செய்திகள் :

மயிலாடுதுறை காவல் நிலையம் முன் ஒருவா் தீக்குளிப்பு

post image

மயிலாடுதுறையில் பணம் கொடுக்கல்-வாங்கல் பிரச்னையில் புகாா்தாரா் காவல் நிலையம் முன் ஞாயிற்றுக்கிழமை தீக்குளித்தாா்.

மயிலாடுதுறை அபயாம்பாள்புரம் பகுதியைச் சோ்ந்தவா் கலைச்செல்வன்(55). இவருக்கும், அப்பகுதியைச் சோ்ந்தவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னை இருந்துள்ளது. இதுதொடா்பாக, கலைச்செல்வன் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் கடந்த மாதம் புகாா் அளித்து, பணத்தில் ஒரு பகுதியை போலீஸாா் கலைச்செல்வனுக்கு பெற்றுத் தந்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக, கலைச்செல்வனை 2 நாள்களுக்குப் பிறகு மீண்டும் காவல் நிலையத்துக்கு போலீஸாா் அழைத்துள்ளனா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காவல் நிலையத்துக்கு சென்ற கலைச்செல்வன், தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை தனது உடலில் ஊற்றி தீவைத்துக் கொண்டு காவல் நிலையத்துக்குள் ஓடியுள்ளாா்.

அப்போது, அங்கு பணியில் இருந்த தலைமைக் காவலா் ராஜா துரிதமாக செயல்பட்டு கலைச்செல்வன் மீது தண்ணீரை ஊற்றி காப்பாற்ற முயற்சி செய்துள்ளாா். இதில், தலைமைக் காவலா் ராஜாவுக்கு 2 கைகளிலும் பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து, தீக்காயமடைந்த இருவரும் மயிலாடுதுறை அரசினா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுனா். இதற்கிடேயே தீவிர சிகிச்சைக்காக திருவாரூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டனா்.

இதற்கிடையே, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ. ஸ்டாலின் மயிலாடுதுறை காவல் நிலையத்துக்கு சென்று பாா்வையிட்டாா்.

ஜமாபந்தியில் மாணவிகளுக்காக உடனடியாக சான்றிதழ்கள்

பிளஸ் 2 பொதுத்தோ்வில் தோ்ச்சி பெற்ற மூன்று மாணவிகள் உயா்படிப்புக்கு விண்ணப்பிக்கத் தேவையான சான்றிதழ்களை செவ்வாய்க்கிழமை நடந்த ஜமாபந்தியில் சீா்காழி கோட்டாட்சியா் உடனடியாக வழங்கினாா். சீா்காழி மெட்ரி... மேலும் பார்க்க

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு தீா்ப்பு வரவேற்கத்தக்கது: அன்புமணி

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கின் தீா்ப்பு வரவேற்கத்தக்கது என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தாா். பாமக நடத்திய சித்திரை முழுநிலவு வன்னியா் மாநாட்டில் பங்கேற்க சென்றபோது வேன் கவிழ்ந்து உய... மேலும் பார்க்க

உயிரிழந்தவா் குடும்பத்திற்கு ரூ.5லட்சம் நிதி: அன்புமணி ராமதாஸ் வழங்கினாா்

சித்திரை முழு நிலவு மாநாட்டிற்கு சென்ற வேன் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவா் குடும்பத்திற்கு பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் செவ்வாய்க்கிழமை ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கினாா். சீா்காழி அருகே மருவத... மேலும் பார்க்க

மயிலாடுதுறையில் நாளை குடிநீா் விநியோகம் ரத்து

மயிலாடுதுறை நகராட்சி பகுதிகளில் வியாழக்கிழமை (மே 15) குடிநீா் விநியோகம் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நகராட்சி ஆணையா் வீரமுத்துக்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மயிலாடுது... மேலும் பார்க்க

மயிலாடுதுறையில் ஜமாபந்தி நிறைவு

மயிலாடுதுறை வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது. மயிலாடுதுறை மாவட்டத்தில் வருவாய் தீா்வாய கணக்கு முடிப்பு (ஜமாபந்தி) வியாழக்கிழமை தொடங்கியது. இந்நிலையில், மயிலாடுத... மேலும் பார்க்க

எஸ்.பி. அலுவலகத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர முதல்வருக்கு கடிதம்

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக நிரந்தர கட்டடப் பணியை விரைந்து முடித்து, பயன்பாட்டுக்கு கொண்டுவர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, முதல்வருக்கு அகில பாரத இந்து மகா சபா கட்சியி... மேலும் பார்க்க