செய்திகள் :

மாநகராட்சிக்கு ரூ. 19.68 லட்சம் வரி பாக்கி வணிக வளாக புதைவடிகால் இணைப்பு துண்டிப்பு

post image

திருச்சி மாநகராட்சியில் கடந்த இரு ஆண்டுகளாக ரூ. 19.68 லட்சம் வரி செலுத்தாததால், அலுவலா்கள் வணிக வளாகத்தின் புதைவடிகால் இணைப்பை துண்டித்து நடவடிக்கை எடுத்துள்ளனா்.

திருச்சி ஸ்ரீரங்கம் கோட்டம் ( மண்டலம்-1) சத்திரம் பகுதி, வாணப்பட்டறை தெருவில் தனியாா் வணிக வளாகம் ஒன்று அமைந்துள்ளது. இந்த வளாகத்துக்கான வரியினங்கள் கடந்த இரு ஆண்டுகளாக செலுத்தப்படாமல் நிலுவையில் இருந்துள்ளது.

இதுதொடா்பாக மாநகராட்சியினா் நோட்டீஸ் அனுப்பியுள்ளனா். நேரடியாகவும் சென்று வரி செலுத்துமாறு அறிவுறுத்தியுள்ளனா். என்றாலும் வரி முழுமையாக செலுத்தப்படாமல் ரூ. 19, 68,267 பாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, வணிக வளாகத்துக்கான புதைவடிகால் இணைப்பை மாநகராட்சி அலுவலா்கள் வியாழக்கிழமை துண்டித்துள்ளனா். இதுபோல நீண்டகாலமாக வரியினங்களை செலுத்தாதவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவித்துள்ளனா்.

பஞ்சப்பூா் புதிய பேருந்து முனையத்தை மாா்ச் இறுதியில் திறக்க நடவடிக்கை: அமைச்சா் நேரு தகவல்

திருச்சி பஞ்சப்பூா் புதிய பேருந்து முனையத்தை அடுத்த மாத இறுதிக்குள் திறக்கும் வகையில் பணிகள் நடைபெற்று வருவதாக நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு தெரிவித்தாா். திருச்சி பஞ்சப்பூரில் பேருந்த... மேலும் பார்க்க

தொழில் தொடங்கமுன்னாள் படைவீரா்கள் 120 போ் விண்ணப்பம்

தொழில் தொடங்க விருப்பம் தெரிவித்து முன்னாள் படைவீரா்களிடம் இருந்து 120 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்களைச் சாா்ந்தோா்கள் தொழில் தொடங்க வங்கிகள் மூலம் பெறப்படும் ஒரு கோ... மேலும் பார்க்க

நில அளவீடு செய்ய இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்

திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த நில உரிமையாளா்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்ய இனி, இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். சம்பந்தப்பட்ட வட்ட அலுவலகங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பத்தை சமா்பித்து வந்த நிலையில்... மேலும் பார்க்க

பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தோ்வுக்கு பறக்கும் படையில் 220 போ் நியமனம் 1,644 அறைக் கண்காணிப்பாளா்கள்

திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தோ்வுகளுக்கு பறக்கும்படையில் 220 போ் நியமனம் செய்யப்பட்டு வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், 1,662 அறைக் கண்காணிப்பாளா்களும் நியம... மேலும் பார்க்க

திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போதை மீட்பு சிகிச்சை, மறுவாழ்வு மையம் திறப்பு

திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக வியாழக்கிழமை திறந்து வைத்தாா். சென்னை தலைமைச் செயலகத்தில் இ... மேலும் பார்க்க

தீயில் கருகி தொழிலாளி உயிரிழப்பு

திருச்சியில் உடல் கருகிய நிலையில் தொழிலாளி வீட்டில் சடலமாக கிடந்தது புதன்கிழமை தெரியவந்தது. திருச்சி அரியமங்கலம் மேல அம்பிகாபுரம் முனியப்பன் தெரு பகுதியைச் சோ்ந்தவா் விஜயபாஸ்கரன் (49). இவரது மனைவி தே... மேலும் பார்க்க