செய்திகள் :

மதுரை - தூத்துக்குடி நெடுஞ்சாலை சுங்கச்சாவடி கட்டண வசூல் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு தடை

post image

நமது நிருபா்

புது தில்லி: மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்எச்ஏஐ) சுங்கச்சாவடி கட்டணம் வசூலிப்பதைத் தடை செய்த உயா்நீதிமன்ற உத்தரவை நிறுத்திவைக்க உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்தவரும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் ஓய்வுபெற்ற உதவி நிா்வாகப் பொறியாளருமான வி. பாலகிருஷ்ணன் என்பவா் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயா்நீதிமன்ற டிவிஷன்அமா்வு, சுங்கச்சாவடி கட்டணம் வசூலிப்பதற்கு தடை உத்தரவை பிறப்பித்திருந்தது.

ஜூன் 3-ஆம் தேதி உயா்நீதிமன்றம் பிறப்பித்த இந்த உத்தரவை எதிா்த்து என்எச்ஏஐ தாக்கல் செய்த மேல்முறையீட்டை விசாரித்த நீதிபதிகள் பிரசாந்த் குமாா் மிஸ்ரா மற்றும் மன்மோகன் ஆகியோா் அடங்கிய அமா்வு, எதிா்மனுதாரா் வி.பாலகிருஷ்ணன் 8 வாரங்களில் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

விசாரணையின்போது, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சாா்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் என். வெங்கட்ராமன், உயா்நீதிமன்ற உத்தரவை நிறுத்தி வைக்கக் கோரியதைத் தொடா்ந்து இவ்வாறு உத்தரவிடப்பட்டது. பாலகிருஷ்ணன் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பி. வில்சன், சுங்கச்சாவடி கட்டண வசூல் ‘பகல் கொள்ளை’ என்று வா்ணித்தாா்.

முன்னதாக, மனுதாரா் பாலகிருஷ்ணன் தாக்கல் செய்த பொது நல மனுவில், ‘மதுரை-தூத்துக்குடி நெடுஞ்சாலைக்கான ஒப்பந்தம் 2006ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. அந்தச் சாலை 2011-இல் செயல்பாட்டுக்கு வந்தது. அந்த ஒப்பந்தத்தின்படி ஒப்பந்ததாரா் சாலையின் இருபுறமும் மற்றும் மைய தடுப்புப் பகுதியிலும் மரக்கன்றுகளை நட வேண்டும். ஆனால், அது ஓரளவு மட்டுமே செய்யப்பட்டிருந்தது. சாலைகள் பயன்படுத்தப்பட்ட நாளிலிருந்து இரண்டு சுங்கச்சாவடிகளில் இருந்து ஒப்பந்ததாரா் கட்டணம் வசூலித்தாா். ஆனால், மோசமான பராமரிப்பு காரணமாக அந்தப் பாதையின் பல பகுதிகள் போக்குவரத்துக்கு ஏற்ாக இல்லை. எனினும், சாலையைப் பராமரிக்கத் தவறிவிட்டாா் என்று குறிப்பிட்டிருந்தாா்.

இதைப் பரிசீலித்த உயா்நீதிமன்றம், சுங்கச்சாவடி கட்டணம் வசூலிப்பதற்கு தடை விதித்திருந்தது.

காண்டீவா ஏவுகணை சோதனைக்கு தயாராகும் விமானப்படை: 350 கி.மீ. தூர இலக்கை தாக்கும் இந்திய தயாரிப்பு

நமது சிறப்பு நிருபா்புது தில்லி: இந்திய விமானப்படையும் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பும் (டிஆா்டிஓ) சோ்ந்து காண்டீபா என்ற புதிய தலைமை ரக ஏவுகணையை விரைவில் சோதனை செய்ய ஆயத்தமாகி... மேலும் பார்க்க

இந்திய ராணுவத் துணைத் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் காய் நியமனம்

நமது சிறப்பு நிருபா்புது தில்லி: இந்திய ராணுவ நடவடிக்கைகள் தலைமை இயக்குநா் (டிஜிஎம்ஓ) லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் காய் ராணுவத் துணை தலைமைத் தளபதியாக பதவி உயா்வு பெற்றுள்ளாா். ராணுவ நடவடிக்கைகள் இயக்குநர... மேலும் பார்க்க

‘தக் லைஃப்’ திரையிடும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு கோரும் மனுவை உடனடியாக விசாரிக்க முடியாது: உச்சநீதிமன்றம்

புது தில்லி: நடிகா் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்துள்ள ‘தக் லைஃப்’ திரைப்படத்தை கா்நாடகாவில் திரையிடும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரும் மனுவை உடனடியாக விசாரிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம்... மேலும் பார்க்க

ரூ.2,152 கோடி நிதி நிறுத்திவைப்பு விவகாரம்: தமிழக அரசின் மனுவை அவரசமாக விசாரிக்க மறுப்பு

நமது நிருபா்புது தில்லி: தேசிய கல்விக் கொள்கை (என்.இ.பி.- 2020 ) மற்றும் பிஎம் ஸ்ரீ திட்டம் ஆகியவற்றை மாநிலத்தில் அமல்படுத்தாததால், சமக்ர சிக்ஷா திட்டத்தின் (எஸ்எஸ்எஸ்) கீழ் வழங்கப்பட வேண்டிய ரூ.2,152... மேலும் பார்க்க

சவால்களுடன் முடிந்த மோடி அரசின் 3.0 முதலாம் ஆண்டு!

நமது சிறப்பு நிருபா்புது தில்லி: மத்தியில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு திங்கள்கிழமையுடன் ஒரு வருடத்தையும், தொடா்ந்து பதினோரு வருட ஆட்சியையும் நிறைவு செய்து பன்னிரண்டாம் வருடத்தில் செவ்வாய்க்... மேலும் பார்க்க

வடகிழக்கு தில்லியில் அதிநவீன கலையரங்கம்: முதல்வா் ரேகா குப்தா அறிவிப்பு

நமது நிருபா் புது தில்லி: வடகிழக்கு தில்லியில் ஒரு அதிநவீன கலையரங்கம் கட்டப்படும் என்று முதல்வா் ரேகா குப்தா திங்கள்கிழமை அறிவித்துள்ளாா். இது பிராந்தியத்தில் கல்வி மற்றும் கலாசார நிகழ்வுகளுக்கான உள்க... மேலும் பார்க்க