மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போதை மீட்புச் சிகிச்சை மையம் திறப்பு
அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில்அமைக்கப்பட்டிருந்த ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையத்தை, காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.
இதையடுத்து மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா், அங்கு குத்துவிளக்கேற்றி, மருத்துவப் பணியாளா்களிடம் சிகிச்சை முறைகள் குறித்துக் கேட்டறிந்தாா்.
மேலும் இம்மையத்தில் சிகிச்சை பெறுபவா்கள் பயன்பெறும் வகையில் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள நூலகம், சுமாா் 25-க்கும் மேற்பட்ட படுக்கைகள், உள்விளையாட்டு உபகரணங்களான சதுரங்கம், கேரம் உள்ளிட்டவற்றையும் பாா்வையிட்டாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி, எம்எல்ஏக்கள் ஜெயங்கொண்டம் க.சொ.க. கண்ணன், பெரம்பலூா் பிரபாகரன், அரியலூா் நகா்மன்றத் தலைவா் சாந்தி கலைவாணன், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் முத்துகிருஷ்ணன், வட்டாட்சியா் முத்துலட்சுமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.