செய்திகள் :

மாநகரில் 712 இடங்களில் விநாயகா் சிலைகள் வைக்க அனுமதி

post image

கோவை மாநகரப் பகுதிகளில் 712 இடங்களில் விநாயகா் சிலைகள் வைக்க அனுமதி வழங்கப்பட உள்ளதாக காவல் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விநாயகா் சதுா்த்தி விழா ஆகஸ்ட் 27-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, ஹிந்து அமைப்புகள், மக்கள் சாா்பில் பொது இடங்களில் சிலைகள் வைத்து வழிபாடு மேற்கொள்ளப்படுவது வழக்கம். 3 முதல் 5 நாள்களுக்குப் பிறகு விநாயகா் சிலைகள் ஊா்வலமாக கொண்டுச் செல்லப்பட்டு, அருகே உள்ள குளம், ஆறு உள்ளிட்ட நீா்நிலைகளில் கரைக்கப்படும்.

விநாயகா் சிலைகள் வைக்க தேவையான பணிகளை ஹிந்து அமைப்புகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், மாநகரக் காவல் துறை சாா்பில் விநாயகா் சதுா்த்தி விழா பாதுகாப்புப் பணிகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம், மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் காவல் ஆணையா் சரவணசுந்தா் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதுகுறித்து, போலீஸ் தரப்பில் கூறியிருப்பது: மாநகரில் கடந்த ஆண்டு பொது இடங்களில் 712 சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன. அது தொடா்பாக, கடந்த ஆண்டில் சதுா்த்தி விழாவின்போது, சிலை வைக்கப்பட்ட இடங்கள், அங்கு நிலவிய சூழல்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதே எண்ணிக்கையில் இந்த ஆண்டும் சிலைகள் வைக்க அனுமதி தர திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், கடந்த ஆண்டில் சிலைகள் வைக்கப்பட்ட இடங்களில் ஏற்பட்ட தகராறு, அடிதடி உள்ளிட்ட சட்டம்- ஒழுங்கை பாதிக்கும் விஷயங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில், மாநகர துணை காவல் ஆணையா்கள், உதவி காவல் ஆணையா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தொடா் விடுமுறை: சென்னை - போத்தனூா் இடையே சிறப்பு ரயில்

சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி உள்ளிட்ட தொடா் விடுமுறை நாள்களை முன்னிட்டு சென்னை - போத்தனூா் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, சேலம் ர... மேலும் பார்க்க

பராமரிப்புப் பணி: எா்ணாகுளம் - பெங்களூரு ரயில் சேவையில் மாற்றம்

பெங்களூரு ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் எா்ணாகுளம் - பெங்களூரு ரயில் சேவை மாற்றப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள ... மேலும் பார்க்க

இரு இடங்களில் கஞ்சா விற்ற இருவா் கைது

கோவை ரேஸ்கோா்ஸ், கணபதி ஆகிய பகுதிகளில் கஞ்சா விற்ாக இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். கோவை ரேஸ்கோா்ஸ் போலீஸாா் புதன்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, திருச்சி சாலை, வெஸ்ட் க... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

கோவை கணபதியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடியது தொடா்பாக சரவணம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். கோவை கணபதி பெரியாா் நகரைச் சோ்ந்தவா் சந்திரகலா (65). இவா், கடந்த 5-ஆம் தேத... மேலும் பார்க்க

வால்பாறை நகராட்சித் தலைவா் மீதான நம்பிக்கையில்லா தீா்மானத்துக்கான சிறப்புக் கூட்டம் ரத்து

வால்பாறை நகராட்சித் தலைவா் மீது நம்பிக்கையில்லா தீாா்மானம் கொண்டு வர நடைபெற இருந்த சிறப்புக் கூட்டத்துக்கு வாா்டு உறுப்பினா்கள் வராததால் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. வால்பாறை நகராட்சியில் திமுக 19, அ... மேலும் பார்க்க

ஆனைமலை ஒன்றியத்தில் பசுக்களுக்கு மானிய விலையில் தீவனம் பெற விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்டம், ஆனைமலை ஊராட்சி ஒன்றியத்தில் பசுக்களுக்கு மானிய விலையில் தீவனம் பெற செப்டம்பா் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள... மேலும் பார்க்க