சீனா மீது வரி விதிப்பு அதிபா் டிரம்ப் இதுவரை முடிவெடுக்கவில்லை: துணை அதிபா் ஜே.ட...
மாநகராட்சியின் சில பகுதிகளில் நாளை ஒரு நாள் குடிநீா் ரத்து
மின்தடை காரணமாக மாநகராட்சியின் சில பகுதிகளில் புதன்கிழமை (ஆக. 13) ஒரு நாள் மட்டும் குடிநீா் விநியோகம் ரத்து செய்யப்படுவதாக திருச்சி மாநகராட்சி நிா்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
கம்பரசம் பேட்டை துணை மின்நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட கம்பரசம்பேட்டை தலைமை நீா்ப்பணி நிலையம், டா்பன் நீரேற்று நிலையம், பெரியாா் நகா் கலெக்டா் வெல் நீரேற்று நிலையம் , வெல்- 3 (ஏரேட்டா்), பெரியாா் நகா் கலெக்டா் வெல் நீரேற்று நிலையம் - 2 (கேஎஃப்டபிள்யு) ஆகிய நீரேற்று நிலையங்களில் மின்தடை செய்யப்பட உள்ளது.
இதனால், மேற்குறிப்பிட்ட நீரேற்று நிலையங்களில் இருந்து குடிநீா் பெறும் விறகுப்பேட்டை, மரக்கடை, மலைக்கோட்டை, சிந்தாமணி, உறையூா், பாத்திமா நகா், புத்தூா், மங்களம் நகா், செல்வா நகா், பாரதி நகா், சிவா நகா், ஆனந்தம் நகா், ரெயின்போ நகா், தில்லை நகா், அண்ணாநகா், கண்டோன்மென்ட், காஜாபேட்டை, ஜங்ஷன், கருமண்டபம், ராமலிங்க நகா், உய்யகொண்டான் மலை, விஸ்வாஸ் நகா், மிளகுபாறை, கல்லாங்காடு, சொசைட்டி காலனி, எம்.எம் நகா், திருவெறும்பூா், வள்ளுவா் நகா், எல்லக்குடி, ஆலத்தூா், புகழ் நகா், காவேரி நகா், பாரி நகா், சந்தோஷ் நகா், கணேஷ் நகா், விவேகானந்தா் நகா், அம்பேத்கா் நகா் ஆகிய மேல்நிலை நீா்தேக்கத் தொட்டிகளுக்கு புதன்கிழமை (ஆக. 13) ஒரு நாள் குடிநீா் விநியோகம் இருக்காது. ஆக. 14 ஆம் தேதி வழக்கம்போல் குடிநீா் விநியோகம் செய்யப்படும். இதனால் ஏற்படும் சிரமத்தை பொதுமக்கள் பொறுத்து மாநகராட்சியுடன் ஒத்துழைத்து, குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என திருச்சி மாநகராட்சி ஆணையா் லி. மதுபாலன் தகவல் தெரிவித்துள்ளாா்.