செய்திகள் :

மழைக்காலக் கூட்டத்தொடர்: அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கியது!

post image

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரையொட்டி அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் நாளை(ஜூலை 21) தொடங்கி ஆகஸ்ட் 21 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மழைக்காலக் கூட்டத்தொடருக்கு முன்னதாக அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என்றும் இந்த கூட்டத்தில் அனைத்துக் கட்சிகளும் கலந்துகொள்ள வேண்டும் என்றும் மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜுஜு அழைப்பு விடுத்திருந்தார்.

அதன்படி, அமைச்சர் கிரண் ரிஜுஜு தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் இன்று காலை 11.30 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. மத்திய அமைச்சர்கள் ஜெ.பி.நட்டா, அர்ஜுன் ராம் மேக்வால், எல். முருகன் மற்றும் காங்கிரஸ், திமுக, அதிமுக, திரிணமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், ஆம் ஆத்மி, கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் இதில் கலந்துகொண்டுள்ளனர். திமுக சார்பில் டி.ஆர். பாலு, அதிமுக சார்பில் தம்பிதுரை கலந்துகொண்டுள்ளனர்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆபரேஷன் சிந்தூர், இந்தியா - பாகிஸ்தான் மோதல் பற்றிய அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் கருத்து, பிகார் வாக்காளர் பட்டியல் திருத்தம் உள்ளிட்ட பிரச்னைகளை நாடாளுமன்றத்தில் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

இதனிடையே மழைக்காலக் கூட்டத்தொடரில் முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு முயற்சிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

All party meeting ahead of the Monsoon session of Parliament to begins in delhi.

இதையும் படிக்க | சொல்லப் போனால்... ஒரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி!

அமா்நாத் யாத்திரை: ஜம்முவிலிருந்து 20ஆவது குழு புறப்பட்டது !

அமர்நாத் குகைக் கோயிலுக்கு 4,388 பேர் கொண்ட 20 ஆவது குழு ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.காஷ்மீரின் இமயமலையில் 3,880 மீட்டா் உயரத்தில் அமைந்துள்ள அமா்நாத் குகைக் கோயிலில் இயற்கையா... மேலும் பார்க்க

தீர்ப்புகளில் செய்யறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தக் கூடாது: கேரள உயர்நீதிமன்றம்

நீதிமன்ற தீர்ப்புகள், உத்தரவுகளில் செய்யறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தக் கூடாது என்று நீதிமன்றங்களுக்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செய்யறிவு தொழில்நுட்பம்(ஏ.ஐ.) இப்போது அனைத்துத் துறைகளிலு... மேலும் பார்க்க

அகமதாபாத்தில் வீட்டில் இருந்து தம்பதியர், 3 குழந்தைகளின் சடலங்கள் மீட்பு !

அகமதாபாத்தில் தம்பதியர் மற்றும் அவர்களது 3 குழந்தைகள் வீட்டில் இருந்து சடலங்களாக கண்டெடுக்கப்பட்டனர்.குஜராத்தின் அகமதாபாத் மாவட்டத்தில் வீடு ஒன்றில் இருந்து தம்பதியினரின் உடல்களும், அவர்களது மூன்று கு... மேலும் பார்க்க

பள்ளிப்பேருந்திலிருந்து தூக்கி வீசப்பட்ட 2-ஆம் வகுப்பு மாணவன் பின்பக்க சக்கரம் ஏறியதில் பலி!

பெங்களூரு: பள்ளிப்பேருந்தில் கதவு சரியாக மூடாததால் பேருந்திலிருந்து கீழே விழுந்த சிறுவன் மீது பேருந்து சக்கரம் ஏறி இறங்கியதில் உயிரிழந்தார்.பெங்களூரிலுள்ள ஒரு பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயின்று வந்த எ... மேலும் பார்க்க

உ.பி.யில் சி.ஆர்.பி.எஃப் வீரர் மீது தாக்குதல்: 3 கன்வாரியாக்கள் கைது

உ.பி.யில் சி.ஆர்.பி.எஃப். வீரர் மீது தாக்குதல் நடத்திய 3 கன்வாரியாக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலம், பிரம்மபுத்ரா ரயிலில் ஜார்க்கண்டில் உள்ள பைத்யநாத் தாம் செல்வதற்காக கன்வாரியாக்க... மேலும் பார்க்க

கன்வார் யாத்திரை பக்தர்கள் மீது ஹெலிகாப்டரிலிருந்து மலர்கள் தூவி உபசரிப்பு: உ.பி. அரசு ஏற்பாடு

உத்தரப் பிரதேத்தில் கன்வார் யாத்திரை பக்தர்களை உற்சாகப்படுத்த ஹெலிகாப்டரிலிருந்து மலர்கள் தூவி உபசரிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களுக்கு பக்தர்கள் நடைப்பயணமாகச் ... மேலும் பார்க்க