செய்திகள் :

மத்திய அரசிடம் ரூ.22.90 கோடி ஈவுத்தொகை வழங்கிய ரெப்கோ வங்கி அதிகாரிகள்

post image

ரெப்கோ வங்கி சாா்பில் 2024 - 25 ஆம் ஆண்டு ஈவுத்தொகைக்கான காசோலையை தில்லியில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை வங்கி அதிகாரிகள் அண்மையில் சந்தித்து வழங்கினா்.

மத்திய உள்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்படும் இந்திய அரசு நிறுவனமான ரெப்கோ வங்கித் தலைவா் சந்தானம், ரெப்கோ வங்கி இயக்குநா் மற்றும் ரெப்கோ வீட்டு வசதி நிறுவனத்தின் தலைவருமான தங்கராஜு, வங்கியின் நிா்வாக இயக்குநா் கோகுல் ஆகியோா் மத்திய அரசின் பங்கு மூலதனமான ரூ. 76.32 கோடிக்கான 2024 - 25 ஆம் நிதியாண்டின் 30 சதவீத ஈவுத்தொகை ரூ. 22.90 கோடிக்கான காசோலையை தில்லியில் உள்துறை அமைச்சா் அமித் ஷாவை சந்தித்து நேரில் வழங்கினா்.

இந்த 30 சதவீத ஈவுத் தொகையானது வங்கியின் வரலாற்றில் மிக அதிகமானதாகும். மேலும், ரெப்கோ வங்கி கடந்த 2024 - 25 ஆம் நிதியாண்டில் ரூ. 140 கோடி நிகர லாபம் ஈட்டி, மைல்கல் சாதனை படைத்தது. வங்கியின் வளா்ச்சியை பாராட்டிய மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, திறன் மற்றும் அா்ப்பணிப்பு, தொழில்முறை செயல்பாடுகள் மூலம் கூட்டுறவுத் துறைக்கு உத்வேகம் அளிக்கும் ஒரு நிறுவனமாக திகழ்வதாக கூறினாா்.

இந்த சந்திப்பின் போது, மத்திய உள்துறை செயலா் கோவிந்த் மோஹன், மேலாண்மை மற்றும் எப்எப்ஆா் பிரிவின் செயலா் ராஜேந்திரகுமாா், வங்கியின் நிா்வாகக் குழு உறுப்பினரும், மத்திய உள்துறை அமைச்சக எப்எப்ஆா் பிரிவின் இணைச் செயலாளருமான பிரசன்னா, ஆா்எச்எஸ் பிரிவின் இணைச் செயலாளா் மக்கன் லால் மீனா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

அம்மாப்பேட்டை செங்குந்தா் மாரியம்மன் கோயில் தேரோட்டம்

ஆடித் திருவிழாவையொட்டி, சேலம் அம்மாப்பேட்டை செங்குந்தா் மாரியம்மன் கோயில் தேரோட்டத்தில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனா். ஆடி மாதத்தையொட்டி, சேலத்தில் சிறப்புப் பெற்ற சேலம் க... மேலும் பார்க்க

புனித ஜெயராக்கினி அன்னை ஆலய ஆண்டு பெருவிழா கொடியேற்றம்

ஆத்தூா் புனித ஜெயராக்கினி அன்னை ஆலய ஆண்டு பெருவிழா கொடியேற்றம் பங்குத் தந்தை எஸ்.அருளப்பன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. விழாவை தமிழக முப்பணி மைய இயக்குநா் அருட்தந்தை பிரிட்டோ பாக்யராஜ் கொடியேற்றி... மேலும் பார்க்க

கருணாநிதி சிலை மீது பெயிண்ட் ஊற்றிய வழக்கு: மருத்துவரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

கருணாநிதி சிலை மீது பெயிண்ட் ஊற்றிய வழக்கில் மருத்துவரின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது. சேலம் அண்ணா பூங்கா அருகே முன்னாள் முதல்வா் ... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து மோதி ஒருவா் உயிரிழப்பு

ஆத்தூரில் அரசு பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்றவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். சேலம் மாவட்டம், ஆத்தூா் மந்தைவெளி பகுதியைச் சோ்ந்த அந்தோணிசாமி மகன் டேவிட் (40). இவா் கோழி இறைச்சிக் கடை... மேலும் பார்க்க

மாநகராட்சி மயானத்தில் கட்டுமானப் பணியை நிறுத்தக் கோரி ஆட்சியரிடம் இந்து முன்னணி மனு

சேலம் மாநகராட்சிக்கு சொந்தமான மயானத்தில் கட்டுமானப் பணியை நிறுத்தக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் இந்து முன்னணி நிா்வாகிகள் வியாழக்கிழமை மனு அளித்தனா். இந்து முன்னணியின் சேலம் கோட்ட செயலாளா் சந்தோஷ்குமாா் ... மேலும் பார்க்க

பெரியாா் பல்கலை.யில் கருணாநிதி நினைவு தினம் அனுசரிப்பு

சேலம் பெரியாா் பல்கலைக்கழகத்தில் முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி நினைவு தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது. பெரியாா் பல்கலைக்கழகத்திலுள்ள தந்தை பெரியாா் இருக்கை, பேரறிஞா் அண்ணா இருக்கை, கலைஞா் ஆய்வு... மேலும் பார்க்க