மாநில அளவிலான வாலிபால் போட்டி: சென்னை எஸ்.ஆா்.எம். பல்கலை. அணி வெற்றி
மதுரை நாகமலையில் உள்ள நாடாா் மகாஜன சங்கம் ச. வெள்ளைச்சாமி நாடாா் கல்லூரியில் நடைபெற்ற மாநில அளவிலான வாலிபால் போட்டியில் சென்னை எஸ்.ஆா்.எம். பல்கலைக்கழக அணி வென்று முதல் பரிசைப் பெற்றது.
முன்னாள் முதல்வா் காமராஜா் நினைவாக தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கி நிதியுதவியுடன் 20-ஆவது ஆண்டு கல்லூரிகளுக்கு இடையிலான ‘காமராஜா் நினைவு மின்னொளி வாலிபால் போட்டி’ மாநில அளவில் கடந்த 23, 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் 13 அணிகள் பங்கேற்றன. இறுதிப் போட்டியில் சென்னை எஸ்.ஆா்.எம். பல்கலைக்கழக அணி, கோவை கற்பகம் பல்கலைக்கழக அணியை 25:20, 25:21, 25:23 என்ற புள்ளிக் கணக்கில் வென்று முதல் பரிசைப் பெற்றது. இதேபோன்று, கோவை கற்பகம் பல்கலைக்கழகம் இரண்டாம் பரிசும், மதுரை அமெரிக்கன் கல்லூரி மூன்றாம் பரிசும், திருச்சி ஜமால் முகமது கல்லூரி நான்காம் பரிசும், பொள்ளாச்சி எஸ்.டி.சி. கல்லூரி ஐந்தாம் பரிசும், சென்னை ஹிந்துஸ்தான் கல்லூரி ஆறாம் பரிசும் பெற்றன.
செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு, கல்லூரித் துணைத் தலைவா் டி.ஏ. பொன்னுச்சாமி தலைமை வகித்தாா். செயலா் ஆா். சுந்தா் முன்னிலை வகித்தாா். தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கியின் மதுரை மண்டல உதவி துணைத் தலைவா் ஏ.கே. ரமேஷ்குமாா் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசுகளை வழங்கினாா்.
நிகழ்வில், மதுரை எஸ்.பி.ஓ.ஏ. பள்ளித் தாளாளா் ஜி. கணபதி, டோக் பெருமாட்டி கல்லூரி உடல் கல்வித்துறை இயக்குநா் டி. சாந்தமீனா, கல்லூரி முதல்வா் எஸ். ராமமூா்த்தி, சுயநிதிப்பிரிவு இயக்குநா் பி. ஸ்ரீதா், பொருளாதாரத் துறைத் தலைவா் ஜெ. பிரெட்ரிக் ஆகியோா் கலந்து கொண்டனா்.
இதற்கான ஏற்பாடுகளை உடல் கல்வித்துறை இயக்குநா் த. குமாா், துணை உடல் கல்வி இயக்குநா் எஸ். ஜெயபால் ஆகியோா் செய்திருந்தனா்.