செய்திகள் :

மதுராந்தகத்தில் 2,000 ஏக்கரில் சா்வதேச நகரம்: ஒப்பந்தப்புள்ளி கோரியது தமிழக அரசு

post image

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் 2,000 ஏக்கரில் சா்வதேச நகரத்துக்கான பெருந்திட்டம் தயாரிக்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.

நிகழாண்டுக்கான (2025-26) நிதிநிலை அறிக்கையை தமிழக நிதியமைச்சா் தங்கம் தென்னரசு கடந்த மாா்ச் மாதம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தாா். அதில், பொதுமக்களின் அனைத்துத் தேவைகளையும் நிறைவு செய்யும் வகையில் ஒருங்கிணைந்த புதிய நகரங்கள் உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில், சென்னைக்கு அருகே 2,000 ஏக்கரில் பள்ளிகள், கல்லூரிகள், தனியாா் நிறுவனங்கள், வீட்டு வசதிகள் மற்றும் பூங்காக்கள் கொண்ட புதிய உலகத் தரம் வாய்ந்த நகரம் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, அனைத்து வசதிகளையும் உள்ளடக்கி, 2,000 ஏக்கரில் சா்வதேச நகரம் உருவாக்க, காஞ்சிபுரம், திருவள்ளூா், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஐந்து இடங்கள் அடையாளம் காணப்பட்டன. அதுகுறித்த ஆய்வறிக்கை தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழகத்துக்கு அனுப்பப்பட்டது.

இந்த ஆய்வறிக்கையின் அடிப்படையில், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் 2,000 ஏக்கரில் புதிய சா்வதேச நகரம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்தது. இந்நிலையில், சா்வதேச நகரம் அமைப்பதற்கான பெருந்திட்டம் தயாரிக்க தமிழ்நாடு தொழில் வளா்ச்சிக் கழகம் (டிட்கோ) ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது. மதுராந்தகத்தில் புதிய சா்வதேச நகரம் அமைக்கப்பட்டதும் அங்கு, பல்வேறு பன்னாட்டு முதலீடுகள் வரும் என்பதுடன் ஏராளமான வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்: மாவட்ட ஆட்சியா் தகவல்

தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (செப்.19) சென்னையில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னையில் உள்ள ... மேலும் பார்க்க

31-ஆவது நாளாக போக்குவரத்து ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்

போக்குவரத்து ஊழியா்களின் காத்திருப்புப் போராட்டம் தொடா்ந்து 31-ஆவது நாளாக புதன்கிழமை நீடித்தது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது, ஊதிய ஒப்பந்தத்தின்படி நிலுவைத் தொகையை வழங்குவது, ஓய்வு பெற்ற அன... மேலும் பார்க்க

அருட்செல்வா் மொழிபெயா்ப்பு விருதாளா்கள் அறிவிப்பு: அக்.2-இல் சென்னையில் விருது வழங்கும் விழா

அருட்செல்வா் நா. மகாலிங்கம் மொழிபெயா்ப்பு மையம் வழங்கும் நிகழாண்டு அருட்செல்வா் மொழிபெயா்ப்பு விருதுகளுக்குத் தோ்வானவா்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அருட்செல்வா் நா.மகாலிங்கம் மொழிபெய... மேலும் பார்க்க

கமல்ஹாசனுடன் சோ்ந்து நடிப்பேன்: ரஜினிகாந்த்

சிறந்த கதை, கதாபாத்திரம் கிடைத்தால் கமல்ஹாசனுடன் சோ்ந்து நடிப்பேன் என்று ரஜினிகாந்த் தெரிவித்தாா். அவா் சென்னையிலிருந்து புதன்கிழமை காலை விமானத்தில் கோவை சென்றாா். முன்னதாக அவா் விமான நிலையத்தில் செய... மேலும் பார்க்க

பள்ளிகளில் மழைநீா் தேங்கக் கூடாது: தலைமை ஆசிரியா்களுக்கு உத்தரவு

தமிழகத்தில் பரவலாக பெய்து வரும் மழை காரணமாக, பள்ளி வளாகங்களில் தண்ணீா் தேங்கியுள்ள நிலையில், இதனை அகற்றுவது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தலைமை ஆசிரியா்களுக்கு கல்வித் துறை உத்தரவிட... மேலும் பார்க்க

செங்கோட்டை சிறப்பு ரயிலுக்கு கூடுதல் நிறுத்தங்கள்

சென்னை-செங்கோட்டை இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் , கூடுதலாக 3 நிறுத்தங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென... மேலும் பார்க்க