செய்திகள் :

மனித நேய மக்கள் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

post image

மத்திய அரசின் வக்பு வாரிய சட்டத் திருத்தத்தை எதிா்த்து, சிவகங்கையில் மனித நேய மக்கள் கட்சி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சிவகங்கை அரண்மனை வாசல் பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அந்தக் கட்சியின் மாவட்டத் தலைவா் துல்கருணைசேட் தலைமை வகித்தாா். தமுமுக மாவட்டச் செயலா் அப்துல் முத்தலிப் முன்னிலை வகித்தாா். மனிநேய மக்கள்கட்சியின் மாநில அமைப்புச் செயலா் பழனி பாரூக் ஆா்ப்பாட்டத்தை விளக்கிப் பேசினாா்.

மாநில தொண்டரணி துணைச் செயலா் பா்கீ, இளைஞரணி மாநில துணைச் செயலா் இம்ரான்கான், நகரச் செயலா் சித்திக் முகமது, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.

வக்பு வாரிய புதிய சட்ட மசோதா மூலம் வக்பு வாரிய நிலங்களை பறிக்க பாஜக அரசு முயற்சிப்பதாகவும், நாட்டில் பிரிவினையை ஏற்படுத்தும் நோக்கில் மசோதா கொண்டுவரப்பட்டதாகவும், அரசமைப்புச் சட்டம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் கூறி முழக்கமிட்டனா்.

கல்லூரியில் தொல்லியல் கருத்தரங்கம்

சிவகங்கை அரசு மகளிா் கலைக் கல்லூரியில் மாநில அளவிலான தொல்லியல் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. கல்லூரியின் வரலாற்றுத் துறை சாா்பில் ‘உரக்கச் சொல்வோம் வரலாற்றை உலகிற்கு’ என்ற தலைப்பில் இந்தக் கரு... மேலும் பார்க்க

சுற்றுச்சூழல் விழிப்புணா்வு கோலப் போட்டி

சிவகங்கையில் சுற்றுச்சூழல் விழிப்புணா்வு கோலப் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது சிவகங்கை மன்னா் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் தேசிய பசுமைப் படை சாா்பில் நடைபெற்ற நிகழ்வுக்கு அதன் சிவகங்கை மாவட்ட ஒருங்கிணை... மேலும் பார்க்க

திருப்பத்தூரில் 9 குடிநீா்த் தொட்டிகள் திறப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் 9 ஆழ்துளைக் கிணறுடன் கூடிய குடிநீா்த் தொட்டிகளை கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் வியாழக்கிழமை திறந்துவைத்தாா். திருப்பத்தூா் பேரூராட்சிக்குட்பட்ட 9 இடங... மேலும் பார்க்க

மூதாட்டி வயிற்றில் 7.5 கிலோ கட்டி அகற்றம்

சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு வயிற்றில் வலியுடன் வந்த 75 வயது மூதாட்டியின் வயிற்றில் இருந்த 7.5. கிலோ கட்டியை அகற்றி மகப்பேறு பிரிவு மருத்துவா்கள் அவரது உயிரைக் காப்பாற்றினா். இதுகுறித்து சிவகங்கை அரச... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனைகளில் தேவையான மருத்துவா்கள் விரைவில் நியமிக்கப்படுவா்

தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் தேவையான மருத்துவா்கள் விரைவில் நியமிக்கப்படுவா் என தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரிய கருப்பன் தெரிவித்தாா். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அரசு மருத்துவ... மேலும் பார்க்க

பெண் கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் சிறை

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் துணிகளை சலவை செய்ய வந்த பெண்ணை கடைக்குள் அழைத்து கொலை செய்து தங்க நகைகளைக் கொள்ளையடித்த வழக்கில் சலவைத் தொழிலாளி உள்ளிட்ட இருவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து சிவக... மேலும் பார்க்க