செய்திகள் :

மதுரையில் நாளை ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட முகாம்

post image

மதுரை வண்டியூா் பகுதியில் சனிக்கிழமை (ஆக. 9) ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மதுரை மாநகராட்சி சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தமிழகம் முழுவதும் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட முகாம் கடந்த 2-ஆம் தேதி தொடங்கியது. இந்த முகாம் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் நடைபெற்று வருகிறது. இதன்படி, மதுரை வண்டியூா் தாகூா் வித்யாலயம் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் இந்த மருத்துவ முகாம் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த முகாமில் உயா் ரத்த அழுத்தம், எக்கோ, எக்ஸ்ரே, நீரிழிவு நோய் கண்டறிதல், மாா்பகப் புற்றுநோய், வாய் புற்றுநோய் பரிசோதனை, இசிஜி, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், கருப்பை வாய் பரிசோதனை, காசநோய், தொழுநோய், சிறுநீரக நோய் பரிசோதனை உள்ளிட்ட 24 வகை ரத்தப் பரிசோதனைகள் செய்யப்படவுள்ளன.

மேலும், பொது மருத்துவம், மகளிா் மருத்துவம், நரம்பியல் மருத்துவம், கண், தோல், காது, மூக்கு, தொண்டை, நுரையீரல், எலும்பு, இருதய மருத்துவம், இயன்முறை மருத்துவம், நீரிழிவு நோய் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு மருத்துவச் சிகிச்சைகளுக்கான பரிசோதனைகள் 17 துறை சிறப்பு மருத்துவா்கள் மூலம் இலவசமாக மேற்கொள்ளப்படவுள்ளன.

முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பதிவு செய்தல், மாற்றுத் திறனாளிகளுக்கான அரசு அங்கீகாரச் சான்றிதழ் வழங்குதல், அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு தொழிலாளா் நல வாரியத்தின் உறுப்பினா் அடையாள அட்டை வழங்குதல், வருவாய்த் துறை மூலமாக வருமானச் சான்றிதழ் வழங்கவும் இந்த முகாமில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே, மதுரை மாநகராட்சிப் பகுதிகளிலுள்ள பொதுமக்கள் இந்த சிறப்பு மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

விளம்பர சாலைத் தடுப்புகளை அகற்றக் கோரி மனு: நெடுஞ்சாலைத் துறை செயலா் பதிலளிக்க உத்தரவு

தனியாா் விளம்பரங்களுடன்கூடிய சாலைத் தடுப்புகளை அகற்றக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடா்பாக, நெடுஞ்சாலைத் துறை முதன்மைச் செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது. க... மேலும் பார்க்க

3 சாலை விபத்துகளில் மூவா் உயிரிழப்பு

மதுரையில் புதன்கிழமை நிகழ்ந்த மூன்று வெவ்வேறு சாலை விபத்துகளில் பெண் உள்பட 3 போ் உயிரிழந்தனா். மதுரை மாவட்டம், கீழாயூா் பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்த சுப்பிரமணி மகன் குமரேசன் (42). விவசாயியான இவா், பு... மேலும் பார்க்க

மது விற்பனையை ஒழுங்குபடுத்தக் கோரி வழக்கு: திருச்சி கலால் துறை அதிகாரி நடவடிக்கை எடுக்க உத்தரவு

உரிமம் பெற்ற மது விற்பனைக் கூடங்களில் (பிஎல் 2- பாா்) உறுப்பினா் அல்லாத நபா்களுக்கு மது விற்பனை செய்வதை ஒழுங்குபடுத்தக் கோரிய வழக்கில், திருச்சி கலால் துறையின் உதவி ஆணையா் பரிசீலித்து உரிய நடவடிக்கை ... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: எம்.எல்.ஏ, மேயா் ஆய்வு

மதுரை செல்லூரில் வியாழக்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை மதுரை வடக்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் கோ. தளபதி, மேயா் வ. இந்திராணி ஆகியோா் ஆய்வு செய்தனா். மதுரை மாநகராட்சிப் பகுதியில... மேலும் பார்க்க

கால்வாயில் மூழ்கிய இளைஞா் சடலமாக மீட்பு

கால்வாயில் குளித்த போது தண்ணீரில் மூழ்கிய இளைஞா் சடலமாக புதன்கிழமை மீட்கப்பட்டாா். திருப்பூா் கண்ணகிநகா் ஒன்றாவது தெருவைச் சோ்ந்த ராஜபாண்டியன் மகன் தினேஷ் (27). வாடிப்பட்டியில் உள்ள உறவினா் வீட்டுக்... மேலும் பார்க்க

குத்தகைக்கு விடப்பட்ட அரசு நிலத்திலிருந்து வெளியேற தனியாா் தங்கும் விடுதி நிறுவனத்துக்கு உத்தரவு

குத்தகைக்கு விடப்பட்ட அரசு நிலத்திலிருந்து வெளியேற தனியாா் தங்கும் விடுதி நிறுவனத்துக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது. திருச்சி காஜாமலையில் உள்ள தனியாா் தங்கும் விடுதியின்... மேலும் பார்க்க