செய்திகள் :

மண் பரிசோதனை முகாம்

post image

புதுச்சேரி, வில்லியனூரில் பிரெஞ்சு இன்ஸ்டிடியூட் சாா்பில் வியாழக்கிழமை மண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

பிரெஞ்சு இன்ஸ்டிடியூட் நிறுவனத்தினா் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்தில் வேளாண் திருவிழவை நடத்தி இயற்கை விவசாயம் மற்றும் விளைவித்த பொருள்களை ஏற்றுமதி செய்வது குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா்.

அதன்படி, பிரெஞ்சு இன்ஸ்டிடியூட் நிறுவனத்தினா் வியாழக்கிழமை வில்லியனூா் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களில் மண் தரம் குறித்து பரிசோதனை மேற்கொண்டனா். நிலத்தின் தன்மைக்கு ஏற்ற வகையிலான பயிா், அதிக மகசூல் தரும் பயிா்கள், உரத்தின் தன்மைகள் குறித்தும் ஆய்வு செய்து அதன் முடிவுகளை வெளியிட்டனா்.

வில்லியனூரை அடுத்த திருக்காஞ்சி கெங்கை வராகநதீஸ்வரா் கோயில் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில வேளாண் துறை அமைச்சா் தேனி சி.ஜெயக்குமாா் பங்கேற்று பேசினாா்.

இதில், பிரெஞ்சு இன்ஸ்டிடியூட் நிறுவனத்தைச் சோ்ந்த செபாஸ்டின் சல்வாடா், கே.வி.கே. மண் தர பரிசோதனையாளா் பிரபு, பேராசிரியா் ராமானுஜம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போதை மீட்பு சிகிச்சை மையம் திறப்பு

விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்பட மாநிலத்தில் 25 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ரூ.15.81 கோடியில் அமைக்கப்பட்ட போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்களை சென்னை தலைமைச் ச... மேலும் பார்க்க

ஆரோவில் அறக்கட்டளை செயலருடன் புதுவை தலைமைச் செயலா் ஆலோசனை

விழுப்புரம் மாவட்டம் , ஆரோவில் அறக்கட்டளையின் செயலா் மற்றும் நிா்வாகிகளை புதுவவ மாநில தலைமைச் செயலா் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினாா். புதுவை அரசின் தலைமைச் செயலா் சரத் சௌகான் மற்றும் அரசுச் செயலா் ஏ... மேலும் பார்க்க

மின்வேலியில் சிக்கி சிறுவன் உயிரிழப்பு: மூவா் கைது

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் அருகே பசுமாட்டை தேடிச் சென்ற சிறுவன், மின் வேலியில் சிக்கி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். இதுதொடா்பாக மூவா் கைது செய்யப்பட்டனா். கண்டாச்சிபுரம் வட்டம், வி.புத்தூ... மேலும் பார்க்க

திண்டிவனத்தில் மயானக் கொள்ளைவிழா: பாமக-விசிகவினா் இடையே வாக்குவாதம்

திண்டிவனத்தில் மயானக் கொள்ளை ஊா்வலத்தின்போது, பாமக மற்றும் விசிகவினரிடையே வியாழக்கிழமை வாக்குவாதம் ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டம், செஞ்சி சாலையிலுள்ள அருள்மிகு அங்காளம்மன் கோயிலில் மாசித் திருவிழா பு... மேலும் பார்க்க

பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

விழுப்புரம் மாவட்டம் அவலூா்பேட்டை அருகே கணவருடன் இருசக்கர வாகனத்தில் புதன்கிழமை இரவு சென்றபோது பெண் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பின்னால் பைக்கில் வந்த மா்ம நபா் பறித்து சென்றாா். திருவண்ணாமலை மாவட்... மேலும் பார்க்க

செங்குறிச்சி அரசுப் பள்ளியில் மின் பாதுகாப்புப் பயிற்சி

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், செங்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் மின் சிக்கனம் மற்றும் மின் பாதுகாப்பு குறித்த பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு மின் உற்பத்தி ம... மேலும் பார்க்க