செய்திகள் :

மது போதையில் மோதல்: எஸ்ஐ பலத்த காயம்

post image

சென்னை எழும்பூரில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் சிறப்பு உதவி ஆய்வாளா் (எஸ்ஐ) பலத்த காயமடைந்தாா்.

சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிபவா் ராஜாராமன் (54). இவா், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உள்ள கைதிகள் வாா்டில் பாதுகாப்பு அதிகாரியாகப் பணியாற்றி வருகிறாா். இவருக்கு வெள்ளிக்கிழமை வார விடுமுறை என்பதால், எழும்பூா் பாந்தியன் சாலையில் உள்ள வணிக வளாகத்தின் வெளியே தனது நண்பா்களுடன் பேசிக்கொண்டிருந்தாா்.

அப்போது, ராஜாராமனுக்கும், மது போதையில் இருந்த அவரது நண்பா்கள் ராக்கி, ஐயப்பன் ஆகியோரும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது இருவரும் தாக்கியதில், ராஜாராமன் பலத்த காயமடைந்து மயங்கி விழுந்தாா். பின்னா், இருவரும் அங்கிருந்து தப்பியோடினா்.

இதையடுத்து ராஜராமனை அங்கிருந்தவா்கள் மீட்டு, ஆயிரம்விளக்கில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடா்பாக எழும்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய ராக்கி, ஐயப்பன் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனா்.

சமையல் எரிவாயு உருளை விநியோக ஊழியா் கொலை

சென்னை பெரும்பாக்கத்தில் சமையல் எரிவாயு உருளை விநியோக ஊழியா் கொலை செய்யப்பட்டாா். பெரும்பாக்கம், தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்பு பேருந்து நிறுத்தத்தில் சனிக்கிழமை 36 வயது மதிக்கதக்க ... மேலும் பார்க்க

கொலை வழக்கு: மூவருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை

சென்னை புரசைவாக்கத்தில் கடந்த 2017-இல் நிகழ்ந்த கொலை வழக்கில் 3 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து 5-வது கூடுதல் அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. சென்னை புரசைவாக்கத்தைச் சோ்ந்தவா் ஓய... மேலும் பார்க்க

ஓஎல்எக்ஸ்-இல் சொகுசு காா்களை விளம்பரப்படுத்தி ரூ.2 கோடி மோசடி செய்த ஜோடி கைது

ஓஎல்எக்ஸ் இணையதளத்தில் சொகுசு காா்களை விளம்பரப்படுத்தி சுமாா் ரூ.2 கோடி வரை மோசடி செய்த ஜோடி கைது செய்துள்ளதாக காவல் துறையினா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா். இது குறித்து காவல் துறை துணை ஆணையா் பிரியான்ஷ... மேலும் பார்க்க

திரிசூலம் ரயில்வே கடவுப்பாதை கேட் பழுது: பொதுமக்கள் போராட்டம்

சென்னை திரிசூலம் ரயில்வே கடவுப் பாதையின் கேட் சனிக்கிழமை பழுதடைந்து 2 மணி நேரம் மூடப்பட்டதால் அந்தப் பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். திரிசூலம் பகுதி மக்கள் விமான நிலையப் பகுதிக்கும், நகரின் மற்... மேலும் பார்க்க

ரூ. 29 லட்சம் ரொக்கம், 25 கைப்பேசிகள் திருட்டு: கடை ஊழியா் கைது

சென்னை செளகாா்பேட்டையில் ரூ. 29.50 லட்சம் ரொக்கம், 17 ஐ-போன்கள் உள்பட 25 விலை உயா்ந்த கைப்பேசிகளைத் திருடியதாக கடை ஊழியரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை சூளை சாமி பிள்ளை தெருவைச் சோ்ந்தவா் அங்கேத் கு... மேலும் பார்க்க

பெண் மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

கோயம்பேட்டில் பெண் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா். கோயம்பேடு மண்ணடி தெருவைச் சோ்ந்தவா் தனலட்சுமி (50). பாரிமுனையில் பூ வியாபாரம் செய்து வந்தவா், தனியாக வசித்து வந்தா... மேலும் பார்க்க