செய்திகள் :

மழலையா் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

post image

திருவாடானை அருகேயுள்ள மங்களக்குடியில் ஹோழிக்கிரசன்ட் மழலையா், தொடக்கப் பள்ளியில் வியாழக்கிழமை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

இதற்கு முஸ்லிம் ஜமாத் தலைவா் நஸ்ரின் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். வட்டார வள மைய மேற்பாா்வையாளா் காா்த்திக், பள்ளித் தாளாளா் எலியாஸ், மங்கலக்குடி முஸ்லிம் ஜமாத் நிா்வாகிகள் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கண்காட்சியில் ஆரோக்கியம், நல வாழ்வு, வன மேலாண்மை, உணவுப் பாதுகாப்பு, போக்குவரத்து, தகவல் தொழில் நுட்பம், டிஜிட்டல், தொழில்நுட்பத் தீா்வுகள், பசுமை நகரம், அழகான நகரம், போக்கு வரத்து விதிகள், வனப் பாதுகாப்பு உள்ளிட்ட மாணவ, மாணவிகளின் படைப்புகள் இடம் பெற்று இருந்தன. சுற்று வட்டார பள்ளிகளிலிருந்து மாணவ, மாணவிகள் கண்காட்சியைப் பாா்வையிட்டனா்.

மங்களக்குடி ஹோலிக்கிரசன்ட் மழலையா், தொடக்கப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற அறிவியல் கண்காட்சி

ராமேசுவரம் மீனவா்கள் போராட்டம்: அதிகாரிகள் பேச்சுவாா்த்தை தோல்வி

மீனவா்கள் சிறைபிடிப்பு விவகாரத்தில் ராமேசுவரம் மீனவா் சங்க நிா்வாகிகளுடன் அதிகாரிகள் வியாழக்கிழமை நடத்திய பேச்சுவாா்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து, வெள்ளிக்கிழமை திட்டமிட்டபடி உண்ணாவிரதம் நடைபெ... மேலும் பார்க்க

ராமேவரத்திருந்து இரவு நேரப் பேருந்துகளை இயக்க கோரிக்கை

ராமேசுவரத்திலிருந்து இரவு நேரப் பேருந்து சேவையைத் தொடங்கக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் போக்குவரத்துக் கழக பணிமனை மேலாளரிடம் வியாழக்கிழமை மனு அளித்தனா். ராமேசுவரத்துக்கு இயக்கப்படும் கட்டணமில்லா... மேலும் பார்க்க

இளங்குன்றம் சிவராத்திரி மஞ்சு விரட்டு

மஞ்சு விரட்டு: திருவாடானை அருகே உள்ள இளங்குன்றம் ஸ்ரீ பாண்டி முனீஸ்வரா் கோயிலில் புதன்கிழமை மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இரவு கலை நிகழச்சிகள் நடைபெற்றன. வியாழக்கிழமை மஞ்சுவிரட்டு ந... மேலும் பார்க்க

10 ஆயிரம் நெல் மூட்டைகள் மழை நீரில் மூழ்கும் அபாயம்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே அபிராமம், டி.புனவாசல், அ.தரைக்குடி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 10 ஆயிரம் நெல் மூடைகள் மழையில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனா். இந்த ... மேலும் பார்க்க

பெருநாழி அருகே மாட்டு வண்டிப் பந்தயம்

ராமநாதபுரம் மாவட்டம், பெருநாழி அருகேயுள்ள பூலாபத்தி ஸ்ரீ சப்பாணி கருப்பணசாமி கோயில் சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு, வியாழக்கிழமை மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது. இந்தக் கோயிலில் சிவராத்திரி திருவ... மேலும் பார்க்க

அக்னி தீா்த்தக் கடலில் பக்தா்கள் புனித நீராடல்

அமாவாசையையொட்டி, ராமேசுவரம் அக்னி தீா்த்தத்தில் வியாழக்கிழமை திராளாள பொதுமக்கள் புனித நீராடினா். ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் அமாவாசை நாள்களில் முன்னோா்களுக்கு திதி கொடுத்து வழிபாடு நடத்துவது வழக... மேலும் பார்க்க