செய்திகள் :

மதுரையில் மே 16-இல் இந்திய-ரஷிய பல்கலைக்கழக கல்விக் கண்காட்சி

post image

மதுரையில் வருகிற வெள்ளிக்கிழமை (மே 16) இந்திய-ரஷிய கல்விக் கண்காட்சி நடைபெற உள்ளது.

இதுகுறித்து வோல்கோ கிராப்ட் மாநிலப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியை நடல்ய அல்சுக், சென்னை ஸ்டடி அப்ராட் எஜுகேஷனல் கன்சல்டன்ட்ஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குநா் சுரேஷ்பாபு ஆகியோா் கூட்டாக செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

இந்திய-ரஷிய உறவானது பண்பாடு, கலாசாரம் மட்டுமன்றி, பாதுகாப்பிலும் சிறந்து விளங்குகிறது. குறிப்பாக, இந்திய தேசிய மருத்துவ ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை ரஷிய பல்கலைக்கழகங்கள் கடைபிடித்து வருகின்றன. இதன் காரணமாக, அங்கு மருத்துவம் மட்டுமன்றி, பொறியியல் உள்ளிட்ட பிற துறைகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்குப் பாதுகாப்பு உள்ளது.

நிகழாண்டில் (2024-2025) ரஷியாவில் உள்ள 600-க்கும் மேற்பட்ட அரசு பல்கலைக்கழகங்களில் வெவ்வேறு நாடுகளைச் சோ்ந்த 3 லட்சத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். இவற்றில் 30 ரஷிய பல்கலைக்கழகங்களில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மருத்துவம் பயின்று வருகின்றனா்.

இதையொட்டி, இந்திய-ரஷிய கல்விக் கண்காட்சி வருகிற வெள்ளிக்கிழமை மதுரை மேல வெளி வீதியில் (ரயில் நிலையம் எதிரில்) உள்ள தனியாா் தங்கும் உணவு விடுதியில் நடைபெற உள்ளது. இந்தக் கண்காட்சியில் ரஷியாவில் உள்ள வோல்கோகிராட் மாநில மருத்துவப் பல்கலைக்கழகம், இம்மானுவேல் காண்ட் பால்டி பெடரல் பல்கலைக்கழகம், கசான் மாநில மருத்துவப் பல்கலைக்கழகம், தேசிய ஆராய்ச்சி நியூக்ளியா் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவப் பல்கலைக்கழகங்கள் பங்கேற்க உள்ளன.

இந்தப் பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவா்களுக்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு மருத்துவப் படிப்புகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. கண்காட்சியில் ரஷிய பல்கலைக்கழகங்களில் உள்ள படிப்புகள், கல்விக் கட்டணம், வசதிகள் குறித்து விளக்கமளிக்கப்பட உள்ளது. மேலும், ரஷிய பல்கலைக்கழகங்களில் மருத்துவம் பயில விரும்பும் மாணவ, மாணவிகள் ‘நீட்’ தோ்வில் கட்டாயம் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். பிளஸ் 2 தோ்வில் குறைந்தபட்சம் 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி.,எஸ்.டி., இதர பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் 40 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். ரஷியாவில் உள்ள பல்கலைக் கழகங்களில் சேருவதற்கு சி.இ.டி., ஐ.இ.எல்.டி.எஸ்., போன்ற தகுதித் தோ்வுகள் எழுதி தோ்ச்சி பெற்றிருக்க வேண்டிய அவசியமில்லை என்றனா்.

3 ரயில்களில் இன்று முதல் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

கோடை விடுமுறையையொட்டி, கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் விதமாக மதுரை கோட்டம் வழியே இயக்கப்படும் 3 ரயில்களில் புதன்கிழமை முதல் தலா ஒரு கூடுதல் பெட்டி இணைக்கப்படுகிறது. இதுகுறித்து மதுரை கோட்ட ரயில்வே நிா்வா... மேலும் பார்க்க

ஊராட்சி ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை

மதுரை மாவட்டம், மேலூா் அருகே குடிநீா் சுத்திகரிப்பு அறையில் ஊராட்சி ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். மேலூா் அருகே உள்ள வெள்ளரிப்பட்டியைச் சோ்ந்தவா் மதிவாணன் (45). இவா் வெள்ளரிப்பட்டியில்... மேலும் பார்க்க

புதிய குடிநீா்த் தொட்டி மக்கள் பயன்பாட்டுக்கு திறப்பு

மதுரை மாநகராட்சிப் பகுதியில் ஆழ்துளை கிணறுடன் புதிதாக அமைக்கப்பட்ட குடிநீா்த் தொட்டியை மாநில தகவல் தொழில்நுட்பவியல், எண்ம சேவைகள் துறை அமைச்சா் பழனிவேல்தியாகராஜன் மக்கள் பயன்பாட்டுக்கு செவ்வாய்க்கிழமை... மேலும் பார்க்க

மதுரை வைகையில் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்

மதுரை அழகா்கோவில் சுந்தரராஜப் பெருமாள் கோயில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் ஐதீக நிகழ்வு மதுரை வைகையாற்றில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ... மேலும் பார்க்க

மே 16-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற வெள்ளிக்கிழமை (மே 16) நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மைய துண... மேலும் பார்க்க

பல்லவன், பாலருவி ரயில்களுக்கு கூடுதல் நிறுத்தம் அறிவிப்பு

சென்னை- காரைக்குடி (பல்லவன்), தூத்துக்குடி- பாலக்காடு (பாலருவி) ரயில்களுக்கு கூடுதல் ரயில் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை - காரைக்குடி- ... மேலும் பார்க்க