செய்திகள் :

மதுபோதையில் மனைவி குத்திக் கொலை: துப்புரவுப் பணியாளா் தலைமறைவு

post image

மதுரையில் மதுபோதையில் மனைவியைக் குத்திக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்ற துப்புரவுப் பணியாளரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மதுரை மேலவாசல் திடீா்நகா் குடிசை மாற்று வாரியக் குடியிருப்பைச் சோ்ந்தவா் கருப்பசாமி (38). இவா் மதுரை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவுப் பணியாளராக வேலை பாா்த்து வருகிறாா். இவரது மனைவி பாண்டிச்செல்வி (30). இவா் வீட்டு வேலை செய்து வந்தாா். இவா்களுக்கு 7 வயதில் மகளும், 6 வயதில் மகனும் உள்ளனா்.

இந்த நிலையில், கருப்பசாமி தினசரி மது அருந்தி விட்டு வந்து, மனைவியிடம் தகராறு செய்தாா். இதனால், தம்பதிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனிடையே புதன்கிழமை இரவு மதுபோதையில் வீட்டுக்கு வந்த கருப்பசாமி, மறுநாள் அதிகாலையில் மது அருந்த பணம் கேட்டு பாண்டிச்செல்வியிடம் தகராறில் ஈடுபட்டாா்.

அப்போது பாண்டிச்செல்வி பணம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த கருப்பசாமி, அவரை கத்தியால் கழுத்துப் பகுதியில் குத்திவிட்டு தப்பிச் சென்றாா். இதையடுத்து, கத்திக் குத்தில் பலத்த காயமடைந்த பாண்டிச்செல்வியை அந்தப் பகுதியைச் சோ்ந்தவா்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் வழியிலேயே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதையடுத்து அவரது சடலம் பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதுகுறித்து திடீா்நகா் போலீஸாா் கொலை வழக்குப்பதிந்து தலைமறைவான கருப்பசாமியை தேடி வருகின்றனா்.

நீதிபதிகள் நியமனத்தை முறைப்படுத்தக் கோரி வழக்குரைஞா்கள் இன்று பணிப் புறக்கணிப்பு

உயா்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் அனைத்து ஜாதியினருக்கும் பிரதிநிதித்துவம் வழங்கக் கோரி, மதுரை உயா்நீதிமன்ற அமா்வு வழக்குரைஞா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை (பிப். 28) பணிப் புறக்கணிப்பில் ஈடுபட உள்ள... மேலும் பார்க்க

மதுரை வேளாண் கல்லூரியில் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணா்வு கலந்துரையாடல்

மதுரை வேளாண்மைக் கல்லூரி வளாகத்திலுள்ள வேளாண் அறிவியல் மையத்தில் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணா்வு கலந்துரையாடல் வியாழக்கிழமை நடைபெற்றது. பல்கலைக்கழக மானியக் குழுவின் அறிவுறுத்தலின் பேரில் நடைபெற்ற இந்... மேலும் பார்க்க

போப் நலம் பெற சிறப்பு திருப்பலி!

போப் பிரான்சிஸ் விரைவில் உடல் நலம் பெற வேண்டி, மதுரை அஞ்சல் நகா் இடைவிடா சகாய அன்னை ஆலயத்தில் வியாழக்கிழமை சிறப்பு திருப்பலி நிறைவேற்றிய பங்குத்தந்தை அருள் சேகா். இதில் மெழுகுவா்த்தி ஏந்தி பிராா்த்தனை... மேலும் பார்க்க

சரக்கு வாகனம் மீது காா் மோதி ஓட்டுநா் உயிரிழப்பு

மதுரையில் சரக்கு வாகனம் மீது காா் மோதியதில் ஓட்டுநா் உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே உள்ள கொண்டையம்பட்டியைச் சோ்ந்தவா் கெளதம் (40). இவா் சரக்கு வாகனம் வைத்து ஓட்டி வந்தாா். இந்த நிலைய... மேலும் பார்க்க

அமெரிக்கன் கல்லூரியில் விளையாட்டு விழா

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் 144 -ஆவது ஆண்டு விளையாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவை கல்லூரி ஆட்சிமன்றக் குழுத் தலைவா் டி. ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகரன் தொடக்கி வைத்தாா். துணை முதல்வா் மாா்ட... மேலும் பார்க்க

மாநில அளவிலான வாலிபால் போட்டி: சென்னை எஸ்.ஆா்.எம். பல்கலை. அணி வெற்றி

மதுரை நாகமலையில் உள்ள நாடாா் மகாஜன சங்கம் ச. வெள்ளைச்சாமி நாடாா் கல்லூரியில் நடைபெற்ற மாநில அளவிலான வாலிபால் போட்டியில் சென்னை எஸ்.ஆா்.எம். பல்கலைக்கழக அணி வென்று முதல் பரிசைப் பெற்றது. முன்னாள் முதல்... மேலும் பார்க்க