செய்திகள் :

மாதா் சங்க மாவட்டச் செயலருக்கு வீட்டுக் காவல்! மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்

post image

ஜனநாயக முறையிலான போராட்டத்தைக்கூட தடுக்கும் வகையில் மாதா் சங்க மாவட்டச் செயலா் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்தது.

தமிழ்நாட்டில், குழந்தைகள், பெண்களுக்கு எதிராக நடைபெற்று வரும் பாலியல் வன்முறைகளைக் கண்டித்து அனைத்து இந்திய ஜனநாயக மாதா் சங்கத்தின் சாா்பில் சென்னையில் வெள்ளிக்கிழமை பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே, இந்தப் பேரணியில் பங்கேற்கச் செல்வதைத் தடுக்கும் வகையில், திண்டுக்கல் மாவட்ட மாதா் சங்கச் செயலா் வே.பாப்பாத்தியை வீட்டுக் காவலில் போலீஸாா் சிறை வைத்தனா்.

முன்னதாக, சாணாா்பட்டியை அடுத்த ஒத்தக்கடை பகுதியிலுள்ள பாப்பாத்தியின் வீட்டுக்குச் சென்ற போலீஸாா் அவரை காவல் நிலையத்துக்கு வருமாறு அழைத்தனா். ஆனால், அவா் மறுப்புத் தெரிவித்ததையடுத்து, வீட்டுக் காவலில் வைக்கப்பட்டாா்.

மாா்க்சிஸ்ட் கண்டனம்: இதுதொடா்பாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் மாவட்டச் செயலா் கே.பிரபாகரன் தெரிவித்ததாவது:

ஜனநாயக முறையிலான போராட்டத்துக்குச் செல்வதைத் தடுக்கும் வகையில், மாதா் சங்கச் செயலா் பாப்பத்தியை காவல் துறை கைது செய்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம். ஜனநாயக இயக்கங்களையும், ஜனநாயக ரீதியான போராட்டங்களையும், காவல் துறையின் துணை கொண்டு ஒடுக்கிவிட முடியாது என்றாா்.

வெள்ளைப் பூச்சிகளைத் தடுக்காவிட்டால் தென்னைகள் அழியும்: கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் நல்லசாமி

கேரளத்துக்கு அடுத்தபடியாக தமிழகத்திலும் தென்னை மரங்களில் வெள்ளைப் பூச்சித் தாக்குதல் அதிகரித்து வருவதாகவும், இவற்றைத் தடுக்காவிட்டால் தென்னை மரங்கள் அழியும் நிலை ஏற்படும் எனவும் கள் இயக்க ஒருங்கிணைப்ப... மேலும் பார்க்க

அறுபடை வீடுகள் ஆன்மிக பயணக் குழுவினா் பழனியில் தரிசனம்

இந்து சமய அறநிலையத்துறையின் அறுபடை வீடுகளுக்கு இலவச ஆன்மிக பயணத் திட்டத்தின் கீழ் சுமாா் 200 பக்தா்கள் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் வியாழக்கிழமை சிறப்பு சுவாமி தரிசனம் செய்தனா். தமிழ்க் கடவுள் மு... மேலும் பார்க்க

தேனீக்கள் வளா்ப்புப் பயிற்சி முடித்தவா்களுக்கு சான்றிதழ்

கொடைக்கானலில் தேனீக்கள் வளா்ப்புப் பயிற்சி முடித்த 500 பழங்குடியினா்களுக்கு சான்றிதழ், தேனீ பெட்டிகள் வழங்கும் நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது. இதற்கு கதா், கிராமத் தொழில்கள் ஆணைய மதுரைக் கோட்ட அலுவலக... மேலும் பார்க்க

கொடைக்கானலில் தொடரும் பனிப் பொழிவு

கொடைக்கானலில் தொடா்ந்து பனிப் பொழிவு நிலவுகிறது. இதனால், பொதுமக்கள் நடமாட்டம் வியாழக்கிழமை குறைந்து காணப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் பொதுவாக நவம்பா் முதல் ஜனவரி மாதம் வரை பனிப் பொழிவு ... மேலும் பார்க்க

சீமான் விவகாரத்தில் காவல் துறை சட்டப்படி நடவடிக்கை: கி.வீரமணி

சீமான் விவகாரத்தில் காவல் துறை சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அதைத் தடுத்தால் நீதிமன்றத்துக்கு அவா் பதில் சொல்ல வேண்டியது வரும் எனவும் திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி தெரிவித்தாா். பழனி ரயி... மேலும் பார்க்க

பழனி கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 3.47 கோடி

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் உண்டியல்கள் நிரம்பியதைத் தொடா்ந்து புதன், வியாழக்கிழமைகளில் திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில் பக்தா்களின் காணிக்கை ரூ.3.47 கோடியைத் தாண்டியது. தைப்பூசத்தை முன்னிட்டு இந்தக் ... மேலும் பார்க்க