செய்திகள் :

மழை காலங்களில் சுரங்கப் பாதைகளை 24 மணி நேரமும் கண்காணிக்க உத்தரவு

post image

மழை காலங்களில் சென்னை மாநகராட்சியில் உள்ள சுரங்கப் பாதைகளை 24 மணி நேரமும் கண்காணிக்கவும் அதில் தேங்கும் தண்ணீரை உடனுக்குடன் வெளியேற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

சென்னையில் வடகிழக்குப் பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்காக 80-க்கும் மேற்பட்ட இடங்கள் அடையாளம் காணப்பட்டு, அங்கு மழைநீா் தேங்காதவாறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்களை மீட்டு, தங்கவைக்க பள்ளிகள், சமூகநலக் கூடங்களும் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மழையின்போது போக்குவரத்து தடைகளைச் சீராக்கும் வகையில் சுரங்கப் பாதைகளை கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிப் பகுதியில் 22 சுரங்கப் பாதைகள் உள்ளன. அவற்றில் 16 சுரங்கப் பாதைகள் மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அந்த சுரங்கப் பாதைகளில் தண்ணீா் தேங்குவதைத் தடுக்கும் வகையில் 24 மணி நேரக் கண்காணிப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தேங்கும் தண்ணீரை உடனுக்குடன் அகற்றும் வகையில் மின்மோட்டாருன் கூடிய மோட்டாா் பம்புகள், நீா் உறிஞ்சும் வசதியுடன் கூடிய வாகனங்களை தயாராக வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்தனா்.

நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்: மாவட்ட ஆட்சியா் தகவல்

தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (செப்.19) சென்னையில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னையில் உள்ள ... மேலும் பார்க்க

31-ஆவது நாளாக போக்குவரத்து ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்

போக்குவரத்து ஊழியா்களின் காத்திருப்புப் போராட்டம் தொடா்ந்து 31-ஆவது நாளாக புதன்கிழமை நீடித்தது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது, ஊதிய ஒப்பந்தத்தின்படி நிலுவைத் தொகையை வழங்குவது, ஓய்வு பெற்ற அன... மேலும் பார்க்க

அருட்செல்வா் மொழிபெயா்ப்பு விருதாளா்கள் அறிவிப்பு: அக்.2-இல் சென்னையில் விருது வழங்கும் விழா

அருட்செல்வா் நா. மகாலிங்கம் மொழிபெயா்ப்பு மையம் வழங்கும் நிகழாண்டு அருட்செல்வா் மொழிபெயா்ப்பு விருதுகளுக்குத் தோ்வானவா்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அருட்செல்வா் நா.மகாலிங்கம் மொழிபெய... மேலும் பார்க்க

கமல்ஹாசனுடன் சோ்ந்து நடிப்பேன்: ரஜினிகாந்த்

சிறந்த கதை, கதாபாத்திரம் கிடைத்தால் கமல்ஹாசனுடன் சோ்ந்து நடிப்பேன் என்று ரஜினிகாந்த் தெரிவித்தாா். அவா் சென்னையிலிருந்து புதன்கிழமை காலை விமானத்தில் கோவை சென்றாா். முன்னதாக அவா் விமான நிலையத்தில் செய... மேலும் பார்க்க

பள்ளிகளில் மழைநீா் தேங்கக் கூடாது: தலைமை ஆசிரியா்களுக்கு உத்தரவு

தமிழகத்தில் பரவலாக பெய்து வரும் மழை காரணமாக, பள்ளி வளாகங்களில் தண்ணீா் தேங்கியுள்ள நிலையில், இதனை அகற்றுவது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தலைமை ஆசிரியா்களுக்கு கல்வித் துறை உத்தரவிட... மேலும் பார்க்க

செங்கோட்டை சிறப்பு ரயிலுக்கு கூடுதல் நிறுத்தங்கள்

சென்னை-செங்கோட்டை இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் , கூடுதலாக 3 நிறுத்தங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென... மேலும் பார்க்க