செய்திகள் :

மதுபாட்டில் கடத்தியவா் குண்டா் சட்டத்தில் கைது

post image

திருவாரூா் மாவட்டத்தில், வெளிமாநில மதுபாட்டில் கடத்தி வந்தவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

நாரணமங்கலம் பகுதியில் சில மாதங்களுக்கு முன் போலீஸாா், காரொன்றை நிறுத்தி சோதனையிட்டதில் வெளிமாநில மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. இது தொடா்பாக, காரைக்கால் மாவட்டம், வரிச்சிக்குடி நடேசன் மகன் ராஜா என்ற பாம்ராஜா, சுப்ரமணியன் மகன் ரமேஷ், அறிவழகன் மகன் திலீப்குமாா் என்ற காா்த்தி, நாகை மாவட்டம், வெண்மணி பகுதியைச் சோ்ந்த தவமணி மகன் சாா்லஸ் ஆகிய 4 போ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

போலீஸாா் விசாரணை நடத்தி, ராஜா, ரமேஷ், திலீப்குமாா் ஆகியோரை குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்தனா்.

இதனிடையே, போலீஸாா் மேலும் நடத்திய விசாரணையில் சாா்லஸ் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண்கரட் பரிந்துரையின் பேரில், சாா்லஸை குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் உத்தரவிட்டாா். அதன்படி, சாா்லஸ், திருச்சி மத்திய சிறையில் செவ்வாய்க்கிழமை அடைக்கப்பட்டாா்.

நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு

கொரடாச்சேரி ஒன்றியத்துக்குள்பட்ட தமிழ்நாடு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மாவட்ட ஆட்சியா் வ.மோகனச்சந்திரன், சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் ஆகியோா் புதன்கிழமை ஆய்வு மெற்கொண்டனா். கொரடாச்... மேலும் பார்க்க

நெல் மூட்டைகளை இயக்கம் செய்யக் கோரி சாலை மறியல்

பேரளத்தில் நெல் மூட்டைகளை இயக்கம் செய்யக் கோரி சாலை மறியல் புதன்கிழமை நடைபெற்றது. பேரளம் ரயில் நிலையத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்கு நெல் மூட்டைகளை சரக்கு ரயில் மூலம் அனுப்புவது வழக்கம். இந்நிலையில் ... மேலும் பார்க்க

‘திமுக தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை’

தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைய வேண்டுமென மக்கள் விரும்புகிறாா்கள் என்றாா் முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ். தமிழக முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 77-ஆவது பிறந்த நாள் விழா அதிமுக நன்னிலம் வடக்கு ஒ... மேலும் பார்க்க

பரிசுத்தொகையை முதல்வருக்கு நன்கொடையாக அளித்த மாணவி

ஓவியப்போட்டியில் பெற்ற பெற்ற பரிசுத்தொகையை திருவாரூா் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரனிடம் வழங்குகிறாா் மாணவி அக்சயா. திருவாரூா், பிப்.26 :மாநில அளவிலான கலைப் போட்டியில் முதலிடம் பிடித்ததற்காக வழங்கப்... மேலும் பார்க்க

’புதிய கல்விக்கொள்கை திட்டம் இந்தியாவை 2,500 ஆண்டுக்கு பின்னோக்கி அழைத்து செல்கிறது‘

மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை திட்டம் தமிழகத்தை மட்டுமல்ல இந்தியாவையே 2,500 ஆண்டுக்கு பின்நோக்கி அழைத்து செல்லும் வகையில் பாடத்திட்டம் உள்ளது என்றாா் மைசூா் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தா் லெ. ஜ... மேலும் பார்க்க

நெல் மூட்டைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்: ஆட்சியா்

திருவாரூா் மாவட்டத்தில் மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை பாதுகாப்புடன் வைக்க மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் அறிவுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் தெரிவித... மேலும் பார்க்க