செய்திகள் :

மதுப்பழக்கம்: வேலைக்குச் செல்லாமல் மனைவியிடம் தகராறு; கண்டித்த மாமியாரை வெட்டிக் கொலை செய்த இளைஞர்

post image

நெல்லை அருகேயுள்ள சுத்தமல்லியைச் சேர்ந்தவர் செல்லப்பா. இவரது மனைவி வள்ளியம்மாள். இவர்களுக்கு துர்காதேவி என்ற மகளும், விக்னேஷ் என்ற மகனும் உள்ளனர்.

இதில் துர்காதேவி கீழச்செவலைச் சேர்ந்த ஆறுமுகநயினார் என்பவரை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். விக்னேஷுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணமாகி பெற்றோருடன் வசித்து வருகிறார்.

ஆறுமுகநயினாருக்கு மதுப்பழக்கம் இருந்துள்ளது. இதனால், சரியாக வேலைக்குச் செல்லாமல் மனைவியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

மனைவியை அடித்து துன்புறுத்தி பெற்றோர் வீட்டுக்கு அனுப்பி வைப்பதும் பின்னர் அவர்கள் சமரசம் செய்து வைப்பதும் வழக்கமாக நடந்து வந்துள்ளது.

கொலை செய்யப்பட்ட வள்ளியம்மாள்

இதனால் ஆறுமுகநயினாரின் மாமியாரான வள்ளியம்மாள் அவரை அடிக்கடி கண்டித்து வந்துள்ளார். இந்த நிலையில், மீண்டும் கணவன், மனைவியிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து துர்காதேவி தனது பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று மாலை தனது மனைவியை பார்ப்பதற்காக துர்காதேவியின் வீட்டிற்கு ஆறுமுகநயினார் வந்துள்ளார்.

அப்போது வீட்டின் முற்றத்தில் படுத்திருந்த வள்ளியம்மாள், ஆறுமுகநயினாரை அவதூறாகப் பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர், அரிவாளால் வள்ளியம்மாளை சரமாரியாக வெட்டியுள்ளார்.

இதில், அவருக்கு தலை, வயிறு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த வெட்டு விழுந்த நிலையில் உயிரிழந்தார். இதை தடுக்கவந்த துர்காதேவிக்கும் அரிவாள் வெட்டு விழுந்து, காயமடைந்தார்.

வள்ளியம்மாள் வெட்டப்பட்ட சம்பவம் குறித்து அவரது மகள் துர்காதேவி போனில் தந்தை செல்லப்பாவிற்கு தகவல் கூறியுள்ளார். இதையடுத்து அவசர அவசரமாக வீட்டிற்கு சென்றுள்ளார் செல்லப்பா. அங்கு போலீஸார் விசாரணை நடத்தி கொண்டிருந்தனர்.

போலீஸ் விசாரணை

அப்போது செல்லப்பாவிடம் போனில் பேசிய ஆறுமுகநயினார், “என்ன மாமா எப்படி இருக்கீங்க? வீட்டுக்குப் போனீங்களா ஏதும் விசேஷம் உண்டா?” என கேள்வி கேட்டு மாமியார் உயிருடன் உள்ளாரா இல்லையா என்பதை கேட்டு தெரிந்து கொள்ள முயன்றுள்ளார்.

பின்னர்தான் ஆறுமுகநயினார் தன் மனைவி வள்ளியம்மாளை கொலை செய்துவிட்டு தப்பியோடியது தெரிய வந்தது. வீட்டில் ஹாயாக கட்டிலில் படுத்திருந்த ஆறுமுகநயினாரை போலீஸார் கைது செய்தனர்.

Scam: டிஜிட்டல் கைது, சைபர் அடிமை, பார்ட்-டைம் ஜாப், கடன் செயலி; எத்தனை மோசடி, எப்படி தப்பிக்கலாம்?

இணையதள சேவைகள் மற்றும் போதிய விழிப்புணர்வு இல்லாமை காரணமாக பல வழிகளில் இணைய மோசடிகள் நடைபெற்றுவருகின்றன.இதைத் தடுக்கும் வகையில் அரசு மற்றும் காவல்துறை பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து ... மேலும் பார்க்க

பீகார்: பிரசாந்த் கிஷோர் கட்சி நிர்வாகி துப்பாக்கியால் சுட்டு, கார் ஏற்றி படுகொலை - என்ன நடந்தது?

பீஹாரில் வரும் 6 மற்றும் 11ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் ஆளும் கட்சி தொடர்ந்து நிதீஷ் குமாரை முதல்வர் வேட்பாளராக நிறுத்தியுள்ளது. எதிர்க்கட்சிகள் ராஷ்... மேலும் பார்க்க

பல்லை பிடுங்கிய வழக்கில் 16 முறையாக ஆஜராகாத பல்வீர்சிங்; பிசிஆர் கோர்ட்டுக்கு மாற்றக் கோரிக்கை

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் துணைக் காவல் கண்காணிப்பாளராக ஐ.பி.எஸ். அதிகாரி பல்வீர்சிங் பணியாற்றிய போது, பல்வேறு வழக்குகளில் விசாரணைக்காக அழைத்து வரப்பட்டவர்களின் பற்களை பிடுங்கி கொடூரமாக சித்திரவத... மேலும் பார்க்க

கரூர்: 3D கேமரா, சாலையை அளக்கும் பணி! - இரண்டாவது நாளாக CBI அதிகாரிகள் விசாரணை!

கரூர், வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றி கழகம் சார்பில் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி அந்த கட்சியின் தலைவர் விஜய் மேற்கொண்ட மக்கள் சந்திப்பு கூட்டத்தில் உரையாற்றும் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41... மேலும் பார்க்க

திருச்சி: இன்டர்வியூ-க்கு சென்ற இளம்பெண் எரிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு; போலீஸ் தீவிர விசாரணை

திருச்சி மாவட்டம், சீனிவாச நகர் பகுதியைச் சேர்ந்தவர் மீரா ஜாஸ்மின் (வயது: 22). கல்லூரி படிப்பை முடித்த மீரா ஜாஸ்மின், வேலை தேடி விண்ணப்பித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று வேலை விஷயமாக நேர்முகத் தே... மேலும் பார்க்க

புனே: "ரூ.10,000-க்கு 10 ஆண்டு கொத்தடிமைகளாக இருந்தோம்" - கரும்பு வெட்டும் 27 தொழிலாளர்கள் மீட்பு

மகாராஷ்டிராவில் புனே, சோலாப்பூர் போன்ற மாவட்டங்களில் அதிக அளவு கரும்பு விளைவிக்கப்படுகிறது. கரும்பு வெட்டுவதற்காக தொழிலாளர்கள் அண்டை மாவட்டத்தில் இருந்து அழைத்து வரப்படுவது வழக்கம்.அது போன்று புனே அரு... மேலும் பார்க்க