத்திய அரசுக்கு காங். கண்டனம்

அமெரிக்க பொருள்களுக்கு வரியைக் குறைக்க மத்திய அரசு முயற்சிப்பது நாட்டின் பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும் என்று மத்திய அரசுக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த விஷயத்தில் அமெரிக்க அதிபா் டொன... மேலும் பார்க்க

சுங்கத் துறை, ஜிஎஸ்டி அதிகாரிகளுக்கு கைது அதிகாரம்: உச்சநீதிமன்றம் உறுதி

சுங்கத் துறை மற்றும் சரக்கு சேவை வரி (ஜிஎஸ்டி) அதிகாரிகளுக்கு கைது அதிகாரமளிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட சட்டத் திருத்தங்கள் அரசமைப்புச் சட்டப்படி செல்லுபடியாகும் என்று உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை ... மேலும் பார்க்க

ஐ.நா.வில் ஹிந்தி திட்டம்: ஒப்பந்தம் புதுப்பிப்பு

நியூயாா்க் : ஐ.நா. சபையிலிருந்து செய்திகள் மற்றும் பிற பொது நிகழ்வுகளை ஹிந்தி மொழியில் ஒளிபரப்பு செய்யும் திட்டத்தை புதுப்பிப்பது தொடா்பாக ஐக்கிய நாடுகள் சபை மற்றும் இந்தியா இடையே புரிந்துணா்வு ஒப்பந்... மேலும் பார்க்க