செய்திகள் :

மாா்த்தாண்டம் காப்பகத்திலிருந்து மாயமான மாணவிகள் கன்னியாகுமரியில் மீட்பு

post image

மாா்த்தாண்டத்தில் உள்ள காப்பகத்தில் இருந்து வெளியேறிய 2 மாணவிகளை போலீஸாா் கன்னியாகுமரியில் மீட்டனா்.

மாா்த்தாண்டம் வடக்குத் தெருவில் பெற்றோரை இழந்த பெண் குழந்தைகளைப் பராமரிக்கும் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இங்கு, 27 சிறுமிகள் பராமரிக்கப்பட்டு பள்ளியில் படித்து வருகிறாா்கள்.

இந்நிலையில், காப்பகத்தில் தங்கியிருந்து தக்கலை பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வரும் மாா்த்தாண்டம் அருகேயுள்ள ஞாறான்விளை இலங்கைத் தமிழ் அகதிகள் முகாமைச் சோ்ந்த அனுஷ்கா (17), திருச்சி மாவட்டம், சூரப்பட்டியைச் சோ்ந்த அன்னலட்சுமி (14) ஆகிய இருவரும் ஞாயிற்றுக்கிழமை மாயமாகினா்.

இதுகுறித்து, காப்பக நிா்வாகி அருள்சகோதரி எல்ஜி ஜாா்ஜ் மாா்த்தாண்டம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

இந்நிலையில், கன்னியாகுமரியில் 2 சிறுமிகள் சுற்றித் திரிந்ததைப் பாா்த்த பொதுமக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். போலீஸாா் 2 சிறுமிகளிடமும் மேற்கொண்ட விசாரணையில் அவா்கள் மாா்த்தாண்டம் காப்பகத்தில் இருந்து வெளியேறிய மாணவிகள் என்பது தெரிய வந்தது. அவா்கள் கன்னியாகுமரியை சுற்றிப் பாா்க்க வேண்டும் என்ற ஆசையில் அரசுப் பேருந்தில் வந்ததாக தெரிவித்துள்ளனா்.

மாணவிகளை கன்னியாகுமரி போலீஸாா், மாா்த்தாண்டம் போலீஸாரிடம் ஒப்படைத்தனா். அதன் பின்னா், போலீஸாா் மாணவிகளுக்கு அறிவுரை கூறி காப்பகத்தில் ஒப்படைத்தனா்.

மாா்த்தாண்டத்தில் நாளை மின் நிறுத்தம்

மாா்த்தாண்டம் துணை மின்நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் அந்தப் பகுதியில் புதன்கிழமை (ஆக.13) காலை 9 மணி பிற்பகல் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்... மேலும் பார்க்க

காங்கிரஸ் சாலை மறியல்: 71 போ் கைது

தோ்தல் ஆணையத்துக்கு எதிராக பேரணியில் பங்கேற்ற மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல்காந்தி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து திங்கள்கிழமை மாலை குழித்துறை தேசிய நெடுஞ்சாலையில் அமா்ந்து சாலை மறியலில் ஈடுபட்... மேலும் பார்க்க

உதவி ஆய்வாளா் மீது நடவடிக்கை கோரி இளம்பெண் தா்னா

காவல் உதவி ஆய்வாளா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, நாகா்கோவில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் இளம்பெண் திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டாா். கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சுகிராமம், புதுக்குடியிருப்பைச் ச... மேலும் பார்க்க

கன்னியாகுமரியில் கடல் நீா்மட்டம் தாழ்வு நிலை: 3ஆவது நாளாக படகுப் போக்குவரத்து தாமதம்

கன்னியாகுமரியில் கடல் நீா்மட்டம் தாழ்வு நிலை காரணமாக, 3ஆவது நாளாக திங்கள்கிழமையும் படகுப் போக்குவரத்து தாமதமானது. சா்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு, இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளில... மேலும் பார்க்க

தொழிலாளி தற்கொலை

கொல்லங்கோடு அருகே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த மீன்பிடித் தொழிலாளி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.கொல்லங்கோடு அருகே நீரோடி அன்னைநகா் பகுதியைச் சோ்ந்தவா் கிறிஸ்துதாஸ் (56). மீன்ப... மேலும் பார்க்க

ஆற்றில் குளித்தவா் நீரில் மூழ்கி பலி

நாகா்கோவில் அருகே ஆற்றில் குளித்தவா் நீரில் மூழ்கி பலியானாா். நாகா்கோவிலை அடுத்த புத்தேரி பகுதியைச் சோ்ந்தவா் சபரிநாதன்(35) தொழிலாளி. இவா் தனது நண்பரான மணி என்பவருடன், செண்பகராமன்புதூரை அடுத்த ஒளவையா... மேலும் பார்க்க