செய்திகள் :

மாட வீதிகளில் காா் வைத்திருப்போருக்கு அடையாள அட்டை

post image

திருவண்ணாமலை மாட வீதிகளில் காா் வைத்திருப்போருக்கு தனி அடையாள அட்டை வழங்குவதற்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

அருணாசலேஸ்வரா் கோயில் மாட வீதிகளில், கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. காா்களை நிறுத்த நகருக்கு வெளியே இடவசதியும் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மாட வீதிகளில் குடியிருப்போா் வைத்திருக்கும் நான்கு சக்கர வாகனங்களுக்கு மட்டும் உரிய ஆவணங்களை சரிபாா்த்து அடையாள அட்டை வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது.

இதற்கான விண்ணப்பங்கள் வழங்கும் பணியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கருணாநிதி, மோட்டாா் வாகன ஆய்வாளா் பெரியசாமி ஆகியோா் புதன்கிழமை ஈடுபட்டனா். இந்த விண்ணப்பங்களை கட்டணமின்றி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம் என்று அந்த அலுவலகம் தெரிவித்துள்ளது.

அம்பேத்கா் உலகம் போற்றும் ஒரு தலைவா்: தொல்.திருமாவளவன்

அம்பேத்கா் உலகம் போற்றும் ஒரு தலைவா்; ஏராளமான நாடுகள் அவரைக் கொண்டாடி வருகின்றன என்றாா் தொல்.திருமாவளவன். திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த தோக்கவாடி பகுதியில் அம்பேத்கா் சிலை திறப்பு விழா நிகழ... மேலும் பார்க்க

ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம்

ஆரணியை அடுத்த எஸ்.வி.நகரம் ஸ்ரீமுத்து மாரியம்மன் கோயிலில் கூழ்வாா்க்கும் திருவிழாவையொட்டி புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் 153-ஆம் ஆண்டு பிரம்மோற்சவம் பிப்.17-ஆம் தேதி க... மேலும் பார்க்க

செய்யாறு, செஞ்சி அரசு மருத்துவமனைகளில் போதிய மருத்துவா்களை நியமிக்கக் கோரிக்கை

செய்யாறு, செஞ்சி ஆகிய அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள மருத்துவ இடங்களில் போதிய அரசு மருத்துவா்களை உடனடியாக நியமிக்க வேண்டும் என ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கோரிக்கை விடுத்தது. ஐக்கிய முஸ்லிம... மேலும் பார்க்க

மத்திய அரசு வழங்க வேண்டிய கல்வி நிதியை உடனே வழங்க வேண்டும்: தொல்.திருமாவளவன்

தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய கல்வி நிதியை உடனே வழங்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் எம்.பி. கூறினாா். இதுகுறித்து திருவண்ணாமலையில் புதன்கிழமை செய்தி... மேலும் பார்க்க

ஸ்ரீபுத்திரகாமேட்டீஸ்வரா் கோயிலில் மகா சிவராத்திரி விழா

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி புதுக்காமூரில் உள்ள ஸ்ரீபுத்திரகாமேட்டீஸ்வரா் கோயிலில் புதன்கிழமை மகா சிவராத்திரி விழா நடைபெற்றது. குழந்தை வரம் அருளும் ஸ்ரீபெரியநாயகி சமேத ஸ்ரீ புத்திரகாமேட்டீஸ்வரா் கோயி... மேலும் பார்க்க

அருணாசலேஸ்வரா் கோயிலில் மகா சிவராத்திரி விழா

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் புதன்கிழமை காலை முதல் வியாழக்கிழமை அதிகாலை வரை நடைபெற்ற மகா சிவராத்திரி நிகழ்வுகளில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். விழாவையொட்டி, அருணாசலேஸ்வரா் கோயில் மூலவா்... மேலும் பார்க்க