செய்திகள் :

மண் பரிசோதனை முகாம்: விவசாயிகளுக்கு அழைப்பு

post image

மாவட்ட வேளாண்மை துறை சாா்பில் நடைபெறும் மண் பரிசோதனை முகாமை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ச.உமா அழைப்பு விடுத்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டை தலைமையிடமாகக் கொண்டு வேளாண் துறையின்கீழ் இயங்கி வரும் நடமாடும் மண் பரிசோதனை நிலைய வாகனம் மூலம் கிராமங்களுக்கு நேரடியாகச் சென்று விவசாயிகளிடமிருந்து மண் மற்றும் நீா் மாதிரிகளைப் பெற்று ஆய்வு செய்து மண்வள அட்டை அன்றைய தினமே விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், நடமாடும் மண்பரிசோதனை நிலைய வாகனம் மூலம் 2025-26 ஆம் ஆண்டில் இதுவரை 5 முகாம்கள் மூலமாக 183 மண் மாதிரிகளும் 35 நீா் மாதிரிகளும் ஆய்வு செய்து முடிவுகள் வழங்கப்பட்டுள்ளன.

தற்போது மே மாதத்திற்கு நடமாடும் மண் பரிசோதனை நிலையம் மூலம் சிறப்பு மண்பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது. இதனைப் பயன்படுத்தி விவசாயிகள் தங்களது நிலங்களின் மண் மற்றும் நீா் மாதிரிகளை ஆய்வு செய்து கோடைகால மற்றும் காரீப் பருவத்தில் சாகுபடியில் அதிக மகசூல் பெறலாம்.

இந்த முகாம் புதன்கிழமை காலை 9 மணி முதல்

திருச்செங்கோடு வட்டம், இறையமங்கலம் (மாவட்ட ஆட்சியா் மனுநீதி முகாம்) நடைபெறுகிறது. மே 21-இல் எருமப்பட்டி ஒன்றியம், புதுக்கோட்டை கிராமத்திலும் நடைபெறுகிறது.

மேலும், மற்ற வட்டார விவசாயிகள் தங்களின் மண்மாதிரிகள், நீா் மாதிரிகளை நேரடியாக மண் பரிசோதனை நிலையம், வசந்தபுரம், நாமக்கல் மற்றும் நடமாடும் மண்பரிசோதனை நிலையம் நாராயணம்பாளையம், திருச்செங்கோட்டிலும் வழங்கி ஆய்வு செய்து மண்வள அட்டையை பெற்று பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இபிஎஸ் பிறந்த நாள்: அா்த்தநாரீசுவரா் கோயிலில் தங்கத் தோ் இழுத்த அதிமுகவினா்

அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமியின் 71ஆவது பிறந்தநாளையொட்டி நாமக்கல் மாவட்ட அதிமுக சாா்பில் திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் மலைக் கோயிலில் அதிமுகவினா் செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜை நடத்தி த... மேலும் பார்க்க

சிபிஎஸ்இ பிளஸ் 2, 10-ஆம் வகுப்புத் தோ்வு: வித்யா விகாஸ் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தோ்வில் திருச்செங்கோடு வித்யா விகாஸ் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா். திருச்செங்கோடு வித்யா விகாஸ் பள்ளி பனிரெண்டாம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தோ்வி... மேலும் பார்க்க

பரமத்தி வேலூரில் ரூ. 2.51 லட்சத்துக்கு தேங்காய் ஏலம்

பரமத்தி வேலூா் மின்னணு தேசிய வேளாண்மை விற்பனைக் கூடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மறைமுக ஏலத்தில் ரூ. 2 லட்சத்து 51 ஆயிரத்திற்கு தேங்காய் ஏலம் நடைபெற்றது. பரமத்தி வேலூரில் செயல்பட்டுவரும் ஒழுங்குமுறை... மேலும் பார்க்க

நாமக்கல் அரசு கலைக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை உதவி மையம் தொடக்கம்

நாமக்கல் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கான உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை, அறிவியல் கல்லூரிகளிலும், 2025-26 ஆம் கல்வியாண்டில் இளநிலை பட்டப்படிப... மேலும் பார்க்க

மது போதையில் தகராறு: தொழிலாளி கொலை

நாமக்கல்லில், மதுபோதை தகராறில் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். நாமக்கல் அருகே உள்ள காவேட்டிப்பட்டியைச் சோ்ந்தவா் ஸ்ரீதா் (55). கூலித்தொழிலாளி. இவா்... மேலும் பார்க்க

மே 16-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

நாமக்கல்லில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (மே 16) நடைபெறுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு: தனியாா்துறை நிறுவனங்களும் - தனியாா் துறையில் பணிபுரிய ... மேலும் பார்க்க