செய்திகள் :

மத்தியப் பிரதேசம்: மீன்பிடிக்கச் சென்ற இளைஞர் முதலை தாக்கியதில் பலி !

post image

மத்தியப் பிரதேசத்தில் மீன்படிக்கச் சென்ற இளைஞர் முதலை தாக்கி பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில் டோரியா டெக்கிற்கு அருகிலுள்ள கென் ஆற்றில் பாயும் ஓடையில் மிசாஜி ராய்க்வார்(35) சனிக்கிழமை மீன்பிடிக்கச் சென்றார். ஆனால் அவரின் உடைகள் மற்றும் மீன்பிடி வலை ஓடையின் கரையில் காணப்பட்டதாகவும், இருப்பினும் அவர் பற்றிய எந்த தடயமும் இல்லை என்றும் உள்ளூர்வாசி அசோக் ராய்க்வார் தெரிவித்தார்.

போலீஸாரும் கிராம மக்களும் இரவு முழுவதும் ராய்க்வாரை தேடினர். ஞாயிற்றுக்கிழமை காலை கென் ஆற்றில் அவரது உடலின் மேல் பகுதி மிதப்பதைக் கண்டனர். உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக ராஜ்நகர் சுகாதார மையத்திற்கு அனுப்பி வைத்தனர். வனத்துறை அதிகாரி நிலேஷ் பிரஜாபதி கூறுகையில், ராய்க்வாரை முதலை பகுதியளவு தின்றுவிட்டது போல் தெரிகிறது.

விமான பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த விமானி!

பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு இறுதிச் சடங்கிற்கான நிதி உதவி உடனடியாக வழங்கப்பட்டது. கூராய்வு அறிக்கை கிடைத்தவுடன், இழப்பீடு மூன்று நாள்களுக்குள் குடும்பத்தினரின் கணக்கிற்கு மாற்றப்படும். மழைக்காலங்களில் நீர்நிலைகளுக்குச் செல்வதை குடியிருப்பாளர்கள் தவிர்க்க வேண்டும் என்றார்.

இதனிடையே அப்பகுதியில் ஒரு பெரிய முதலையை கிராம மக்கள் சனிக்கிழமை கண்டதாக தெரிவித்தனர். இது தாக்குதலின் சந்தேகத்தை மேலும் எழுப்பியது. முன்னதாக கடந்த ஜூலை 11 ஆம் தேதி, டாமோ மாவட்டத்தில் 40 வயது பெண் ஒருவர் முதலையால் கொல்லப்பட்டார். அவர் ஆற்றங்கரையில் அமர்ந்திருந்தபோது முதலை அவரைத் தாக்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 A 35-year-old man was killed by a crocodile in Madhya Pradesh's Chhatarpur district, and his partially mutilated body was found on Sunday, an official said.

இஸ்கான் சைவ உணவகத்தில் இறைச்சி உண்ட இளைஞருக்கு குவியும் கண்டம்! வைரல் விடியோ!

லண்டனில் செயல்பட்டுவரும் இந்து மதத்தைச் சேர்ந்த இஸ்கான் சைவ உணவகத்தில் இளைஞர் ஒருவர், இறைச்சி உண்ணும் விடியோ சமூக வலைதளங்களில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. இஸ்கான் என்னும் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்க... மேலும் பார்க்க

உ.பி.யில் சைவ உணவு மட்டுமே வழங்கும் கே.எஃப்.சி.! காரணம் என்ன?

உத்தரப் பிரதேசத்தின் காஸியாபாத்தில் உள்ள பன்னாட்டு உணவு நிறுவனமான கே.எஃப்.சியில் தற்காலிகமாக சைவ உணவுகளை மட்டுமே விற்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்து மதத்தைச் சேர்ந்த துறவிகள் கன்வர் யாத்திரை செல்லும் ... மேலும் பார்க்க

கிர்ப்டோ பணப் பரிமாற்ற நிறுவனம் முடக்கம்: வாடிக்கையாளர்கள் நிலை என்ன?

கிரிப்டோ கரன்சியை பரிமாற்றம் செய்யும் முன்னணி நிறுவனமான காயின் டி.சி.எக்ஸ். மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளது.கடந்த 19ஆம் தேதி நடந்த இந்த சம்பவத்தால், இந்த தளத்திலிருந்து 44 மில்லியன் டாலர்கள் (ரூ... மேலும் பார்க்க

ஒரே பெண்ணை திருமணம் செய்துகொண்ட சகோதரர்கள்!

ஹிமாசலப் பிரதேசத்தில் சகோதரர்கள் இருவர் ஒரே பெண்ணை திருமணம் செய்துகொண்டனர். மணப்பெண்ணும் முழு சம்மதத்துடன் ஒரே குடும்பத்தில் பிறந்த சகோதரர்கள் இருவரை திருமணம் செய்துகொண்டார். கிராம மக்கள் முன்னிலையில்... மேலும் பார்க்க

விமான பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த விமானி!

மகாராஷ்டிரத்தில் விமான பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த விமானியை காவல் துறையினர் தேடி வருகின்றனர். மகாராஷ்டிர மாநிலம் மும்பை அருகேவுள்ள மிரா சாலையில் வசித்து வரும் தனியார் விமான நிறுவனத்தைச் சேர்... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கருடன் கேஜரிவால் சந்திப்பு

தில்லியில் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கரை தில்லி முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேரிவால் சந்தித்தார். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த சந்திப்பின்போது மாநிலங்க... மேலும் பார்க்க