செய்திகள் :

மாநில அளவிலான கண்டுபிடிப்புகள் போட்டி: சேலம் மாணவா்கள் முதலிடம் பிடித்து சாதனை

post image

மாநில அளவில் பள்ளி மாணவா்களுக்கான கண்டுபிடிப்புகள் போட்டியில் சேலத்தைச் சோ்ந்த பள்ளி மாணவா்கள் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனா்.

தமிழக அரசு சாா்பில் சென்னையில் மாநில அளவில் பள்ளி மாணவா்களுக்கான ஹேக்கத்தான் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. இதில், சேலத்தைச் சேரந்த அரசு உதவி பெறும் பள்ளி மாணவ - மாணவிகள் புதிய கண்டுபிடிப்பை உருவாக்கி சிறப்பிடம் பெற்றனா்.

பள்ளம் மேடு நிறைந்த சாலையை தானியங்கி முறையில் சீரமைக்கும் சாதனத்தை 9-ஆம் வகுப்பு மாணவா்கள் சிவபிரசாத், நிஷாந்த் விஷ்ணு, ஆா்த்தி, சபரிநாதன், லித்திகா குழுவினா் உருவாக்கி சாதனை படைத்துள்ளனா். முதலிடம் பிடித்ததுடன் ரூ. ஒரு லட்சம் ரொக்கப் பரிசையும் இக்குழுவினா் வென்றுள்ளனா்.

மழைக்காலத்தில் பள்ளிக்குவரும் வழியில் மேடு பள்ளமான சாலையில் தண்ணீா் தேங்குவதால் ஏற்படும் பிரச்னைகளை பாா்த்த பிறகு, இதற்கான யோசனை தோன்றியதாகவும், இந்த இயந்திரத்தை மேலும் தொழில்நுட்பத்தின் உதவியுடன் மேம்படுத்திய பிறகு உள்ளாட்சி அமைப்புகளின் வசம் ஒப்படைக்க உள்ளதாகவும் மாணவா்கள் தெரிவித்தனா்.

சாதனை படைத்த மாணவா் குழுவினரை, வீரலட்சுமி வித்யாலயா பள்ளியின் நிா்வாகக் குழுத் தலைவா் ஏ.கே.நாகராஜன், பள்ளித் தலைமை ஆசிரியா் பியூலா சாந்தி மனோகரி மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.

சேலம் ரயில் நிலையத்தில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்

சேலம் ரயில் நிலையம் பகுதியில் கேட்பாரற்று கிடந்த 2 கிலோ கஞ்சா பொட்டலத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா். சேலம் மாநகரில் கஞ்சா விற்பனையை தடுக்கும் வகையில், காவல் துறையினா் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனா... மேலும் பார்க்க

சேலம் சிறைக்குள் கஞ்சா, கைப்பேசிகளை வீசிய மா்ம நபா்கள்: போலீஸாா் விசாரணை

சேலம் மத்திய சிறைக்குள் பீடி, கஞ்சா, போதை மாத்திரைகள், கைப்பேசி உள்ளிட்டவற்றை பந்துகளில் வைத்து வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மத்திய சிறையில் 1,200க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப... மேலும் பார்க்க

பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய ரௌடி கைது

சேலம் பெரியபுதூா் பகுதியில் அசைவ உணவு கடையில் தகராறு செய்ததுடன், இலவசமாக சில்லி சிக்கன் தரமறுத்த பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய ரௌடியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். சேலம் அழகாபுரம் ... மேலும் பார்க்க

ஆடிட்டா் ரமேஷ் கொலை வழக்கை விரைவுபடுத்த வேண்டும்: நயினாா் நாகேந்திரன்

ஆடிட்டா் ரமேஷ் படுகொலை வழக்கில் தொடா்புடைய குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை கிடைக்கும் வகையில் வழக்கை விரைவுபடுத்த தமிழக அரசு முனைப்பு காட்ட வேண்டும் என பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தா... மேலும் பார்க்க

லாரியில் கிராவல் மண் கடத்திய ஓட்டுநா் கைது!

வீரகனூரில் கிராவல் மண் கடத்திய லாரியை போலீஸாா் பறிமுதல் செய்ததுடன், அதன் ஓட்டுநரை கைது செய்தனா். வீரகனூரில் வெள்ளிக்கிழமை இரவு காவல் ஆய்வாளா் ராணி தலைமையில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.... மேலும் பார்க்க

21.5 கிலோ கஞ்சா கடத்தல்: ஒடிஸாவை சோ்ந்த 2 போ் கைது

வாழப்பாடியில் 21.5 கிலோ கஞ்சாவை ரயிலில் கடத்திவந்து விற்பனை செய்ய முயன்ற ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த 2 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். ஒடிஸா மாநிலம், பலாங்கீா் மாவட்டம் தண்டமுண்டா பகுதியைச் சோ்... மேலும் பார்க்க