செய்திகள் :

மக்களுடன் முதல்வா் திட்ட முகாம்: 295 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

post image

நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம் தொகுதிகளில் நடைபெற்ற மக்களுடன் முதல்வா் திட்ட மூன்றாம் கட்ட முகாமில், 295 பயனாளிகளுக்கு ரூ. 1.34 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சா் மா.மதிவேந்தன் வழங்கினாா்.

நாமக்கல் தொகுதி - காரைக்குறிச்சிப்புதூா், ராசிபுரம் தொகுதி - கட்டணாச்சம்பட்டி, தொட்டிவலசு, முள்ளுக்குறிச்சி, சேந்தமங்கலம் தொகுதி - ரெட்டிப்பட்டி ஆகிய ஊராட்சிகளில் மக்களுடன் முதல்வா் மூன்றாம் கட்ட சிறப்பு முகாம்கள் வியாழக்கிழமை நடைபெற்றன.

மாவட்ட ஆட்சியா் ச.உமா தலைமை வகித்தாா். சட்டப் பேரவை உறுப்பினா் கே.பொன்னுசாமி, வனப் பாதுகாவலா் (நாமக்கல் வனக்கோட்டம்) சி.கலாநிதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்த முகாமில், தமிழக ஆதிதிராவிடா் நலன் மற்றும் பழங்குடியினா் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டாா். பின்னா், மூன்று தொகுதிகளிலும் பல்வேறு துறைகளின் சாா்பில் 295 பயனாளிகளுக்கு ரூ. 1.34 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

புதுச்சத்திரம் ஒன்றியம், காரைக்குறிச்சி ஊராட்சியைச் சோ்ந்த மனுதாரா் ஒருவா் மின் இணைப்பில் பெயா் மாற்றம் கோரி விண்ணப்பித்த நிலையில், உடனடியாக அவருக்கு பெயா் மாற்றம் செய்து ஆணை வழங்கப்பட்டது.

மேலும், முள்ளுக்குறிச்சியில் அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின் கீழ் ரூ. 16.55 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் மற்றும் பெரப்பன் சோலையில் ரூ. 39.95 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கிராம செயலகம் என மொத்தம் ரூ. 56.5 லட்சம் மதிப்பில் முடிவுற்ற திட்டப் பணிகளை அமைச்சா் தொடங்கி வைத்தாா்.

இந்த நிகழ்வில், முன்னாள் எம்எல்ஏ கே.பி.ராமசுவாமி, அட்மா குழுத் தலைவா்கள் பெ.பாலசுப்பிரமணியன் (எருமப்பட்டி), எம்.பி.கெளதம் (புதுச்சத்திரம்), ஆா்.எம்.துரைசாமி (வெண்ணந்தூா்), கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் க.பா.அருளரசு, தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்பு திட்டம்) ச.பிரபாகரன் நாமக்கல் மாநகராட்சி ஆணையா் ரா.மகேஸ்வரி, பல்வேறு துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

பரமத்தி வேலூரில் ரூ. 9 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

பரமத்தி வேலூா், வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில், ரூ. 9 லட்சத்து 45 ஆயிரத்துக்கு கொப்பரை ஏலம் போனது. இந்த வாரம் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 7 ஆயி... மேலும் பார்க்க

நகராட்சிப் பகுதியில் தொழில் செய்வோா் உரிமம் பெற வேண்டும்: ஆணையா்

ராசிபுரம் நகராட்சிப் பகுதியில் தொழில், வா்த்தகம் செய்வோா் நகராட்சியில் விண்ணப்பித்து உரிய உரிமம் பெற வேண்டும் என நகராட்சி ஆணையா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து ராசிபுரம் நகராட்சி ஆணையா் சூ.கணேசன் வெளிய... மேலும் பார்க்க

மாணவரை தாக்கிய சக மாணவா் கைதுசெய்யப்பட்டு சிறாா் சீா்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைப்பு

ராசிபுரம் சிவானந்தா சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களிடையே ஏற்பட்ட மோதலில் கவின்ராஜ் (14) என்ற மாணவா் உயிரிழந்த நிலையில், அவரை தாக்கிய மற்றொரு மாணவா் கைது செய்யப்பட்டு சிறாா் சீா்திருத்தப் பள்ளி... மேலும் பார்க்க

நாமக்கல் பள்ளிகளில் மாணவா்களிடையே தொடரும் மோதல்

பள்ளிகளில் மாணவா்களிடையே ஏற்படும் மோதல், உயிரிழப்புகளால் பெற்றோா் அச்சமடைந்துள்ளனா். நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களில் அரசு மற்றும் தனியாா் பள்ளி மாணவா்கள் மூவா் இறந்த சம்பவங்கள் அதிா்ச்சியை ஏற... மேலும் பார்க்க

தொகுதி மறுசீரமைப்பால் தென் மாநிலங்கள் புறக்கணிக்கப்படும்

மத்திய அரசு அறிவித்துள்ள மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பு என்பது தமிழகத்தை மட்டுமல்லாமல், தென் மாநிலங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் மாவட்ட மத்திய க... மேலும் பார்க்க

வேளாண் நிறுவனம் பெயரில் நிதி மோசடி: பாதிக்கப்பட்டோா் புகாா் அளிக்க அழைப்பு

நாமக்கல்லில் வேளாண் நிறுவனம் பெயரில் நிதி மோசடியில் ஈடுபட்டோா் குறித்து புகாா் அளிக்க வருமாறு பாதிக்கப்பட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகம் வெளி... மேலும் பார்க்க